Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியனிடம் 8 பொலிஸ் நிலைய பொலிஸார் வாக்குமூலம் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வட கிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று (19.02.2021) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

152404019_760340104593106_18931510915950

வடக்கில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கிழக்கில் வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து வருகைதந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா,பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா,கொரனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.

 

152583401_235722538229985_49269007709639

இன்று முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையானது இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

சாணக்கியனிடம் 8 பொலிஸ் நிலைய பொலிஸார் வாக்குமூலம் பதிவு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

P2P போராட்டம் – சாணக்கியன்,செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலரிடம் காவல்துறையினர் வாக்கு மூலம்

 
1-173-696x522.jpg
 27 Views

ஆறு காவல்துறை நிலையங்களைச் சோ்ந்த  காவல்துறை  உத்தியோகத்தர்கள் இன்று சாணக்கியனை அவரது அலுவலகத்தில் சுற்றிவளைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றமை குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

 

மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, மாங்குளம், வாழைச்சேனை, சம்பாந்துறை ஆகிய காவல்  நிலையங்களைச் சோ்ந்த காவல்துறையினரே சாணக்கியன் அலுவலகத்திற்குச் சென்று குறித்த போராட்டம் தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், எமது மக்களுக்கான போராட்டத்தின் தார்ப்பரியத்தை எடுத்துரைத்து அவர்களை அனுப்பிவைத்ததாக சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

அதே நேரம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் பருத்தித்துறை காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

May be an image of 1 person, standing and sitting

யாழ்.மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த காவல்துறையினர் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர், அதன்போது சிங்கள மொழியில் வாக்குமூலத்தை காவல்துறையினர்  பதிவு செய்த போது “ எனக்கு வாசித்து புரிந்து கொள்ளமுடியாத மொழியில் பதிவு செய்யப்படும் வாக்குமூலத்தில் கையொப்பம் இட மாட்டேன் “ என முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கூறியமையை அடுத்து அவரது வாக்கு மூலத்தை தமிழ் மொழியில் பதிவு செய்தனர்.

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/police-11-720x450.jpg

அதே போல் பொத்துவில் தொடங்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி ஆகியோரிடமும் காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.

https://www.ilakku.org/?p=42645

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணி - யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் வாக்குமூலம் 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 

 

IMG_4137.jpg

 

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெற்றனர்.

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடமும் இன்று பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற ஆறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

 

unnamed__1_.jpg

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் சிங்கள மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயன்ற போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த வி. மணிவண்ணன்தான் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடமாட்டேன் என உறுதியாகக் கூறினார். இதனையடுத்து தமிழ் மொழியில் வாக்கு மூலம் பெறப்பட்டது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணி - யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் வாக்குமூலம்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – இரா.சாணக்கியன்!

  •  

போராட்டத்தில் பங்கேற்றவர்களை தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்ன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

இன்று முற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு வருகைதந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

வடக்கில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கிழக்கில் வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து வருகைதந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா, கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.

முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போதே மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையானது இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.IMG_0080.jpg?189db0&189db0

IMG_0085.jpg?189db0&189db0

IMG_0089.jpg?189db0&189db0

IMG_0090.jpg?189db0&189db0

IMG_0094.jpg?189db0&189db0

 

https://www.meenagam.com/போராட்டத்தில்-பங்கேற்றவ/

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னையும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.
தயவுசெய்து நம்புங்கள்.
‘நானும் ரவுடிதான்’  :cool:

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.