Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா..? துருவ ஆரம்பிக்கிறது TID..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா..? துருவ ஆரம்பிக்கிறது TID..

Missing-Protest-30-9-.png

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களில் வெளிநாட்டு கொடிகள் பிடிக்கப்படுவது ஏன்? குறித்த போராட்டங்களுக்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறதா? என வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவர், செயலாளரிடம் TID விசாரணை நடத்தியுள்ளது.

இந்த விசாரணை இன்றைய தினம் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குறித்த விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அமைப்பின் செயலாளர் ராஜ்குமார் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

நாம் மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் இருந்து நடைப்பயணமாக வந்தீர்களா ? என கேட்டிருந்தனர்.

பல வருடங்களாக போராடி வரும் நிலையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்துள்ள நாம். எமக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன்.

போராட்டங்களிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றதா என அவர்கள் கேட்டிருந்தனர். நாங்கள் நீதியை மாத்திரமே எதிர்பார்த்து நிற்கின்றோம் நிதியை அல்ல.என்ற விடயத்தினை அவர்களிற்கு உறுதியாக கூறியிருந்தேன்.

அமெரிக்க தூதுவர் நாளைய தினம் யாழ்பாணம் வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்த அவர் அரசு இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவி க.ஜெயவனிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/23469

  • கருத்துக்கள உறவுகள்

தானே வெளிநாடுகளை தட்டு வைத்து அழைத்துக்கொண்டு, தன் பிழையை மறைக்க, மேல் நாடுகளின்மேலும், பணத்தின் மேலும் குற்றம் சாட்டுவது சுத்த அயோக்கியத்தனம், வங்குரோத்து தனம்.  

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம்  பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 17 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரணைக்காக கொழும்பு வருமாறு எனது மகளின் வீட்டில் அறிவித்தல் ஒன்றை வழங்கியிருந்தார்கள். எனது வயதும் மற்றும் சுகவீனம் தொடர்பில் நான் அவர்களிற்கு தொலைபேசி ஊடாக கூறியிருந்தேன்.

வவுனியா அல்லது கிளிநொச்சிக்கு என்னாள் வர முடியும் எனவும் அவர்களிடம் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு அமைவாக 24 ஆம் திகதி இன்றைய தினம் கிளிநொச்சி வர சொன்னார்கள்.நான் சென்றிருந்தேன்.

இதன்போது பல விபரங்களை திரட்டி வைத்தனர். வங்கி கணக்குகள், வங்கிக்கு பணம் வருவது உள்ளிட்ட விபரங்கள அவர்கள் வைத்திருந்தார்கள். எனது வங்கி கணக்கு தொடர்பில் துருவி ஆராய்ந்தார்கள். 

356.jpg

அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். எனது மகன் வெளிநாட்டில் உள்ளார். அதேபோல் எனது சகோதரர்களும் வெளிநாட்டில் உள்ளார்கள். காணி வித்த பணத்தினையும் வங்கியில்தான் போட்டு்ளேன். எனவும், மகன் எனக்கு அனுப்பிய பணத்தையும் இதில்தான் போட்டுள்ளேன் எனவும் அவர்களிடம் கூறியிருந்தேன்.

ஜெனிவாவிற்கு 2010 ஆம் ஆண்டு ஜெனிவா சென்றீர்களா என வினார்கள். 2010 நான் செல்லவில்லை எனவும், 2018 மார்ச்சிலிருந்து தொடர்ச்சியாக சென்றிருந்தேன் எனவும் நான் தெரிவித்திருந்தேன்.

அங்கு என்ன கதைக்கிறீர்ர்கள் என கேட்டார்கள். 

எமக்கு நீதி கிடைக்கவில்லை, நாங்கள் எமது பிள்ளைகளை கையளித்தோம். சரணடைந்தார்கள். இலங்கை அரசிடம் அழுத்தம் கொடுத்தாவது எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள் என்று கோரியிருந்தோம்.

அத்தோடு, இலங்கையில் நீதி கிடைக்காது. அந்த நீதி சர்வதேசத்திடமிருந்துதான் கிடைக்க வேண்டும் என்பதையும் நாம் கூறியிருந்தோம் எனவும் தெரிவித்ததாகவும், மேலும் பல விடயங்களை அவர்கள் வினவியதாகவும் தெரிவித்தார்.

அவர்கள் என்னிடம் எதிர்பார்த்த பதில்களும், விசாரணை குறிப்புக்களும் திருப்திகரமானதாக அவர்களிற்கு அமைந்திருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.