Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தனது பிள்ளைகளை கொலை செய்த இலங்கையர்! குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் வரவழைத்துள்ளார்.

இதன் போது பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்கு பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, தனது குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அவர் தனது மகனையும், மகளையும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், அவர் மனச்சோர்வடைந்ததாகவும், அவர் ஒரு கடையில் வேலை செய்யும் போது வாடிக்கையாளர்கள் அவரை வருத்தப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

சட்டத்தரணி டங்கன் அட்கின்சன் கியூசி ஓல்ட் பெய்லி மனநல மருத்துவர்களிடம், பிரதிவாதி "ஒருவித மன நல கோளாறால் அவதிப்படுவதாக நம்புவதாகவும், அதுவே அவர் "தனது குழந்தைகளை கொல்ல வழிவகுத்துள்ளது" என்றும் கூறியுள்ளார்.

பிரதிவாதிக்கு முந்தையகால வன்முறை வரலாறு இல்லாத காரணத்தாலும் அவருக்கு மருத்துவ ஆலோசனை தேவை என்ற காரணத்தாலும் டிசம்பர் 10 வரை அவரது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு லண்டனில் உள்ள பாதுகாப்பான மனநல மையத்திற்கு சிகிச்சைகளுக்காக நித்தியகுமார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.tamilwin.com/uk/01/260448?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

November 8, 2020

%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%

 

தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளினதும் கழுத்தை கத்தியால் வெட்டிக்கொன்றுவிட்டு தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்று உயிர்தப்பிய இலங்கையை சேர்ந்த குடும்பஸ்தர் கூறியுள்ளார்.

லண்டனின் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட நடராஜா நித்தியகுமார், தனது நாலு வயது மற்றும் 19 மாதக் குழந்தைகளை கத்தியால் வெட்டி படுகொலை செய்தார். அப்போது குளியலறையிலிருந்த அவரது மனைவி வந்து பார்த்தபோது, பிள்ளைகளும் நித்தியகுமாரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டிருந்தனர்.

அவசர சிகிச்சைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நடராஜா நித்தியகுமாருக்கு எதிராக தற்போது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிரான விசாரணையின்போதே மேற்கண்டவாறு கொலைக்கான தனது காரணத்தை கூறியுள்ளார்.

தான் பணிபுரிந்த வேலையில் வாடிக்கையாளர்கள் ஏற்படுத்திய மனஅழுத்தமும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளார். அவரது மனைவி தனது சகோதரியுடன் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜா நித்தியகுமார் சம்பவம் இடம்பெற்ற கணத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் என்னசெய்வதென்றே தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார் என்பதும் மருத்துவரின் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நடராஜா நித்தியகுமார் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இதனை தெரிவித்தார்.

தீர்ப்பு வழங்கும் திகதியை எதிர்வரும் டிசெம்பர் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

எஸ்.பி.எஸ். தமிழ்

 

https://thinakkural.lk/article/87169

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொபைல் போன் எனும் அரக்கனின் கொடுமை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் அவசர  வாழ்க்கையும்,ஆடம்பர வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளால் வரும் வினைகள்..
அது மட்டுமல்லாமல் இப்போது வரும் தொலைக்காட்சி தொடர்களின் அக்கிரமங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எல்லாம் அவசர  வாழ்க்கையும்,ஆடம்பர வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளால் வரும் வினைகள்..
அது மட்டுமல்லாமல் இப்போது வரும் தொலைக்காட்சி தொடர்களின் அக்கிரமங்கள்.....

இங்கு மீடியா அவரை மட்டுமே குற்றம் சொல்லுவது பிழை .

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என நினைக்கும் தகப்பனா நீர்? இவரைவிட எவ்வளவோ ஊரில் கஷ்டப்படுகின்றர். இதுவா மன அழுத்தம் ? 

ஏன் இலங்கையர் என தலையங்கத்தில் உள்ளது? இவர் ஈழத்தமிழர் அல்லவா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

 

ஏன் இலங்கையர் என தலையங்கத்தில் உள்ளது? இவர் ஈழத்தமிழர் அல்லவா? 

இலங்கையரை இலங்கை என்றுதானே போடணும் உங்களின் காழ்ப்புணர்வு விளங்குது .

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியாது...ஆனால் மனைவிக்கு இதில் பங்கு இருக்க கூடும் ...கடைகளுக்கு மேல் உள்ள சின்ன பிளட்டில் 24 மணி மீறமும் அடைந்து கிடைக்க வேண்டும் என்றால் அந்த பெண்ணும் என்ன தான் செய்வார்?
 

On ‎08‎-‎11‎-‎2020 at 19:49, பெருமாள் said:

மொபைல் போன் எனும் அரக்கனின் கொடுமை .

எனக்கு இது விளங்கவில்லை ஏன் மொபைல் கேட்டா சண்டை நடந்தது :unsure:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, colomban said:

பிள்ளைகள் கஷ்டப்பட கூடாது என நினைக்கும் தகப்பனா நீர்? இவரைவிட எவ்வளவோ ஊரில் கஷ்டப்படுகின்றர். இதுவா மன அழுத்தம் ? 

சூரிய வெளிச்சம் குறைந்த  குளிர் நாடுகளில் நான்கு சுவருக்குள் உறவினர் சுமைகளையும் குடும்ப சுமைகளையும் வைத்து வாழ்க்கை நடத்தி பாருங்கள். அப்போது தெரியும் ஒரு இனம் புரியாத நெஞ்சழுத்தம்.

 

இருந்தாலும் அந்த மனிதன் செய்த செயல் மனிதத்தன்மை அற்ற செயல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு இது விளங்கவில்லை ஏன் மொபைல் கேட்டா சண்டை நடந்தது :unsure:

எப்பவுமே ஆண்கள் தான் குற்றவாளி அவரின் செயலை  நியாயபடுத்தவில்லை அவரின் வேண்டுகோள் என் நண்பனுக்கு நண்பன் இங்கு கதைக்க முடியாது .

39 minutes ago, குமாரசாமி said:

சூரிய வெளிச்சம் குறைந்த  குளிர் நாடுகளில் நான்கு சுவருக்குள் உறவினர் சுமைகளையும் குடும்ப சுமைகளையும் வைத்து வாழ்க்கை நடத்தி பாருங்கள். அப்போது தெரியும் ஒரு இனம் புரியாத நெஞ்சழுத்தம்.

விளங்காத கூட்டம் சொல்லி பலனில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.