Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: அங்கஜன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
2021 ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுமென தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான இராமநாதன் அங்கஜன். முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139892/afafaf.jpg

இலங்கையில் முன்பள்ளிக்கல்வி தொடர்பில் எந்தவொரு அரசும் இதுவரை கவனம் செலுத்தாத நிலையில் எமது அரசு முன்பள்ளிக் கல்வியை அரச கட்டமைப்புக்குள் உள்ளீர்த்து, நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரச நியமனங்களை வழங்குவதுடன் நிரந்தர சம்பளத்தையும் வழங்க வேண்டுமென அரசிடம் கோருகின்றேன்.

இதேவேளை நாட்டில் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2021ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் எட்டு பாடசாலைகளும்  கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு  பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும்.  அதேவேளை யாழ் தீவகப்பகுதி மற்றும் கிளிநொச்சியிலுள்ள கஷ்டப்பிரதேசங்களையும் கல்வி  அமைச்சு கவனத்தில் எடுக்க வேண்டும்.

அத்துடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளது. அத்துடன் பத்து நகர பல்கலைக்கழகங்களையும் அமைக்கவுள்ளது. இதில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும், இன்னொன்று  நுவரெலியா  மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை இலங்கை பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் யாழ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தைப்பெற்றுள்ளது. இதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் இராமநாதன் நுண்கலைக்கல்லூரி, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றை பீடங்களாக்க வேண்டுமென்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அதேபோன்று உடற்கல்வி பட்டப்படிப்பையும் ஆரம்பிக்க வேண்டுமெனவும் கோருகின்றேன். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நடத்தப்படும் எல்.பி.எல் .கிரிக்கெட் போட்டியில் ''ஜப்னா ஸ்ரான்லியன்ஸ்'' என்ற அணி உருவாக்கப்பட்டமைக்கும் அந்த அணியில்  வடக்கு மாகாண வீரர்கள்  உள்வாங்கப்பட்டமைக்கும் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இது வடக்கு இளைஞர்களை  ஊக்குவிக்கும் செயற்பாடு என்றார். 

 

 
  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதோடு நின்று விடாமல் செயலிலும் காட்டவேண்டும்.. முஸ்லிம் அரசியல் வாதிகள் எப்படி தங்கள் மக்கள் வாழும் பகுதிகளை அபிவிருத்தி செய்கிறார்கள் தம்மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுகொடுக்கிரார்கள் என்பதை அரசியல்தீர்வை பற்றி பேசியே காலத்தை கடத்தும் வீணாப்போன தமிழ் தேசிய கட்சிகள் புரிந்துகொண்டு தம் செயல் பாடுகளை மாற்றவேண்டும்..

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சொல்வதோடு நின்று விடாமல் செயலிலும் காட்டவேண்டும்.. முஸ்லிம் அரசியல் வாதிகள் எப்படி தங்கள் மக்கள் வாழும் பகுதிகளை அபிவிருத்தி செய்கிறார்கள் தம்மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுகொடுக்கிரார்கள் என்பதை அரசியல்தீர்வை பற்றி பேசியே காலத்தை கடத்தும் வீணாப்போன தமிழ் தேசிய கட்சிகள் புரிந்துகொண்டு தம் செயல் பாடுகளை மாற்றவேண்டும்..

அரசியல் தீர்வு பற்றி பேசினால் பரவாயில்லை. ஆனால் மக்களது அடிப்படை பிரச்சினை என்றால் என்ன என்றே தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்க வைத்திருப்பதே அவர்களது நோக்கம். யாராவது ஓரிருவர் மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யவந்தால் அவர்களை திட்டி தீர்ப்பதுதான் இவர்களது வேலை. இறுதியாக அரசியல் தீர்வும் இல்லை, அடிப்படை தேவையும் இல்லை. இடையில் வந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழ் பிரதேசங்களுக்கு வந்த எல்லா பணத்தையும் கொண்டுபோய் அவர்கள் பிரதேசங்களை மாபெரும் அபிவிருத்தி செய்துள்ளார்கள். இதுபற்றி கதைத்தால் இந்த தமிழ் அரசியல் வங்குரோத்துக்கள் ஒற்றுமை பற்றி ஒரு பாடமே எடுப்பார்கள். இனியாவது அங்கஜன், டக்ளஸ் , வியாழேந்திரன் போன்றோர் தமிழனின் பொருளாதார மேம்பாட்டுக்காக எதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.