Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என  வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான செயல்திட்டம் வெளிப்படுத்துகிறது.

இலங்கை அரசால் இழைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் மத்தியில், தமிழ்த்தேசமானது  தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதற்காக போராடிவருகிறது. இலங்கை அரசானது வன்முறையை கட்டவிழ்த்தபோது, அதிலிருந்து தம்மை பாதுகாக்கவே தமிழர்களும் ஆயுதவழி போராட்டத்தை எடுக்க நேர்ந்தது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் போர்முனையில் ஏற்பட்ட படைவலுச்சமநிலையே, இதற்கு அடிப்படை காரணமாகும்.

தமிழர் தாயகத்தின் ஏறத்தாழ 75 சதவீதமான நிலப்பரப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளும் ஆளுகைக்குள்ளும் இருந்த அப்போதைய களநிலை யதார்த்தத்தின் அடிப்படையில், ஈழத்தமிழரின் தேச அந்தஸ்தும் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்டு, ஆகக் குறைந்தது இந்த அரசின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறைமை உருவாகும் எனவே எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதன் மூலமாக ஈற்றில் தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் நிகழ்த்தப்பட்டதோ  முற்றிலும் வேறுபட்ட ஒரு நிகழ்வே. இந்த அரசானது, சர்வதேசத்தின் பல்வேறு தரப்புகளின் ஆதரவுடன், இராணுவ நடவடிக்கையையே தமது தீர்வாக முன்வைத்தது.

இலங்கை அரசின் தொடர் அடக்குமுறைகளேரூபவ் தமிழர்கள்ரூபவ் தம்மீது  இந்தஅரசு இனப்படுகொலையை புரிந்தது என குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை பெயரளவில் மட்டும் கருதியிருக்கும் வரை, சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும், தொடர்ந்தும் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் என்பதை இங்கு வெளிப்படுத்திக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/102507

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

1 hour ago, விசுகு said:

சரியான கருத்து

இது யாருக்கு தேவை என்பதில்த் தான் குழப்பமே.

தமிழருக்கு தேவையா இல்லையா என்பதை விட வேறுநாட்டினர் தான் இதை முடிவு செய்கிறார்கள்.

ஆரம்பம் முதலே நான் சொல்வது

நாளைக்கு தமிழருக்கு தமிழீழம் வேண்டாமென்றாலும் வெளிநாட்டினருக்கு தேவை என்றால் அமைத்தே தீர்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

இது யாருக்கு தேவை என்பதில்த் தான் குழப்பமே.

தமிழருக்கு தேவையா இல்லையா என்பதை விட வேறுநாட்டினர் தான் இதை முடிவு செய்கிறார்கள்.

ஆரம்பம் முதலே நான் சொல்வது

நாளைக்கு தமிழருக்கு தமிழீழம் வேண்டாமென்றாலும் வெளிநாட்டினருக்கு தேவை என்றால் அமைத்தே தீர்வார்கள்.

எல்லாவற்றையும் விட சிறிலங்கா பொருளாதார விடயத்தில் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. பெரிய வல்லரசுகளே பொருளாதார ரீதியில் வாயை மூடிக்கொண்டு தள்ளாடும் போது சிறிலங்கா மட்டும் ஏதோ சொர்க்கம், சொர்க்கபுரிபோல் நாடகமாடிக்கொண்டிருகின்றார்கள்.புலிகளை அழித்து விட்டோம் என்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பை வெற்றிகரமாக இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிப்பவனி வந்து பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கின்றார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எல்லாவற்றையும் விட சிறிலங்கா பொருளாதார விடயத்தில் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. பெரிய வல்லரசுகளே பொருளாதார ரீதியில் வாயை மூடிக்கொண்டு தள்ளாடும் போது சிறிலங்கா மட்டும் ஏதோ சொர்க்கம், சொர்க்கபுரிபோல் நாடகமாடிக்கொண்டிருகின்றார்கள்.புலிகளை அழித்து விட்டோம் என்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பை வெற்றிகரமாக இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிப்பவனி வந்து பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கின்றார்கள்.
 

எவ்வளவு காலத்துக்குத் தான் மூடி வைத்திருக்க முடியும்.

மக்களின் கவனத்தை திசை திருப்பவே நாளாந்தம் தமிழருக்கு எதிராக ஏதோவொரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.