Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131!

மதுரை ஏவி பாலம்

மதுரை ஏவி பாலம்

131 ஆண்டுகளைக் கடந்து தினமும் 3 லட்சம் வாகனங்களைத் தாங்கி நிற்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம்.

வைகை ஆற்றால் பிரிந்து கிடந்த மதுரை மாநகரின் வடகரை, தென்கரையை இணைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதுரையில் கட்டப்பட்ட முதல் பாலமான ஏவி பாலம் என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்கு வயது இன்று 131. இதை மதுரை மக்கள் மகிழ்சியாக கொண்டாடுகிறார்கள்.

ஆங்கிலேயரின் தொழில்நுட்ப அறிவும், தமிழர்களின் கட்டுமானகட்டுமானத் திறமையையும் பயன்படுத்தி தரமான பொருள்கள் சேர்த்து திடமானதாக 12 மீட்டர் அகலத்தில் 250 மீட்டர் நீளத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. 16 தூண்களில் ஆர்ச் வடிவில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் இன்றும் கம்பீரமாக உறுதியோடு பயனளித்து வருகிறது. இதை கட்டிய பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் பெயரிலயே பாலத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

பாலம் கட்டியபோது வைக்கப்பட்ட அடிக்கல்
 
பாலம் கட்டியபோது வைக்கப்பட்ட அடிக்கல்
இதன் ஆயுள் 100 ஆண்டுகள்தான் என்று சொல்லப்பட்ட நிலையில் 131 வயதிலும் உறுதித்தன்மையுடன் இயங்கி வருகிறது. இது உறுதியாக உள்ளதை வல்லுநர்கள் சோதனை செய்து உறுதி செய்துள்ளனர்.
 
மதுரை நகரை விரிவுபடுத்தும் நோக்கில் ஆங்கிலேய அதிகாரிகளால் 1886 டிசம்பர் 8-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 1889 டிசம்பர் 9-ல் இப்பாலம் திறக்கப்பட்டது. இந்தப் பாலம் அமைக்கப்பட்ட பின்புதான் மதுரை மாநகரமாக உருவானது.

அதன் பின் வடகரை - தென்கரைக்கு இடையே 8 பாலங்கள் அமைக்கப்பட்டாலும் ஏவி பாலத்துக்கு உள்ள கம்பீரம் இல்லை. மக்களோடு வாழக்கையோடு இணைந்த இந்தப் பாலம் திறக்கப்பட்ட நாளை மதுரையின் பல்வேறு அமைப்புகள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை ஏவி பாலம்
 
மதுரை ஏவி பாலம்

இன்று ஏவி பாலத்தின் பிறந்த நாளை கொண்டாடிய மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தினர், "ஏவி பாலத்தை புதுப்பித்து மதுரையின் பாரம்பர்ய சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 

https://www.vikatan.com/news/local-bodies/madurai-albert-victor-bridge-is-now-131-years-old

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை விமான நிலையம்தான் நினைவில் வந்து தொலையுது.... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர்களுக்கு சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

சென்னை விமான நிலையம்தான் நினைவில் வந்து தொலையுது.... 😂😂

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆங்கிலேயர்களுக்கு சமர்ப்பணம்.

100வருசத்துக்கு மேலையும் கம்பீரமாய் நிக்க  பொருத்து வீடுகள் மாதிரி பொருத்து பாலங்கள் எண்டு நினைச்சியளோ????🤣

தமிழ் இடங்களிலை இப்ப நிக்கிற வெள்ளத்துக்கு பொருத்து வீடுகளாய் இருந்தால் இப்ப வங்களாவிரிகுடாவுக்கு மிதந்து போயிருக்கும்.. 😂

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.