Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2031 இல் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள்: சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2031 இல் இலங்கையில் இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழர்கள்: சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன்

இலங்கையில் இதுவரை காலமும் முதலாவது சிறுபான்மை இனமாக இருந்த தமிழர்கள் 2031 ஆம் ஆண்டளவில் இரண்டாவது சிறுபான்மை இனமாக காணப்படுவார்கள் என சமூதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

11.03.2021 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித் தொகையியல் நோக்கு எனும் நிகழ்வில் பிரதம வளவாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் சனத்தொகை பெருக்க வீதம் வருடா வருடம் குறைவடைந்தே செல்கிறது. யுத்தம், நலிவுற்ற பொருளாதாரம், புலம் பெயர்வு, காலம் பிந்திய திருமணம், குடும்ப கட்டமைப்பு சிதைவுகள், நாகரீகம், கருத்தடைகள், குடும்ப கட்டுப்பாடுகள், என பல்வேறு காரணிகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த காரணிகளால் தமிழர்களின் சனத் தொகை குறைவடைந்து செல்கின்றமையை நாம் கண்முன்னே காண்கின்றோம். வடக்கு கிழக்கில் தமிழ் பாடசாலைகளில் தரம் ஒன்றில் இணைந்துகொள்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைவடைந்து செல்கின்றமையை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இது எமது இனத்திற்கு ஆபத்தானது. ஆரம்பத்தில் யாழ் தேர்தல் தொகுதியில் 11 பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தார்கள் ஆனால் தற்போது 7 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். தமிம் மக்களின் சனத் தொகை குறைவடைந்ததன் விளைவே இது எனத் தெரிவித்த அவர், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இது தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாக இல்லை எனவும், குறிப்பிட்டார்.

தமிழ்த் தலைமைகள் அரசியல் உரிமை பிரச்சினைக்கு கொடுக்கின்ற முக்கியத்துவைத்தை இப்படியாக ஒரு இனத்தின் ஆபத்தான பிரச்சினைகளுக்கு கொடுப்பதில்லை எனவும், தமிழ் மக்களின் சனத் தொகையானது இப்படியே சென்றால் வென்றெடுக்கும் உரிமைகளை அனுபவிக்க மக்கள் இருப்பார்களா என்ற கேள்வியே எழுகிறது என்றார்.

எனவே தமிழினத்தின் சனத்தொகை அதிகரிப்பை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, தவறின் 2028 இல் முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள். இது 2031 ஆம் ஆண்டின் சனத் தொகை மதிப்பீட்டில் புலப்படும் எனத் தெரிவித்த அவர், இலங்கையின் சனத்தொகை பெருக்க வீதத்தில் முஸ்லிம்கள், சிங்களவர்களுக்கு அடுத்தப்படியாகவே தமிழர்கள் காணப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

https://www.meenagam.com/2031-இல்-இலங்கையில்-இரண்டாவத/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முதலாவது சிறுபான்மை இனம் என்ற நிலையில் இருந்து இரண்டாவது சிறுபான்மை இனமாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள்.

தமிழ் மக்கள் என்றுமே முதலாவது சிறுபான்மை இனம்தான். அது மாறாது.

ஆனால் முதலாவது சிறுபான்மை மதமாக முசுலீம்களும், இரண்டாவது சிறுபான்மை மதமாக இந்துக்களும், மூன்றாவது சிறுபான்மை மதமாக சைவர்களும், நான்காவது சிறுபான்மை மதமாக கிறித்துவர்களும் காணப்படுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

தமிழ் மக்கள் என்றுமே முதலாவது சிறுபான்மை இனம்தான். அது மாறாது.

 

நீங்கள் முஸ்லிம்களை தனித்த ஒரு இனமாக கருதவில்லை என்று தெரிகின்றது பாஞ் ஐயா!

முஸ்லிம்கள் தமிழ் பேசினாலும் தங்களை தமிழராக கருதுவதில்லை. எனவே 2028 அளவில் அவர்கள் தமிழர்களை மேவி முதலாவது சிறுபான்மையினமாக வருவார்கள். 2031 சனத்தொகை கணக்கெடுப்பில் அது உத்தியோகபூர்வமாக தெரியவரும்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில் ஓடும் திரியைப் பாத்தால் அடுத்த வருடமே தமிழச்சனம் அங்கு இருக்காது.😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப யாழில் ஓடும் திரியைப் பாத்தால் அடுத்த வருடமே தமிழச்சனம் அங்கு இருக்காது.😂

ஓம் போல 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.