Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது

Featured Replies

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.

அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.

செய்தியரங்கம்

http://www.bbc.co.uk/tamil/2115.ram

தமிழோசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பீப்பீசிக்கு வேறை வேலையில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பீப்பீசிக்கு வேறை வேலையில்லை?

லண்டனில் அவர்கள் மட்டும் ஸோகோ வைத்திருக்கலாம். மற்றவர்கள் தான் தேவதாசியோ தேவையில்லாத தாசியோ வைத்திருக்க கூடாது. சிங்கப்பூரிலும் தான் விபச்சாரம் சட்டப+ர்வமாக நடக்கிறது அதை இந்த பீபிசி காட்டலாமே? அதை விட்டு விட்டு இப்படியாக ஆண்டாண்டு காலமாக மக்கள் கட்டுக்கோப்பாக பின்பற்றும் கலாச்சாரத்தை தான் காட்டுகிறார்கள்.

  • தொடங்கியவர்

ஒரு வலைக்குறிப்பிலிருந்து:

தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது!

'தா தா தைதை.. தத்தை தை...தை... தித்தித்தை' என சொர்ணமால்யா தேவதாசியாக பெரியார் படத்தில் ஆடி இருப்பார். தேவதாசி முறை என்பது அபத்தம் என்கிறார்கள். இதை கொஞ்சம் அறிவுக் கண் கொண்டு பார்த்தால் அதில் மறை(த)ந்துள்ள உண்மைகள் விளங்கும்.

நான்முகன் வேதமும், நாரணன் பாதமும் அனைவருக்கும் பொது என்று பார்ப்பனர்கள் சொன்னால் எதோ பொல்லாததைச் சொல்வதாக பார்ப்பன நிந்தனை செய்கிறார்கள். அறிவிலிகளின் பேச்சு ஆதி காலம் தொட்டே இருக்கிறது. நாம் இந்த தேவதாசி முறையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்

நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட முறையே தேவதாசி என்பது. தேவதாசி என்பது ஒரு குலம். அதில் உள்ள பெண்கள் இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் தொண்டு செய்து வந்தார்கள். எது போன்ற தொண்டு? கோவில்களில் கலைநிகழ்ச்சி நடத்துதல், இறைவனை வேதம் ஓதி போற்றுபவர்களின் கால்களை அமுக்குதல், மற்றும் வேதம் ஓதுபவர்களின் மனைவிமார்கள் பிறந்தகத்துக்கு பிரசவத்துக்காக சென்ற நாட்களில் ஒரு மனைவி ஸ்தானத்தில் இருந்து 'திருப்தி' படுத்துதல் போன்ற புனிதமான செயல்களைச் செய்திருக்கிறார்கள். காமம் பாவம் அல்ல என்பதால் தான் சிவனால் எரிக்கப்பட்ட மன்மதன் உயிர்ப்பிக்கப்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சளி, மலம், சிறுநீர் போல, விந்தும் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். பெண்கள் பிரசவ காலத்தில் பிறந்தகத்துக்கு செல்லும் போது ஆண்கள் எல்லாரும் சாமியார்கள் ஆகிவிட முடியாது. அதனால் தான் பொதுப்படுத்தப்பட்ட தேவதாசி பெண்களை மேற்கண்ட தொழிலுக்கு வைத்து இருந்தார்கள்.

சமபந்தி போஜனம் என்கிறார்களே, இன்று அது போல் தேவதாசிகள் அனைத்து மேல் சாதியினருக்கும் பணிவிடை செய்ய வேண்டும் என்பதன் மூலம் சமத்துவம் அங்கே கடைபிடிக்கப்பட்டது என்பதை அறிவார்களா மூடர்க ?

இதெல்லாம் தெரியாத இராமசாமி நாயக்கன் 'உங்காத்து பெண்களை ஏன் தேவதாசி ஆக்கக்கூடாது?' என்ற குதர்க்கமான கேள்வி கேட்டு வழிவழிவந்த அந்த புனிதமான இறைவன் சேவையை நிறுத்திவிட்டார்.

அதன் விளைவு? சுத்தமில்லாத பெண்களுடன் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வேண்டாத வியாதிகளான கொனேரிய, சிலிபஸ் மற்றும் உயிர்கொல்லி நோயான எஸ்ட்ஸுக்கும் எல்லா சாதியினரும் பலியாக வேண்டி இருக்கிறது. பொதுவில் பார்த்து வந்த நிர்வாண நடனங்களை இப்பொழுது சிடி போட்டு மறைவாக பார்க்கும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

மீண்டும் சொல்கிறேன். காமம் தவறல்ல. முறையாக அனுபவிக்கப்பட வேண்டும். அதற்குத்தான் தேவதாசி என்ற முறையை நம் முன்னோர்கள் 'வைத்து' இருந்தார்கள். நண்பர்களே சிந்திப்பீர்.

http://www.tamilnadutalk.com/portal/index....mp;#entry130664

:P :P :P :P :P :P :P :P

இந்த ஈழவனுக்கு இப்பிடியான விசயங்கள் எல்லாம் எங்கிருந்து கொட்டுதோ தெரியலை.. ஒருவனுக்கு ஒருத்தி எண்டறாங்க.. தேவதாசி என்கிறாங்க.. ஒண்ணுமே புரியலை.. :lol:

Edited by sOliyAn

  • தொடங்கியவர்

சர்சைகளை உருவாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பது தான் என் பழக்கம் சோழியன் அங்கிள்:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

என்னாது இப்பவும் பெண் அடிமை தொடருதோ?

பெண்களின் அடிமைச்சின்னம் தாலி. அதைத் தூக்கியெறிந்தால் விடுதலை கிடைத்திடும் என்றல்லோ பல பெண் விடுதலைவாதிகள் கதைச்சவை. இதற்குப் பின்னும் தொடருது என்றால் நம்ம முடியல்லை.

வேதம் ஓதுபவனுக்கு கால் பிடிக்க தாசிகள் தேவையாமா? ஒண்டுமே புரியவில்லையே. மனைவிமார் பிள்ளைப்பெறும் காலத்தில் தாசிகள் தேவையாமா? இந்த வேதம் ஓதுபவனுக்கும் சேர்த்து வயல்காட்டில் உழைப்பவனை விட நாரிவலிக்குமாமா? அவர்கள் மனைவிமார் பிள்ளை பெறுவதில்லையாமா? இந்த வள்ளுவர் பத்தினி பெய்யென பெய்யும் மழை என்றார். ராமாயணம் ராமனை கற்பு கரசன் என்கின்றது. என்னொரு பக்கத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள்என்று கற்பு கரசி என்று கதைக்கப்படுகின்றது. இங்கே தேவதாசிகள் ஒளிக்கப்பட்டதால் தான் எயிட்ஸ் பெருகியது என்கிறார்கள்.

ஒன்றுமே புரியவில்லை. அப்படியானால்எயிட்சை மட்டுப்படுத்த தேவதாசிகளை மறுபடியும் பெருக்கப்போகறார்களா? கடவுளுக்கு பெண்ணை வித்து கடவுளுக்கு கலியாணம் செய்து பின் அவளை மொத்தமாக குத்தகைக்கெடுத்து கும்மாளமடித்து ஒரு கலாச்சார புனிதம் நூற்றாண்டு பெருமையை பறைசாற்றுகின்றது.

இந்தியாவில் அந்த இடம் எங்கே இருக்கிறது.

அந்த பக்கமே போகக்கூடாது. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.