Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பொலிஸின் மூர்க்கத்தனமான தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடுவீதியில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிக்கும் காட்களின் அடங்கிய ஒளிநாடா, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற இடம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும்  இதுவரையிலும் வெளியாகவில்லை எனினும், வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.

 


  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவருக்கே இந்த நிலை என்றால் தமிழரின் நிலைமையை யோசித்து பாருங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களவருக்கே இந்த நிலை என்றால் தமிழரின் நிலைமையை யோசித்து பாருங்கள்?

இது சிங்களவர் என்ற முடிவை எப்படி எடுத்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம் !!

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம் !!

லொறி ஓட்டுநர் ஒருவரை வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி மகரகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து வீடியோவில் காணப்பட்ட போக்குவரத்து அதிகாரி மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டியில் வீதியில் ஒருவரை சரமாரியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

ஒழுக்கமான பொலிஸ் படையை உருவாக்குவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1205894

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 11:07, குமாரசாமி said:

சிங்களவருக்கே இந்த நிலை என்றால் தமிழரின் நிலைமையை யோசித்து பாருங்கள்?

 

22 hours ago, ஈழப்பிரியன் said:

இது சிங்களவர் என்ற முடிவை எப்படி எடுத்தீர்கள்?

 

அப்புத்தளையைச் சேர்ந்த 24 வயதான தமிழ் இளைஞர் பிரிவீன் என்று சொல்லப்படுகிறது.

ஏறி மிதித்தவர் ஆஸ்பத்திரியிலும் மிதிவாங்கியவர் பொலிஸ் நிலையத்திலும்.

  • கருத்துக்கள உறவுகள்
மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் ஆய்வாளர் (IP) மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார்.
அந்த காணொளிதான் உலகம் முழுக்க (Viral) தெறிக்கிறது.
லொறி மோதலில் காயமடைந்த IP மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் மஹரகமை பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள்.
இந்த சம்பவத்தை நாம் சரியாக புரிந்துக்கொண்டு இந்த பிரச்சினையை தேவையற்ற இடத்துக்கு கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.
இத்தகைய பொலிஸ் அத்துமீறல் சம்பவங்களில், பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படல் அவசியம் என்பது ஒரு சர்வதேச நியதி. அதுதான் அவர்களை அடையாளத்துடன் பொறுப்பு கூற வைக்கும்.
இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் என்று கிடையாது. ஒரே இலங்கை பொலிஸ்தான் உள்ளது. ஒருவேளை பணியில் ஒரு தமிழ் பொலிஸ்காரர் இருந்திருந்தாலும் இப்படிதான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இலங்கை பொலிஸ் சீருடையை அணிந்தாலே எல்லோருக்கும் இந்த அத்துமீறல் போக்கு ஏற்படுகிறது. அவரது வார்த்தை பிரயோகமும் பிழை.
தங்களது பெரும்பான்மை இன பொலிஸ் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க சிறுபான்மை இன இலங்கை போலீசார், “ஓவராக” நடந்துக்கொள்வதை இதுபோன்ற பல இடங்களில் தமிழ் பேசும் மக்கள் பார்த்துள்ளோம்.
இனி என்ன நடக்கும் என கண்காணிக்க வேண்டும்
 
--மனோ கணேசனின் முக நூலில் இருந்து 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் என்று கிடையாது. ஒரே இலங்கை பொலிஸ்தான் உள்ளது. ஒருவேளை பணியில் ஒரு தமிழ் பொலிஸ்காரர் இருந்திருந்தாலும் இப்படிதான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இலங்கை பொலிஸ் சீருடையை அணிந்தாலே எல்லோருக்கும் இந்த அத்துமீறல் போக்கு ஏற்படுகிறது. அவரது வார்த்தை பிரயோகமும் பிழை.

இதனால்த் தான் பொலிசுக்கான சீருடையையே தேசியத் தலைவர் முற்று முழுவதுமாக மாற்றியமைத்திருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.