Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேம்ஸ் நதிக் கரையோரம்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - -
———————————-

அன்று ஒரு நாள் 
மனிதம் வலி சுமந்து தேடியபோது 
உலகம் இறந்து கிடந்தது.

தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. 

அவனது இரத்தத்தை...
அவளது கண்ணீரை...
பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் 
எல்லோருமே 

என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து  அழுதபோது உலகம் இறந்து கிடந்ததல்லவா. தர்மத்தின் அச்சில் உலகம் சுற்றுவதில்லை. பொருளாதார நலனில் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதம் இல்லா உலகம் எல்லா இது. இழப்பதற்கு எதுகும் இல்லாத ஈழத் தமிழனிடம் இன்னும் ஒரு தாயை நாம் ஏன் இழக்க வேண்டும். சர்வதேசத்தை வெல்லும் காலம் வரும் வரை நாம் உழைக்க வேண்டும். நீதி வழங்காத எந்த நல்லிணக்கமும் சமாதானமும் சாத்தியம் இல்லை. Without justice there can be no peace or reconciliation. 

நாம் கடக்க வேண்டிய பாதை கடினமானது. சுதந்திரம் என்பது பூக்களின் மேல் நடப்பது போல் இல்லை. வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து தான் விடிவு தேட வேண்டும். அர்பணிப்புகளும் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகாது. கல்வியும் அறிவும் ஆற்றலும் கொண்ட ஈழத் தமிழ் பிள்ளைகள்  இன்று உலகப் பந்தில் முளைத்திருக்கிறார்கள். சிந்தனையும், தெளிவும், ஐக்கியமுமாய் நகர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாமே இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும். நாம் போக வேண்டிய தூரம் நீண்டதாகவே இருக்கிறது  இருந்த போதிலும் இருள் ஒரு நாள் விலகி ஒளி தெரியும் காலம் வரும்.

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....உதயன்!

நாளைய பொழுது விடியும் எனும் நம்பிக்கையினால் தானே...பறவைகள் பழங்களைக் கூடுகளில் சேர்த்து வைப்பதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, uthayakumar said:

நாம் கடக்க வேண்டிய பாதை கடினமானது. சுதந்திரம் என்பது பூக்களின் மேல் நடப்பது போல் இல்லை. வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து தான் விடிவு தேட வேண்டும். அர்பணிப்புகளும் தியாகங்களும் ஒரு போதும் வீண்போகாது. கல்வியும் அறிவும் ஆற்றலும் கொண்ட ஈழத் தமிழ் பிள்ளைகள்  இன்று உலகப் பந்தில் முளைத்திருக்கிறார்கள். சிந்தனையும், தெளிவும், ஐக்கியமுமாய் நகர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லாமே இன்று இருப்பது போல் நாளை இருப்பதில்லை மாற்றம் நிச்சயம் வந்தே ஆகும். நாம் போக வேண்டிய தூரம் நீண்டதாகவே இருக்கிறது  இருந்த போதிலும் இருள் ஒரு நாள் விலகி ஒளி தெரியும் காலம் வரும்.

 உதயகுமார்!  கவிதையுடன் கூடிய கதை பிரமாதம்.

போராடா விட்டால் இன்று வரை ஆபிரிக்காவும் விடுதலை அடைந்திருக்காது.
இந்தியாவும் சுதந்திரம் பெற்றிருக்காது.

ஓசியையிலை சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவுக்கு அதன் அருமையே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை... தரும் அழகிய வார்த்தைகள்....உதயகுமார். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான சிந்தனை உதயன்........தொடருங்கள்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 23:39, புங்கையூரன் said:

நாளைய பொழுது விடியும் எனும் நம்பிக்கையினால் தானே...பறவைகள் பழங்களைக் கூடுகளில் சேர்த்து வைப்பதில்லை!

 

On 13/3/2021 at 00:07, குமாரசாமி said:

ஓசியையிலை சுதந்திரம் பெற்ற ஸ்ரீலங்காவுக்கு அதன் அருமையே தெரியாது.

 

On 13/3/2021 at 00:18, தமிழ் சிறி said:

நம்பிக்கை... தரும் அழகிய வார்த்தைகள்....உதயகுமார். :)

 

20 hours ago, suvy said:

சிறப்பான சிந்தனை உதயன்........தொடருங்கள்.......!  👍

புங்கையூரான்,குமாரசாமி,தமிழ் சிறி,சுவே உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.