Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரிந்த மனித உரிமை ஆணையாளர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்த மனித உரிமை ஆணையாளர்?

UN rights chief Michelle Bachelet urges states to repatriate families of  ISIS fighters | The National

ஐ நா மனித உரிமை ஆணையாளர் கடும் நிலைப்பாட்டினை எடுக்க, இந்த முறையும் போய், சுத்தி விட்டு வரலாம் என்று நினைத்திருந்த, கொழும்பு, வாரிச்  சுருட்டிக் கொண்டு எழும்பி இருக்கிறது.

சுஜ தனிமைப்படுத்தலில் உள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ், பெரிதா எதுவுமே பேசாத நிலையில், படைத்துறை பின்புலம் கொண்ட வெளிவிவகார செயலாளர், ராஜதந்திர எல்லைக்கோட்டினை தாண்டி, அமெரிக்காவை, முதலில் உங்கள் உள்வீட்டு பிரச்சனைகளை முடித்து விட்டு, எங்களிடம் வாருங்கள் என்று சொன்னது, பழுத்த ராஜதந்திரிகளை கவலை கொள்ள வைத்துள்ளது.

கொழும்பு அரச தலைமை என்ன செய்வது என்று, தலையை உடைக்க, சில்லறை அல்லக்கைகள் ஆன, ரம்புக்வல, ஆனந்த வீரசேகர வாயை திறந்து, குப்பைகளை கொட்டுகின்றனர்.

வீரவன்ச, கம்மன்பில போன்றோர் இன்னும் களத்துக்கு வரவில்லை. அநேகமாக, வீரவன்ச, வழக்கம் போல லெமன் பஃவ் விசுக்கோத்துடன் ஐ நா முன்னாள் உண்ணாவிரதம் இருக்க கிளம்பக்கூடும்.

யார் இந்த ஐநா செயலாளர்?

இவர் தென் அமெரிக்க சிலி நாட்டினை சேர்ந்தவர். 1973ம் ஆண்டில் நடந்த அமெரிக்க ஆதரவு புரட்சியினை தொடர்ந்து, பதவிக்கு வந்த இராணுவ அரசு, விமானப்படையின் தளபதியாகவும், புரட்சிக்கு ஆதரவளிக்க மறுத்த இவரது தந்தையினை கைது செய்து, சித்திரவதை செய்து கொன்றது.

உடல் கூட கொடுக்கப்படவில்லை. துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த, இளம் பெண்ணான, இவரையும், இவர் தாயையும் கூட கைது செய்து, தலையில் கறுத்த பையினை கட்டி அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்கள்.

இவர், 'கிரில்' எனும் கொடும் மின்சார அதிர்வு கொடுக்கும் சித்திரவதை கூடத்தில் இருந்து தப்பினாலும், தாயார் தப்பவில்லை.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர், அடுத்த வருடமே ஆஸ்திரேலியா தப்பி சென்றார்.

1979ம் ஆண்டு திரும்பி வந்த அவர் மேலே மக்களுக்கு பெரும் அனுதாபம் இருந்தது. அரசியலுக்கு வந்த அவர், 2006ம் ஆண்டில் சிலி நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி ஆனார். 

மீண்டும் 2010 லும், பின்னர் 2014லும் தெரிவான அவர், சிலியில் மனித உரிமைகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

69 வயதான ஆணையாளர், 2018ம் ஆண்டே ஜனாதிபதி பதவியில் இருந்து இளைப்பாறினார்.

சித்திரவதை, மனித உரிமைகள், இராணுவ ஆட்டிசியாளர்கள் அநியாய வன்முறைகளை, தானே அனுபவித்த, ஆணையாளர், ஐ நா மனித உரிமை ஆணையாளராக வந்தமை மிகவும் சிறப்பானது.

மேலும், அவர் சிலி நாட்டின் ஜனாதிபதியாக மூன்று முறை பதிவு வகித்ததாலும், மனித உரிமை ஆர்வமும் உள்ளவராதலால், பல நாட்டின் அரசு தலைமைகளுடன் அறிமுகமாகி உள்ளார்.

இலங்கை தொடர்பில், இவர் இப்போது, எடுத்திருக்கும் நிலைப்பாடே, கொழும்பில் பெரிய சூறாவளியின் உருவாக்கி உள்ளது. யுத்த விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களை கொண்ட அரசுக்கு குடைச்சல் கொடுத்துள்ளது.

கொழும்பின் கிழக்கு துறைமுகத்தினை இந்தியா கேட்பது போல கொடுத்தாவது, அமெரிக்கா MCC ஒப்பந்தத்தில் கையெழுத்தினை போட்டாவது, தப்பிக்க முடியுமா என்று சிந்திக்கிறது.

கொழும்பு அவசரமாக டெல்லிக்கு தூது அனுப்பி உள்ளது. வழக்கம் போல, இந்தியா தனது நலன் மட்டும் பார்த்து, தவிச்ச முயல் அடிக்குமா என்று தெரியவில்லை. 

        

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, பல தகவல்களை... திரட்டித் தந்தமைக்கு, நன்றி. 👍 :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இலங்கை தொடர்பில், இவர் இப்போது, எடுத்திருக்கும் நிலைப்பாடே, கொழும்பில் பெரிய சூறாவளியின் உருவாக்கி உள்ளது. யுத்த விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களை கொண்ட அரசுக்கு குடைச்சல் கொடுத்துள்ளது.

2015 இல் மகிந்த வென்றிருந்தால் இதே சூறாவழி அடித்திருக்கும்.

தமிழினம் காப்பாற்றிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி வாலாக்களுக்கு us மறைமுக எச்சரிக்கையாக back off என்று சொல்லி விட்டது  என்றே us இன் எச்சரிக்கை தொனியான அறிக்கை இருப்பதாக தெரிகிறது. இது எமக்காக அல்ல.

2012 இல் கிந்தியா முற்றாக எதிர்த்த போது, US நிர்க்ககத்தில் இருந்த போது முக்கியமானவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட அந்த துறைகளிலேயே பதவிகளில் மீண்டும் வந்து உள்ளார்கள். 

கிந்தியா 2010, 2012 இல் சொன்னது, சர்வதேச விசாரணை என்பது இருக்கும் விரோதம், குரோதம், ரணத்தை கூடி விடும், நேரம் கொடுத்தால்  இவைகள் தணியும் என்று.  இது கிந்தியாவின் south block இன் பேய்க்காட்டல் என்று US இற்கு  நன்றாக தெரியும்.   
 

 

15 hours ago, Nathamuni said:

கொழும்பு அவசரமாக டெல்லிக்கு தூது அனுப்பி உள்ளது. வழக்கம் போல, இந்தியா தனது நலன் மட்டும் பார்த்து, தவிச்ச முயல் அடிக்குமா என்று தெரியவில்லை. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.