Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அடாவடித்தனமாக அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் - தமிழக முதல்வர் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டமைக்கு தமிழக முதல்வர் எடிப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான தகவலை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதக செயலுக்கும் அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/265981?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கடயலில்  விக்கியரை தவிர மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு பொது போராட்டம் என்பதுக்குள் அடங்கினம் போல .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, பெருமாள் said:

எங்கடயலில்  விக்கியரை தவிர மற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு பொது போராட்டம் என்பதுக்குள் அடங்கினம் போல .

உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள் போல் இருக்கின்றது. 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள் போல் இருக்கின்றது. 

அரசை எதிர்த்து இந்தவிடயத்துக்கு கதைத்தால் கொழும்புவீடு பறிபோயிடும் மற்றவருக்கு ஜனாதிபதி சட்டத்தரணி என்ற பெயர் காணாமல் போயிடும் அரசுக்கு எதிரா வாயை துறக்காமல் தமிழ்ச்சனத்தையும்  பேய்க்காட்ட  அனைத்து  கட்சியும் ஒற்றுமையாய் கர்த்தால் என்ற வித்தை .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் போராட்ட நினைவுகளை அகற்றிவிட முடியாது – டீ.டீ.வி.தினகரன்

220Views

images-_1_.jpg?fit=286%2C176&ssl=1

தமிழ் மக்களின் எண்ணங்களில் உள்ள போராட்ட நினைவுகளை இலகுவில் அகற்றி விட முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடும் கண்டனத்திற்குரியது.

 

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல.

தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்

.https://newuthayan.com/தமிழ்-மக்களின்-போராட்ட-ந/

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் மக்கள் சாகும் போது வேடிக்கை பார்த்தவர்கள்  தூபி இடிக்கப்பட்ட போது குரல் கொடுக்கினம் ....வேடிக்கையாய் இருக்கின்றது  

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் தேர்தல் வருகின்றது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.