Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை இலங்கை முழுமையாக நம்பாது – அமைச்சர் கம்மன்பில கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை இலங்கை முழுமையாக நம்பாது – அமைச்சர் கம்மன்பில கூறுகிறார்

 
udaya-800-696x348.png
 36 Views

“இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் இடைநடுவே கைவிடும் இந்தியா போன்ற நாடுகளைத் தொடர்ந்தும் நம்பி அவர்களிடம் தங்கியிருக்காது இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடனும் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடனும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.”

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் உதய கம்மன்பில. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர்வளங்கள், மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இதுவரை காலமாக இலங்கை அதன் அமைவிடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத காரணத்தால் சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் எம்மைவிடப் பலமான நாடுகளாக வளர்ச்சி கண்டுள்ளன. எனினும், இனியும் நாம் அதே தவறிழைத்துவிடக்கூடாது.

எனவே, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும், திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தியாவினூடாக மேற்கு – கிழக்கு நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கான எரிபொருள் சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் கனியவள தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எமது நாட்டைச் சுற்றி கனிய வளங்கள் உள்ளன. இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள எம்மால் முடியாது போய்விட்டது. இதில் பல இடங்களில் நாம் தவறிழைத்துவிட்டோம். குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நாம் இது குறித்த இணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் அவர்களின் நிதி பற்றாக்குறை காரணமாக இடைநடுவே விலகிக்கொண்டனர்.

எனவே, நாம் இந்தியாவை மாத்திரம் நம்பி அவர்களின் தங்கி இருக்காது, இடை நடுவே எம்மைக் கைவிட்டுச் செல்லாத பலமான நிறுவனங்களுடன் அந்த நிறுவனங்கள் சார்ந்த நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது” என்றார்

 

https://www.ilakku.org/இந்தியாவை-இலங்கை-முழுமைய/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

இதில் பல இடங்களில் நாம் தவறிழைத்துவிட்டோம். குறிப்பாக 201

நீங்கள் எப்ப தான் தவறு இழைக்கவில்லை ? உங்கன்ட மக்களையே ஒழுங்காக கவனிக்கவில்லை ....இதில சிங்கப்பூர் கனவு வேறு.....

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

நீங்கள் எப்ப தான் தவறு இழைக்கவில்லை ? உங்கன்ட மக்களையே ஒழுங்காக கவனிக்கவில்லை ....இதில சிங்கப்பூர் கனவு வேறு.....

வாங்கோ, எங்க கனநாளாய் ஆளக் காணேல்லை?

சீனாவை முழுமையாக நம்புகிறோம், இந்தியாவை பகுதியளவில் நம்புகிறோம். தமிழனே இந்தியாவை நம்பவில்லை , சிங்களவன் எப்படி நம்புவான்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

வாங்கோ, எங்க கனநாளாய் ஆளக் காணேல்லை?

வட்சப் குழுக்கள் கணக்கா வந்து எல்லாத்திலயும் நம்மட கருத்துக்களை எழுதி அவையள் என்னை திட்ட நான் திருப்பி திட்ட நேரம் போனது தெரியவில்லை.. ...அரிவரியில படிச்ச குறூப்,உயர்தரத்தில படிச்ச குறூப்,நடக்க போற குறூப்,பழைய மாணவர் சங்க ....வேலைத்தளம் இப்படி எக்கச்சக்கம்...😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.