Jump to content

செய்தித்தொகுப்பு : கொவிட் வக்சீன்கள் எப்படி கணக்காய்வு/மதிப்பீடு செய்யப்படும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பு துறப்பு

இது சுய ஆக்கம் அல்ல, கீழே கொடுக்கபட்டுள்ள ஆங்கில செய்தி மூலங்களில் உள்ள செய்திகளின் தொகுப்பே.

 

கொவிட் தடுப்பூசிகள் மூன்று மேற்கு நாடுகளில் பாவனைக்கு வந்தது தெரிந்ததே.

இவை உண்மையில் குடிசனங்களுக்கு செலுத்த பட்டபின் அவை எதிர்பார்த்த நோயெதிர்ப்பை தருகிறனவா? என்பதை கணக்காய்வு (audit) செய்வது எப்படி என்பது பற்றிய செய்தியை கார்டியன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதற்கு முன் இந்த தடுப்பூசிகள் பற்றி மேலோட்டமாக பார்போம்

பைசர்/மொடேர்னா

பைசர்/மொடோர்னா வக்சீன்கள் mRNA தொழில் நுட்பத்தில் தயாரானவை. இது இதுவரை முயற்சிக்காத அதி புதிய முறை இது. இந்த முறையில் ஒரு மரபணுவியல் செய்தி ஊசி மூலம் எமது உடலில் செலுத்தபடும். இந்த செய்தியானது, எமது உடலில் உள்ள கலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து,  அந்த கலங்கள் நோயெதிர்ப்பை எமது உடலில் ஏற்படுத்தும்.

இந்த முறையின் பரீட்சார்த்த்தத்தின் போது 94-95% சதவீதம் ஆட்களுக்கு நோயெதிர்ப்பு ஏற்பட்டதாக அறியப்பட்டது.

பைசர் வைரஸ் அதி குறைந்த வெப்ப நிலையிலும், மொர்டேர்னா அதை விட கொஞ்சம் குறைந்த வெப்ப நிலையிலும் பேணப்பட வேண்டும்.

ஒன்க்ஸ்போர்ட்/அஸ்டிரா செனக்கா வக்சீன்

இது வெக்டர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இது இப்போ நடைமுறையில் உள்ள ஏனைய சில வக்சீன்களும் தயாரகும் முறையாகும்.

இதில் சிம்பான்சியில் சளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரசை எடுத்து அதை மரபணு மாற்றத்துக்கு உள்ளாக்கி, அந்த வலுவற்ற வைரசை எமது உடலில் செலுத்தி அதன் மூலம் நோயெதிர்ப்பு எம் உடலில் தூண்டபடுகிறது.

பரீட்சார்த்த காலத்தில் இது ரெண்டு முழு டோஸ் கொடுத்தவர்களிடம் 62% சதவீதம் நோயெதிர்ப்பையும், (தவறுதலாக) ஒரு முழு டோசும் ஒரு அரை டோசும் கொடுத்தவர்களிடம் 90% பேரில் நோயெதிர்ப்பையும் உண்டாக்கியது.

இது சாதாரண குளிரூட்டி வெப்ப நிலையில் பேணப்படலாம்.

வக்சீன்கள் வேலை செய்கிறனவா?

இவை உண்மையில் நிஜத்தில் எவ்வளவு தூரம் பாதுகாப்பு அளிப்பன என்பது இப்போது உடனடியாக தெரியவராது என்கிறது கார்டியன் செய்தி .

யூகேயில் லொக் டவுனும் வந்துள்ளதால் தொற்று குறைவது வக்சீனாலா அல்லது லொக் டவுனாலா என்ற குழப்பமும் வரும்.

February மாதமளவில் தொற்று கூடினாலும், குறைந்தாலும் அது வக்சீனாலா அல்லது வேறு காரணிகளாலா என்பதை தனியே தொற்று எண்ணிகையை வைத்து மட்டும் சொல்ல முடியாது.

ஆனால் இதற்கும் ஒரு கட்டுப்பாடு பரிசோதனையை ஏற்படுத்தி உள்ளார்கள் என்கிறது கார்டியன்.

ஆஸ்பத்திரிகளில் இப்போ நியுமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று எண்ணிக்கையையும், பெப்ரவரியில் நியூமோனியாவுடன் சேர்பவர்களில் கொவிட் தொற்று உடையவர்களின் எண்ணிகையையும் ஒப்பிட்டு வக்சீன்கள் வேலை செய்கிறனவா என ஒரு முடிவுக்கு வர முடியுமாம்.

அதே சமயம், தென்னாபிரிக்காவில் உருவாகியுள்ள வைரசின் விகாரிக்கு எதிராக இப்போ உள்ள 3 வக்சீனும் செயல்படுமா? என்ன சதவிகிதத்தில் செயல்படும் என்பது பற்றியும் கேள்விகளை நிபுணர்கள் கேட்கிறார்கள்.

தேவைபடின் தமது வக்சீன்களை விரைவாக விகாரிகளை எதிர்கொள்ளும் படி மாற்ற முடியும் என பைசர் கூறியுள்ளது. அதே தொழில்நுட்பத்தில் தயாரான வக்சீன் என்பதால் இது மொடர்னாவுக்கும் பொருந்தகூடும். 

முடிவாக,

வக்சீன்கள் தொழில்படுகிறதா இல்லையா என்பதை நாம் யாரும் இப்போது கூற முடியாது ஆனால் அதை கணக்காய்வு செய்யும் பணிகளும் முடுக்கி விடப்படுள்ளன.

குரல்தரவல்ல அமைப்புகள் இதை பற்றி ஒரு முடிவை சொல்லும் போது யாழின் கொரோனா பதிவுகள் பக்கத்தில் இவை பதியப்படும்.

https://www.theguardian.com/society/2021/jan/03/oxford-covid-jab-delivered-this-week-when-vaccines-results

https://www.dailymail.co.uk/news/article-9110847/Matt-Hancock-worried-super-infectious-South-African-coronavirus-mutation.html

https://www.express.co.uk/life-style/health/1379431/covid-vaccine-latest-south-african-strain-vaccine-effectiveness
 

https://www.smh.com.au/world/europe/biontech-says-its-highly-likely-its-covid-19-vaccine-can-handle-mutation-20201223-p56poi.html
 

https://www.euronews.com/2020/12/31/what-are-the-differences-between-the-three-main-covid-19-vaccines 
 

Link to comment
Share on other sites

  • goshan_che changed the title to செய்தித்தொகுப்பு : கொவிட் வக்சீன்கள் எப்படி கணக்காய்வு/மதிப்பீடு செய்யப்படும்?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.