Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் வேட்பு மனுவில் சிக்கலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வேட்பு மனுவில் சிக்கலா?

 

spacer.png
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவை வைத்துதான் இப்போது விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

சீமான் தாக்கல் செய்துள்ள மனுவில் கடந்த நிதியாண்டுகளுக்கான தனது ஆண்டு வருமானத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் கடந்த 2019-20 ஆம் ஆண்டுக்கான வருட வருமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம் சீமான் வருமானத்தை மறைத்துவிட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி வட்டாரத்திலோ, “சீமானின் அபிடவிட்டில் 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சீமானின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இது அனேகமான தட்டச்சுப் பிழையாக இருக்கலாம். இதையடுத்து சீமான் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதில் அனுபவம் பெற்ற சில அரசியல் பிரமுகர்களிடம் பேசினோம்.

“சீமானின் வேட்பு மனுவில் கடந்த ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் என்பது நம்பும்படியாக இல்லைதான். அவர் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பினை ஒப்பிட்டுப் பார்த்து இது மதிப்பிடப்படும். எனினும் அவர் பிழையாக மனுவில் குறிப்பிட்டிருந்தால் கூட இப்போது பிரச்சினை இல்லை.

வேட்பு மனு பரிசீலனை வரும் மார்ச் 20 ஆம் தேதி நடக்கிறது. அதற்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்பு மனுவில் ஏதேனும் பிழையிருந்தால் அதைத் திருத்தலாம். சில ஆவணங்களை சேர்க்கலாம், நீக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. மனு பரிசீலனையின் போது அனைத்து தகவல்களும் சரியாகவும்,அதற்கான ஆவணங்கள் உண்மையாகவும் இருக்க வேண்டும். மனு பரீசிலனைக்கு முன்பாக எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம். தேவையென்றால் அந்த மனுவுக்கு பதிலாக புதிய மனுவையும் கொடுக்கலாம்.

திருநெல்வேலி பாஜக வேட்பாளராக அறியப்பட்ட நயினார் நாகேந்திரன் முறைப்படி தலைமையால் அறிவிக்கப்படாத நிலையில் நல்ல நாள் பார்த்து வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். ஆனால் அப்போது அவரது மனுவில் கட்சித் தலைமை அளிக்கும் பி ஃபார்ம் இருந்திருக்காது. அதன் பின் தலைமை முறைப்படி வேட்பாளராக அறிவித்த தேதிக்குப்பிறகுதான் கட்சித் தலைவரின் கையெழுத்திட்ட பி ஃபார்ம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அவர் மனு பரிசீலனைக்கு முன்பு தனியாகச் சென்று மனுவோடு சேர்த்துவிடுவார். அவ்வளவுதான்.

மனு பரிசீலனையின்போது சக வேட்பாளர்கள் சட்ட ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்காத வண்ணம், தேர்தல் நடத்தும் அலுவலர் ஒப்புக்கொள்ளும் வண்ணம் மனு இருக்க வேண்டும். எனவே சீமான் வேட்பு மனுவில் சிக்கல் ஏதுமில்லை”என்கிறார்கள்.
 

 

https://minnambalam.com/politics/2021/03/17/31/seeman-nomination-paper-any-problem

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமானின் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாயா? வேட்பு மனு தாக்கலில் குழப்பம் நடந்தது எப்படி?

17 மார்ச் 2021
சீமான்

பட மூலாதாரம், NAAMTAMILAR.ORG

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இதையொட்டி கடந்த 15 ஆம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில், சீமான் தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில், ` தனக்கு அசையும் சொத்தாக 31,06,500 ரூபாய் உள்ளதாகவும் அசையா சொத்து எதுவும் இல்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவருடைய மனைவிக்கு அசையும் சொத்தாக 63,25,031 ரூபாயும் அசையா சொத்தாக 25,30,000 ரூபாயும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். 

இதுதவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாகவும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1000 ரூபாய் மட்டுமே எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ` சீமானின் ஆண்டு வருமானம் வெறும் ஆயிரம் ரூபாயா?' எனக் கேள்வியெழுப்பி, சமூக வலைதளங்களில் சிலர் மீம்ஸ்களை பதிவிட்டனர். இதனைக் கவனித்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கொதிப்படைந்தனர். 

இந்நிலையில், வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது தட்டச்சு பிழையால் ஆண்டு வருமான கணக்கு தவறாக இடம்பெற்று விட்டதால் அதனைத் திருத்தி மீண்டும் ஒரு வேட்பு மனுவை சீமான் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

`உண்மையில் சீமானின் ஆண்டு வருமானம் 2,60,000 ரூபாய். இதற்காக அவர் கட்டிய வருமான வரியே ஆயிரம் ரூபாய்' எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். 

`திருவொற்றியூர் தொகுதியில் சீமான் மீண்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்வாரா?' என நாம் தமிழர் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோகுலிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

``நாங்கள் மீண்டும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. கூடுதலாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளோம். ஒரு வேட்புமனுவுக்கு மூன்று உறுதிமொழிப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம். அதேநேரம், ஒருவரே கூடுதலாக பணம் கட்டி இன்னொரு மனுவையும் தாக்கல் செய்யலாம். அந்த மனுவுக்கும் 3 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யலாம். ஆண்டு வருமானத்தைக் குறிப்பிடும்போது வருமான வரி கட்டிய தொகையை தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டார்கள்" என்கிறார். 

நாம் தமிழர்

 

`மனுவை தாக்கல் செய்யும்போது பிழைகளை கவனித்திருக்கலாமே?' என்றோம். ``இன்று உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்ய உள்ளோம். இதன்பிறகு இது குறித்துப் பேசுகிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார் கோகுல்.

`பிரமாண பத்திரத்தில் தவறு நேர்ந்து விட்டால் அதனை சரிசெய்வதற்கு தேர்தல் ஆணைய விதிகளில் இடமுள்ளதா?' என தமிழக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கருணாகரனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். 

``வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு, அதனை பரிசீலனை செய்வதற்குள் தட்டச்சில் பிழை ஏற்பட்டு விட்டதாகக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுக்கலாம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தேர்தல் நடத்தும் அலுவலரின் கடமை" என்கிறார். 

தொடர்ந்து பேசுகையில், ``தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர் தனது மனுவில் குறிப்பிட்ட விவரங்களில் பிழைகள் இருந்தால் அதனை சரி செய்து திருத்தித் தருமாறு தேர்தல் அலுவலர் கேட்கலாம். பொதுவாக, ஒரு வேட்பாளர் 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தாலும் கூட, அதே தொகுதியில் புதிதாக வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். அப்போது புதிய பிரமாண பத்திரத்தை இணைத்துக் கொடுக்கலாம். இதன் மூலம் பிழைகளுடன் கூடிய முதல் மனு தள்ளுபடி ஆகிவிடும். அவரது இரண்டாவது மனு ஏற்கப்பட்டு விடும். இதில் எந்தவித சிக்கல்களும் இல்லை" என்கிறார்.

`புதிய பிரமாண பத்திரத்தை சீமான் தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், இதையே காரணம் காட்டி தேர்தல் அலுவலர் அவரது மனுவை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியிருக்கும். இதன் காரணமாக அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போயிருக்கும்' என அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள்.


 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் மிகக்கடுமையாக விமர்சிப்பதால் இவரின் தவறு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இலவச விளம்பரம் செய்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் வேட்புமனுவில் ஆண்டு வருமானம் ரூ.1,000 விவகாரம்: புதிய பிரமாண பத்திரம் இன்று தாக்கல்

seeman-annual-income  

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், திருவொற்றியூர் தொகுதி வேட்பாளருமான சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது ஆண்டு வருமானம் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஏப்.6-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் கடந்த 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், அவரது ஆண்டு வருமானம் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைத்தளங்களில் அதுதொடர்பான பதிவும் வைரலானது.

இந்நிலையில், சீமான் தாக்கல் செய்த வேட்பு மனுவில், "அவரது ஆண்டு வருமானம் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அவர் வருமான வரித்துறைக்கு செலுத்திய தொகைதான் ரூ.1,000. அவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். எனவே, மேற்கண்ட தவறைத் திருத்தி புதிய பிரமாணப் பத்திரம் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்படும்" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/647197-seeman-annual-income.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஆயிரம் ரூபாயா எண்டு கேள்வி கேக்கிறவனுக்கும் ஒரு யோக்கியதை வேணும். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.