Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது

எல்லை மீறி மீன்பிடித்த 54 இந்திய மீனவர்கள் கைது

 

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை - இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

அப்போது 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்கிளின், சுப்ரீஸ், சோனைமுத்து, சக்தி, விஜயன், ரோசாலிஸ், குமார், கெரோனிஸ், மகேசுவரன், ஜான், கதிர், சிவா, அந்தோணி புளூட்டஸ், ராயப்பூ, அஜிரோ உள்பட 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதே போல் காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

அவர்களிடம் இருந்து 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்
எல்லை கடந்து மீன் பிடித்த‌தாக இந்திய மீனவர்கள் 54 பேர் சிறைபிடிப்பு; 5 படகுகள் பறிமுதல்

எல்லை கடந்து மீன் பிடித்த‌தாக இந்திய மீனவர்கள் 54 பேர் சிறைபிடிப்பு; 5 படகுகள் பறிமுதல்
 

சென்னை,

இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே எல்லை கடந்து மீன்பிடிப்பதில் நீண்டகால பிரச்னை இருந்து வருகிறது.  இந்திய மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.


இதனை தடுக்கவும், இரு நாட்டினரும் கடல் எல்லையினை சுமுக முறையில் பயன்படுத்தி கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  அதன்படி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், இரட்டை மடிமீன் வலைகளை பயன்படுத்த கூடாது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் இலங்கை அதிகாரிகளால் மீன்பிடி படகுகள், உபகரணங்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிட கோருதல் உள்ளிட்ட முக்கிய விசயங்கள் இடம் பெற்றன. 

எனினும், பேச்சுவார்த்தையில் உரிய பலன் எட்டப்படாத சூழலில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.  இந்நிலையில், இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, எல்லை கடந்து மீன் பிடித்த‌னர் என கூறி இந்திய மீனவர்கள் 54 பேரை சிறை பிடித்து சென்றுள்ளனர்.  அவர்களில் 40 பேர் தமிழக மீனவர்கள்.  14 பேர் காரைக்கால் மீனவர்கள் ஆவர்.  மீனவர்களிடம் இருந்து 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/03/25161636/54-Indian-fishermen-arrested-for-fishing-across-the.vpf

  • கருத்துக்கள உறவுகள்

UN ல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் விலகி நின்றதற்கான பரிசு. ...😂😂

அடுத்ததென்ன.. West container terminal  பறிமுதலா அல்லது திருக்கோணமலை எண்ணைக் குதங்களின் சுவீகரமா.. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 20 பேர் விடுவிப்பு

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக மீன் பிடிப்பில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய திருகோணமலையில் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , இவர்கள் உள்ளடங்களாக மன்னாரில் கைது செய்யப்பட்ட ஏனைய 20 மீனவர்களையும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 54 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு , 5 படகுகளும் கைப்பற்றப்பட்டன. 

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 20 பேர் விடுவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலையான 40 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தமது படகுகள் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

aaa.jpg

 கடந்த புதன் கிழமை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 400 க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். 

மீனவர்கள்  தனுஸ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால் கைது செய்வோம் என  ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். 

aa__1_.jpg

அப்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த மகேஸ் மற்றும் மரிய சிங்கம் ஆகிய இருவரது படகில் சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (26) காலை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீது எந்தவித வழக்கும் தொடராமல் படகுடன் விடுதலை செய்து தாயகம் திருப்பி அனுப்புமாறு  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருகோணமலை மற்றும் காரைநகர் கடற்படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 40 மீனவர்களையும் அவர்களது நான்கு படகுகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தனர்.

 பின்  இலங்கை கடற்படை சர்வதேச கடல் எல்லையில் வைத்து  மீனவர்களை படகுடன்   அனுப்பி வைத்தனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது மீன் பிடி விசைப்படகுடன்  நேற்று வெள்ளிக்கிழமை (26) மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திற்கு சென்றனர்.

கடந்த புதன்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த  10 க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை கப்பல்களில் இருந்த கடற்படை வீரர்கள்  இந்த பகுதியில் மீன் பிடித்ததால் உங்களை கைது செய்கிறோம் என கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

பின் நேற்று காலை இலங்கை அரசு விடுதலை செய்ததாக அறிவித்து கடற்படை முகாமில் இருந்து படகுடன் அனுப்பி வைத்தாக கரை திரும்பி மீனவர்கள் தெரிவித்தனர்.

 

https://www.virakesari.lk/article/102855

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கச்சத்தீவுக்கும்

தமிழக மீனவர்களா அம்பானி குடும்பமா முக்கியம் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.