Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை

ஜூன் 15, 2007

கொழும்பு: கொழும்பில் மாபெரும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.

கிழக்கு மாவட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 1,000 கிலோ வெடிமருந்துகளுடன் கொழும்பை நிலைகுலைய வைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ரத்தக் களறி ஏற்படுத்த திட்மிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் ஊடுருவி வரும் புலிகள் விடுதிகளிலும் புற நகர்ப் பகுதிகளில் பிற இடங்களிலும் தங்கியுள்ளதாகவும், கொரில்லா தாக்குதலுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. வட மேற்குப் பகுதியில் 1,000 கிலோ சி-4 ரக வெடிபொருட்களுடன் லாரி பிடிபட்டதால் புலிகளின் தாக்குதல் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த லாரி பிடிபடாமல் போயிருந்தால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாபெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த லாரியின் டிரைவரும் கிளீனரும் கடந்த 2 மாதங்களாக கொழும்பில் ஒரு பட்ஜெட் லாட்ஜில் தான் தங்கியிருந்துள்ளனர். இதனால் தான் லாட்ஜுகளில் தங்கியிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அதை உலக சமுதாயமும் அரசியல்வாதிகளும் பிரச்சனையாக்கிவிட்டன.

பொது மக்களை புலிகள் இது போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்துவதால் விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் சோதனைக்குள்ளாவது இயற்கை தான் என அந்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தக் கட்டுரையின் உண்மையான நோக்கம் வெளியாகியுள்ளது. புலிகள் பெயரைச் சொல்லி, தமிழர்களை கொழும்பை விட்டு வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு தோல்வி கிடைத்ததால் நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு மருந்தாக இந்தக் கட்டுரையை அரசு வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/15/lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி உந்த 1000 கிலோ வெடிமருந்தையும் கொழும்பில இருந்து தமிழ் ஆட்களைத் துரத்துறதுக்காக பொலிஸ் ஒரு லொறிக்குள்ள வச்சுப்போட்டு எடுத்தது எண்டும் கதைக்கினம். அதுபற்றி என்ன சொல்லுறியள்

படம் பார்த்து கதை சொல் என்று சின்ன வயதில் படித்த ஞாபகம். இப்ப வேற மாதிரி படிப்பிக்கின்றார்கள் சிங்கள அரசியல் வாதிகள்..........

ம் உளவுப்பிரிவினர் நல்லாத்தான் மோப்பம் பிடிக்கினம்.

இதுக்குத்தான் அண்மையில் ஒரு புத்தகத்தில் வாசித்த ஞாபகம்

மீன் விற்கும் பெண்கள் அவர்களுடைய வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை இருட்டி விட்டது. அவர்கள் வழியில் தென்பட்ட ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார்கள். அது பூக்கள் விற்கும் பெண்ணின் வீடு. அங்கு பூவாசம்தான் நிறைந்து இருந்தது. இந்த மீனவப்பெண்களிற்கு மீன் வாசம் இல்லாமல் உறக்கம் வரவில்லை. பூவாசம் அவர்களிற்கு வாந்தி வருமளவிற்கு அருவருப்பாக இருந்தது. புரண்டு புரண்டு படுத்துப்பார்த்தார்கள். ம்கூம் உறக்கம் தொலைவில் இருந்து நிலாச்சோறு உண்டுகொண்டிருந்தது. இறுதியி;ல் அவர்கள் மீன் பெட்டியை அருகில் எடுத்து வைத்துக்கொண்டு உறங்கினார்கள். உறக்கமும் அணைத்துக்கொண்டது. மலர் வாசம் பிடிக்காமல் போனது ஏன். ?, அவர்களிற்கு அது அறியவில்லை. அதைப்Nபுhலத்தான் இலங்கை உளவுப்பிரிவும் சில வாசம் மட்டும்தான் அவர்களிற்கு தெரியும் அதை வைத்து பல கதைகள் சொல்லுவார்கள்.

தற்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருக்கும் இலங்கை அரசு அதனை திசை திருப்ப தாங்களாகவே சில தாக்குதல்களை செய்து அதை புலிகள் மேல் போடுவதற்கு இந்த செய்தி ஒரு முன் நடவடிக்கையாக இருக்கலாம். கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய நடவடிக்கை சிங்களத் தரப்பு எதிர்பாராதளவு எதிர்ப்பை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்பட்டுள்ளதை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவர்கள் இருப்பதால் அதற்காக எது வேண்டுமானாலும் இவர்கள் செய்ய முற்படக் கூடும்.

அது சரி உந்த 1000 கிலோ வெடிமருந்தையும் கொழும்பில இருந்து தமிழ் ஆட்களைத் துரத்துறதுக்காக பொலிஸ் ஒரு லொறிக்குள்ள வச்சுப்போட்டு எடுத்தது எண்டும் கதைக்கினம். அதுபற்றி என்ன சொல்லுறியள்

புலிகள் 1000 கிலோ வெடிமருந்தை சாதாரண லொறியில் வைத்து அனுப்பியதாகக் கூறியது அந்தக் கருத்தையே பலமற்றதாக்கிவிட்டது.

காதில் பூ வைத்ததாகக் கூறியிருந்தால் எல்லோரும் நம்பியிருப்பார்கள். ஆனால் பூந்தோட்டத்தையல்லவா வைத்ததாகக் கூறியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் எப்போதுமே மிகப் பயங்கரமான தாக்குதல் நடக்கலாம் என்பது 83 இலிருந்தே தெரிந்த விடயம்தானே. இப்போது ஏன் புதுச் செய்தியாக வந்துள்ளது?

வடக்கில் நடந்த/நடக்கப் போகவுள்ள தாக்குதல்களைவிட பெரிதாக கொழும்பில் ஒன்றும் நடக்காது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.