Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

spacer.png

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் நேற்று (பிப்ரவரி 15) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 19 ஒவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது.

 

இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் 2 ரன்களும், லாரன்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்

இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் சாய, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 

https://minnambalam.com/k/2021/02/16/17

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

Aswin player of the match.

என்ன செய்வது தமிழன் என்ட ஒரு ஈர்ப்பு.வாழ்த்துக்கள் அஸ்வின்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – புலம்பிய ஜோ ரூட்

 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து இந்திய அணியுடனான தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது : இந்த வெற்றிக்கு இந்திய அணி முழு தகுதியான அணி ஆகும். பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலுமே அவர்கள் எங்களை விட சிறப்பாகவே செயல்பட்டனர். இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த இந்த தோல்வி எங்கள் அணிக்கு கிடைத்த நல்லதொரு பாடம். 

இதுபோன்ற ஆடுகளங்களில் நமக்கு அதிகமான விடயங்கள் கற்றுக் கொள்ள கிடைக்கும். மேலும் எங்களது அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஒவ்வொரு ஓவரிலும் இந்திய அணியின் பவுலர்கள் தொல்லை கொடுக்கும் விதத்தில் பந்து வீசினர். அந்த விடயத்தை நாங்கள் இந்திய அணியிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம். இந்த போட்டியின் முதல் நாளில் எங்களது கையே ஓங்கி இருந்தது.

ஆனால் இரண்டாவது நாளில் பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இல்லை. இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்கள் அணியை வீழ்த்திவிட்டனர். 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளதால் அடுத்த போட்டிக்கான ஆவல் அதிகரித்துள்ளது, அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறோம். மேலும் அடுத்த போட்டியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் களமிறங்குவது குறித்து ஆலோசிப்போம். தவறுகள் எங்கே நடந்தது என்பதை கண்டறிந்து விரைவில் அதை சரி செய்து கொள்வோம் என்று கூறினார்.

https://crictamil.in/joe-root-talks-about-lose-vs-ind-in-second-test/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.