Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்களையும் யாழுக்கு கொண்டுவருமாறு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

- டி.விஜித்தா

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த  அளுத்கமகே உத்தரவிட்டார்.

இதையடுத்து,காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக எடுத்து வரப்பட்டன.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி யாழ்.மாவட்ட செயலகத்தில் , இன்று (17) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான கலந்துரையாடல் வரும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட அனைத்து காணி ஆவணங்களையும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டதுடன், எவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.

சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள்,மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறினார்.
Tamilmirror Online || அனைத்து ஆவணங்களையும் யாழுக்கு கொண்டுவருமாறு உத்தரவு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

எவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.

சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள்,மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறினார்.

அந்த அதிகாரிகளை நீக்கி அவர்களுக்குத் தண்டனையும் கொடுத்தால் இவ்வாறான செயற்பாடுகள் தொடராது தடுக்கலாமே. அநுராதபுரம் சென்ற காணி ஆவணங்கள் முழுமையாகத் திரும்புமா என்பதும் சந்தேகமே.  

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய மாண்புமிகு  ஜனாதிபதியின் முட்டாள்த்  தனத்திற்கு அடுத்த சான்று. எல்லாக் காரியாலயத்திற்கும் திடீரென விஜயம் செய்து பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்கிறாராம், உரிய தகுதிவாய்ந்த இராணுவ அதிகாரிகளை நியமித்து வேலைகளை இலகுவாக்குகிறாராம் சொல்கிறாங்கய்யா! 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 10:05, satan said:

தற்போதைய மாண்புமிகு  ஜனாதிபதியின் முட்டாள்த்  தனத்திற்கு அடுத்த சான்று. எல்லாக் காரியாலயத்திற்கும் திடீரென விஜயம் செய்து பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்கிறாராம், உரிய தகுதிவாய்ந்த இராணுவ அதிகாரிகளை நியமித்து வேலைகளை இலகுவாக்குகிறாராம் சொல்கிறாங்கய்யா! 

நாங்கள் நினைத்தால் கொண்டு செல்வோம் ,நினைத்தால் கொண்டு வருவோம் .....என சொல்லாமல் சொல்லினம்.....
அரசு சார்ந்த தமிழ் அமைச்சர்கள் இனி அறிக்கை விடுவினம் ....எங்களது வேண்டுகோளுக்கு அமையா அரசு காணி ஆவங்களை திருப்பி தந்து விட்டனர் ஆகவே அரசுடன் சேர்ந்து பயணிக்க பழக வேண்டும் என..

)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை பழிவாங்கும் எண்ணத்தில் அரச வளங்களை வீணாக்கி பல்லுடைபடும் முட்டாள் அரசு. இவர் பாதுகாப்பு அமைச்சராய் இருந்த போது கொழும்பில் அலுவலுகளுக்காய் தங்கியிருந்த தமிழரை இரவோடு இரவாய் அள்ளிகொண்டுபோய் வவுனியாவில்  இறக்கி விட்டார்கள், சர்வதேசம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மீண்டும் அவர்களை கொழும்புக்கு ஏற்றிக்கொண்டு வந்து சேர்த்தார்கள் இரவுத்தொழிலாளர். ***  தான் கக்கினதை தின்னத் திரும்பி வரும் அதுபோல் மூடர் தாம் செய்த மடச்செயலையே மீண்டும் செய்வார்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.