Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Annai Anai GIF - Annai Anai Priyan - Discover & Share GIFs

மேலுள்ள பதிவுக்கு பெருமாள் குத்தினதில ஒரு ஞாயம் உள்ள இருக்கு, இந்த ஜெகதா துரை குத்தினதுதான் யோசனையாய் இருக்கு......!   😂

ஜெகதா துரையின் கணவரை விரைவில் மீட்க வேண்டும்😂

3 hours ago, suvy said:

Annai Anai GIF - Annai Anai Priyan - Discover & Share GIFs

மேலுள்ள பதிவுக்கு பெருமாள் குத்தினதில ஒரு ஞாயம் உள்ள இருக்கு, இந்த ஜெகதா துரை குத்தினதுதான் யோசனையாய் இருக்கு......!   😂

உங்களுக்கு விளங்கிவிட்டது போல 😂😂

Edited by ஜெகதா துரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்.

நன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..

 

ஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே எடுத்துக்காட்டாக கருதப்படுவார்கள். வெளிஇடங்களில் அவர்களுடைய பழக்கவழக்கம் அந்த அளவுக்கு பாராட்டத்தக்கதாக இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் அவரது உண்மையான முகம் தெரியும். வீட்டில் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்வார்கள். எப்போதுமே நமது நல்லபழக்கவழக்கங்கள் அனைத்தும் நமது வீட்டில் இருந்தே தொடங்கப்படவேண்டும். வெளியேயும் அது தொடரவேண்டும்.

நன்றி என்கிற விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்வீர்கள். நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் நண்பர் அவரது வாகனத்தில் உங்களை அழைத்துச் செல்வார். அவருக்கு நீங்கள் நன்றி சொல்வீர்கள். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாதபோது உங்களோடு மருத்துவமனை வரை வந்தவருக்கும் நன்றி சொல்வீர்கள். அடை மழை. வெளியே சென்று உணவருந்த முடியாத சூழ்நிலை ஏற்படும்போது வீடு தேடிவந்து ஒரே ஒரு முறை உணவளித்தவருக்கும் நன்றி தெரிவிப்பீர்கள்.

 
நிச்சயமாக இவை அனைத்துமே நன்றி தெரிவிக்கவேண்டிய நல்ல விஷயங்கள்தான். வீட்டுக்கு வெளியே இப்படி உதவியவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லும் நீங்கள், வீட்டிற்குள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். வீட்டிற்குள், உங்களுடனே இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணை காலம் முழுக்க உங்களுக்கு எத்தனையோ உதவிகளை செய்துகொண்டே இருக்கிறார். ஒரு நாளாவது அவருக்கு நன்றி தெரிவித்திருப்பீர்களா?

இப்படி ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கும்போது, ‘கணவன்- மனைவிக்குள் அப்படி நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை!’ என்று நீங்கள் பதில்சொன்னால், அது தவறு. ஏன்என்றால் ஒவ்வொரு இரவும் உங்களுக்கு பின்னால் அவர் தூங்குகிறார். ஆனால்உங்களுக்கு முன்னாலே காலையில் எழுந்து சமைக்கிறார். உங்களுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்து உங்களை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். இப்படிப்பட்ட மனைவிக்கு நன்றி சொல்வதுதானே கணவருக்கு அழகு! நன்றியை கணவரிடம் கேட்டு வாங்கும் மன நிலையில் மனைவி இல்லாவிட்டாலும், அவரும் நன்றியை எதிர்பார்ப்பார் என்ற நிஜத்தை புரிந்துகொள்ளுங்கள்.

அதுபோல் மனைவியும் கணவருக்கு நன்றி சொல்லலாம்! நன்றி என்பது வீட்டிற்குள் அதிகமாக புழங்கப்பட வேண்டிய வார்த்தை! சொல்லிலும், செயலிலும் நன்றி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறையும். அம்மாவும், அப்பாவும் ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டினால், அதை கேட்டு வளரும் அவர்களது குழந்தைகளிடமும் நன்றி பாராட்டும் எண்ணம் உருவாகும். அவர்கள் வீட்டிற்குள் நன்றி பாராட்ட ஆரம்பித்து அதை வெளியேயும் தொடருவார்கள். அதன் மூலம் அவர்கள் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதராவார்கள்.

 

https://www.maalaimalar.com/health/womensafety/2020/12/19124459/2180096/tamil-news-husband-thanks-to-wife.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் மனுசனாப் பிறந்த எல்லாருக்கும் வரும். அளவு தான் மாறுபடும். மனைவிக்கு கோபம் வர பல காரணங்கள் இருக்கும். அதில் எங்களால் வரும் காரணங்களை தவிர்த்தால்.. எங்களால் கோபம் வராது.

தவிர்க்க முடியாத காரணங்களால் கோபம் வந்தால் கோபம் வர விடுவது நல்லது. கோபம் உச்சத்துக்குப் போய் அவங்க கோபத்தை அவங்களே தனித்துக் கொள்வார்கள். நீங்களா இடையில் குறுக்கிடாது இருந்தால் அல்லது கோபத்தை தனிக்க என்று போய் தூண்டாமல் இருந்தாலே போதும்.. கோபம் தனியும்.

எப்பவும் மனைவியின் அழகைப் போல்.. கோபத்தை ரசிக்கத் தெரிந்திருந்தால்.. பிரச்சனையே இல்லை. எந்தக் கோபத்தையும் ஒரு அரவணைப்பு.. ஒரு முத்தம் சுத்தமாக கட்டுப்படுத்தும். என்ன மனைவியிடம் ஈகோ பார்த்தால்.. கோபம் தனியாது...! கோபப்படும் நிலையில் மனைவியை.. உங்கள் தாய் நிலையில் வைத்து ஒரு கணம் சிந்தியுங்கள்.... அவளின் கோபத்தை தாண்டி.. அவள் மீது அன்பு தானே வழியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.