Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழிவாங்கல் கைதில் இருந்துவிடுதலை பெற்றேன்’-தவிசாளர் நிரோஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழிவாங்கல் கைதில் இருந்துவிடுதலை பெற்றேன்’-தவிசாளர் நிரோஷ்

 
1-57.jpg
 48 Views

அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ் இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

தன்னை பொலிஸார் கைது செய்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்டகாலமாக அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்டே இருக்கின்றனர். அப்படியிருக்க எமது சபையினால் முழுமையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நிதி வளம் போதாது என்பது சகலரும் அறிந்த விடயம்.

இந் நிலையில் எமது பகுதிகளுக்கு அற்பசொற்பமான அபிவிருத்திகளே தென்னிலங்கையுடன் ஒப்பிடும் போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்றன. வழங்குகின்ற அபிவிருத்திகளை நாட்டின் அதிகாரப்பகிர்வு வழிவகைகளில் ஒன்றாக அமைகின்ற உள்ளுராட்சி மன்றகளின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறாது நடைமுறைப்படுத்துங்கள் என்றே கேட்கின்றோம். உள்ளுராட்சி மன்றங்களைப் புறந்தள்ளி அரசியல் நோக்கங்களுக்காக மாத்திய அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படக்கூடாது.

இதனை நான் வலியுறுத்துகையில் ஜனநாயக ரீதியிலான அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில் என் மீது அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் கட்டவீழ்த்து விடப்படுகின்றன.

எமக்கு எதிராக அரச திணைக்களங்களை அழுத்தங்களைப் பிரயோகித்து திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. பொலிஸார் என்னைக் கைது அலுவலகம், நான் செல்லும் இடங்களுக்கு சென்றிருக்கின்றார்கள் என்றால் அது உயர்மட்ட அரசியல் அழுத்த்தின் விளைவே ஆகும். நான் பொலிஸார் பொற்ற வாக்குமூலங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்கினேன். கைது முயற்சி அரசியல்பழிவாங்கள் என்றபோதே நான் நீதிமன்றை நாடினேன்.  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் தொலைபேசிவாயிலாக அறிவித்தேன். அரசியல் பழிவாங்கல் இடம்பெறும் என்றால் பாதுகாப்புப் பெறுவது எனது உரிமை.

இந்நிலையில் நான் நீதிமன்றின் உதவியினை நாடி எனக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டுள்ளேன். நீதிமன்றம் எமது முன்பிணை மனுவை அராய்ந்து முன்பிணை அளித்துள்ளது.

நாட்டின் பிரஜை எனற வகையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும் எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கிற்கும் நீதிமன்றின் கட்டளைகளை மதிக்கின்றேன். நான் பழிவாங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்ற நிலையில் எந்நிலையிலும் சட்டம் ஒழுங்கிற்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்குவேன்.

இதேவேளை எனது கருத்திற்கு எதிராக திரண்ட மற்றும் ஒத்துழைத்த   தமிழ் அரசியல் தலைவர்கள், வழக்கினை முன்கொண்டு சென்ற சட்டத்தரணிகள், தகவல்களை வெளிப்படுத்திய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

https://www.ilakku.org/பழிவாங்கல்-கைதில்-இருந்/

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

ராசா! எதிரி சாதாரணப் பட்டவன் அல்ல, வேறொரு வழியில் உம்மை சிக்க வைக்காமல் உறங்க மாட்டான் எதற்கும் மேலதிகமான எச்சரிக்கையுடன் நடமாடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

'அரசியலுக்காக மக்களை மலினப்படுத்தாதீர்கள்': தவிசாளர் நிரோஷ்

அபிவிருத்தியைத் தடுப்பது எனதோ அல்லது பிரதேச சபையினதோ நோக்கம் கிடையாது. மாறாக அபிவிருத்தியை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவதே எமது நோக்கம். 

இந்நிலையில் மக்களை மடையர்கள் ஆக்காதீர்கள். அரசியலுக்காக மலினப்படுத்தாதீர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
spacer.png

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன் தவிசாளர் அபிவிருத்தியைத் தடுக்கின்றார் எனக் குற்றஞ்சாட்டி இன்று வியாழக்கிழமை (10.12.2020) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் அச்செழு அம்மன் வீதியைச் சேர்ந்த மக்கள் அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவ்வார்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் பிரதேச சபை வாசலில் மறித்திருந்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை தவிசாளர் சென்று சந்தித்து நிலைமையை புரிய வைத்திருந்தார்.  spacer.png

இதன்போது அபிவிருத்தியை தடுப்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. எமது சபைக்குப் பகிரப்பட்ட அதிகாரம் ஒன்றை மத்திய அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் அதனை சகித்துப்போக முடியாது. அதிகாரப்பகிர்வினை நாங்கள் வலியுறுத்துகையில் மத்திய அரசாங்கம் அபிவிருத்தி ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாக இருப்பின் உரிய முறைப்படியான அனுமதிகளை பெறுமாறே வலியுறுத்துகின்றோம். அவ் அனுமதிக்கு முறைப்படியான கடிதம் கிடைக்கப்பெற்றால் உடன் சபையைக்கூட்டி அனுமதி தீர்மானிக்கப்படும்.  உரிய அனுமதிகள் பெறப்படின் அபிவிருத்தியை மேற்கொண்டு முன்னெடுக்க நாமும்  ஒத்துழைப்போம். சாதாரணமாக நிர்வாக ரீதியில் முன்னெடுக்கபட வேண்டிய விடயங்களாக இவை இருந்தபோதும்  பகிரப்பட்ட  அதிகாரம் ஒன்றை அனுபவிப்பதற்கான மோதல்களே நடக்கின்றன. இவ்விடயத்தினை கிராமங்களில் சென்று பிழையாக அர்த்தப்படுத்தக்கூடாது. மக்களின் அரசியல் அபிலாசைகளை சிதறடிப்பதற்காக சாதிய அடிப்படையிலான கருத்துக்களைக்கூறி மக்களை பிழையாக வழி நடத்த எத்தனிக்கின்றனர்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/140574/4.jpg

முற்போக்காகவே வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சிந்திக்கின்றது. இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்ட ஏற்பாடு செய்த அரசியல்வாதிகளுக்கு சில விளக்கத்தினை நாம் கொடுக்கவேண்டியுள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டமாக வந்த பின்னர் எமது உண்மைகளைக் கண்டுகொண்டனர். மக்களை நாம் மதிக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

'அரசியலுக்காக மக்களை மலினப்படுத்தாதீர்கள்': தவிசாளர் நிரோஷ் | Virakesari.lk

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.