Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யாதீர்கள் - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவத்துள்ளார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/124336/selvam.jpg

கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியக்கிடைத்துள்ளதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதிவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரவர் மத அனுஸ்டானங்களை மதித்து இறுதி சடங்குகள் இடம்பெற வேண்டும் என்பதில் எமக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

எனினும் கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்து வாழும் தலைமன்னாரில் அடக்கம் செய்யும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுக்கவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறான தீர்மானத்தினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான ஒரு தீர்மானத்தினை இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே எமது விருப்பமாகவும் உள்ளது.

கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் அவரவர் மத அனுஸ்டானங்களுடன் அடக்கம் செய்யவேண்டும் என்பதே எமது அவா என்பதுடன் இஸ்லாமியர்களின் சடலங்களை அவர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் செறிவற்ற பகுதிகளில் அடக்கம் செய்யவேண்டும் என்பதனையும் தெரிவித்துள்கொள்கின்றேன் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/94646

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் செறிந்து வாழும் இடங்கள் என்பது சரியானதா அல்லது தமிழர் வாழும் இடங்கள் என்பது சரியானதா...

 

சகிக்க முடியவில்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மட்டும் தான் இஸ்லாமியர்கள் குறித்தும்.. சிங்களவர்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துச் சொல்ல தயங்குகிறோமே தவிர அவர்கள் தமிழர்கள் குறித்து கருத்துச் சொல்ல தயங்குவதில்லை.

முஸ்லிம்களின் தொற்றுள்ள உடல்களை எரிப்பது சிறப்பு.. அவர்கள் மக்கள் என்றால் இதனை ஏற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால்.. முஸ்லிம் பகுதிகளில் உள்ள அவர்களின் புதைக்கும் இடங்களில் புதைக்க வேண்டுமே தவிர.. தெரிந்தெடுத்து தமிழர் பகுதிகளில் புதைக்க வேண்டிய அவசியமில்லை.

இது தமிழர்களை தெரிந்து தொற்றுக்குள்ளாகும் தீய நோக்கத்தில் செய்யப்படுகிறது. ஏலவே தமிழ் பகுதிகளில் நோயாளர் தனிமைப்படுத்தல் மையங்களை அமைத்து நோய்க்கிருமிகளை பல கிலோமீற்றர்களுக்கு பஸ்களில் இராணுவத்தைக் கொண்டு காவி வரும் மூடத்தனத்தை செய்யும் சொறீலங்கா சிங்கள அரசு.. இப்போ முஸ்லிம்களை சமாதானப்படுத்தி தமிழர்கள் மீது தீயதை விதைக்கவும் இச்சூழலைப் பயன்படுத்துகிறது.

இந்த கொடிய நோக்கங்களுக்கு எல்லாம் ஆமாப் போட்டு.. மக்கள் என்று பொதுப்படையாக கதைப்பதில் பயனில்லை. சிங்கள அரசே இனவாத அடிப்படையில் தான் செயற்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

நாங்கள் மட்டும் தான் இஸ்லாமியர்கள் குறித்தும்.. சிங்களவர்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துச் சொல்ல தயங்குகிறோமே தவிர அவர்கள் தமிழர்கள் குறித்து கருத்துச் சொல்ல தயங்குவதில்லை.

முஸ்லிம்களின் தொற்றுள்ள உடல்களை எரிப்பது சிறப்பு.. அவர்கள் மக்கள் என்றால் இதனை ஏற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால்.. முஸ்லிம் பகுதிகளில் உள்ள அவர்களின் புதைக்கும் இடங்களில் புதைக்க வேண்டுமே தவிர.. தெரிந்தெடுத்து தமிழர் பகுதிகளில் புதைக்க வேண்டிய அவசியமில்லை.

இது தமிழர்களை தெரிந்து தொற்றுக்குள்ளாகும் தீய நோக்கத்தில் செய்யப்படுகிறது. ஏலவே தமிழ் பகுதிகளில் நோயாளர் தனிமைப்படுத்தல் மையங்களை அமைத்து நோய்க்கிருமிகளை பல கிலோமீற்றர்களுக்கு பஸ்களில் இராணுவத்தைக் கொண்டு காவி வரும் மூடத்தனத்தை செய்யும் சொறீலங்கா சிங்கள அரசு.. இப்போ முஸ்லிம்களை சமாதானப்படுத்தி தமிழர்கள் மீது தீயதை விதைக்கவும் இச்சூழலைப் பயன்படுத்துகிறது.

இந்த கொடிய நோக்கங்களுக்கு எல்லாம் ஆமாப் போட்டு.. மக்கள் என்று பொதுப்படையாக கதைப்பதில் பயனில்லை. சிங்கள அரசே இனவாத அடிப்படையில் தான் செயற்படுகிறது. 

என்னுடைய கருத்து எரிப்பதா புதைப்பதா என்பது பற்றியதல்ல. உடலங்களைப் புதைப்பதாயின் மக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் செய்வதுதான் சிறப்பானது.  அவ்வாறு செய்யும்போது எந்தச் சமூகம் / இனம் என்ற கேள்வியே ஏற்படாது. 

மனிதர் இறந்த பின்னரும் Covid-19 பல மணித்தியாலங்கள் உடலங்களில் உயிர் வாழ்வதாக கட்டுரைகளில் வாசிக்கக் கிடைத்தது. 

உண்மையில், சமயம்/இனம் என்கின்ற வேறுபாடு இல்லாமல் உடலங்களை எரிப்பதற்குத்தான் எனது ஆதரவு 👍

7 hours ago, nedukkalapoovan said:

நாங்கள் மட்டும் தான் இஸ்லாமியர்கள் குறித்தும்.. சிங்களவர்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துச் சொல்ல தயங்குகிறோமே தவிர அவர்கள் தமிழர்கள் குறித்து கருத்துச் சொல்ல தயங்குவதில்லை.

முஸ்லிம்களின் தொற்றுள்ள உடல்களை எரிப்பது சிறப்பு.. அவர்கள் மக்கள் என்றால் இதனை ஏற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால்.. முஸ்லிம் பகுதிகளில் உள்ள அவர்களின் புதைக்கும் இடங்களில் புதைக்க வேண்டுமே தவிர.. தெரிந்தெடுத்து தமிழர் பகுதிகளில் புதைக்க வேண்டிய அவசியமில்லை.

இது தமிழர்களை தெரிந்து தொற்றுக்குள்ளாகும் தீய நோக்கத்தில் செய்யப்படுகிறது. ஏலவே தமிழ் பகுதிகளில் நோயாளர் தனிமைப்படுத்தல் மையங்களை அமைத்து நோய்க்கிருமிகளை பல கிலோமீற்றர்களுக்கு பஸ்களில் இராணுவத்தைக் கொண்டு காவி வரும் மூடத்தனத்தை செய்யும் சொறீலங்கா சிங்கள அரசு.. இப்போ முஸ்லிம்களை சமாதானப்படுத்தி தமிழர்கள் மீது தீயதை விதைக்கவும் இச்சூழலைப் பயன்படுத்துகிறது.

இந்த கொடிய நோக்கங்களுக்கு எல்லாம் ஆமாப் போட்டு.. மக்கள் என்று பொதுப்படையாக கதைப்பதில் பயனில்லை. சிங்கள அரசே இனவாத அடிப்படையில் தான் செயற்படுகிறது. 

இதைத்தான் முதலும் நான் எழுதி இருக்கிறேன். முஸ்லீம் இணையதளங்களை பார்த்தல் தமிழர்களைப்பற்றி கீழ்த்தரமாக எழுதுவதை காணலாம். நாம் அதட்கு பதில் வழங்கினால் அந்த பதில் அங்கு வராது.

WHO அறிவிப்பின்படி அடக்கம் செய்யலாம் அல்லது எரிக்கலாம். எப்படி இருந்தாலும் இங்கு ஏன்தமிழர் பகுதியில் புதைக்க வேண்டும்? வறண்ட பிரதேசம் எண்டு பார்க்கும்போது அம்பாந்தோட்டையும் வறண்ட பிரதேசம்தான். மன்னாரில் இப்போது மழை காலம் வெள்ளம் போடும்.

அப்படி புதைப்பதாயின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் தாராபுரம் , எருக்கலம்பிட்டி , முசலி போன்ற இடத்தில புதைக்கலாம். தலை மன்னர் என்பது தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடம். அங்கு குழாய் நீர் வசதி இல்லை. மக்கள் கிணற்று நீரையே பயன்படுத்த வேண்டும்.

இப்போது முஸ்லீம் இணையதளங்களில் தமிழர்கள்தான் புதைப்பதட்கு தடை என்ற ரீதியில் கருது எழுதுகிறார்கள். இப்போது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினையை உருவாக்க சிங்களம் தீட்டும் திட்ட்துக்கு முஸ்லிம்கள் ஆதரவாக எழுதுகிறார்கள்.

இருந்தாலும் தலை மன்னாரில் புதைப்பதட்கு தமிழர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.