Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

சிவப்பு செத்தல் மிளகாய் வித்துவந்த சந்தோசம்தான் உங்களை இத்தனை அதி காரமாக கருத்துக்களும் எழுத வைத்துள்ளதுபோல் தெரிகிறது.🤔

உங்கள் நகைச்சுவை  நன்றாகவுள்ளது...நான். விவசாயக குடும்பத்தைச் சேர்த்தவன். இங்கேயும் பத்து ஆண்டுகள் தோட்ட வேலை செய்துள்ளேன். ஊரில் போய் ஐந்து/பத்து  ஏக்கரில் தோட்டம் செய்ய விருப்பம். ஆனால்  அது நிறைவேறாது...

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

நீங்கள் இறக்குமதியை. வரவேற்கிறீர்களா? ஒர் கடையில்  பொருள்கள். விற்றால்  தான் அந்தக்கடைக்கு  வருமானம்  கிடைக்கும்.  அதேபோல். ஒரு நாட்டிலிருந்து  எற்றுமதி  அதிகரிக்கும்போதுதான். அந்த நாடு வளர்ச்சியடையும். சீனா ஏற்றுமதியை அதிகரிப்பாதாற்க்காக. தனது  பணத்தின் பெறுமதியை  வலுயிழக்கச்செய்ததாய். ஒர். பதிவு  வாசித்துள்ளேன் .இது சரியா?  மற்றும் முன்னாள் அமெரிக்கா அதிபர்  

ரெனல்ட் டிரம்ட். தனது நாட்டுப்பொருக்களை  வேண்டுமாறு. இந்தியாவுடன். சண்டை   போட்டார்.

வடபகுதியில்  1984ஆம் ஆண்டு  கிட்டத்தட்ட. 70/80%விவசாயிகள்  உத்தியோகம்  பார்த்வர்கள் கூட பகுதிநேரமாக விவசாயம் செய்தார்கள்...இப்ப அப்படியில்லை  .எத்தனை. வீதம் என்றும் தெரியாது. விளை பொருக்களை  விற்க முடிவதில்லை அல்லது செலவு மிக அதிகம்.  

 

 

சீனாவின் பொருளாதாரம் மிகப் பெரியது. அமெரிக்காவிற்கு பாடம் புகட்டவே சீனா தனது பணத்தை மதிப்பிழக்கம் செய்து ஏற்றுமதியை அதிகரித்தது.

இன்று சீனாவிலிருந்து உதிரிப்பாகங்கள் வரவில்லை என்ற காரணத்தினால் கனடாவில் எத்தனையோ தொழிற்சாலைகள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் layoff இல் வீட்டில் இருக்கிறார்கள்.

 

நாம் படிக்கும் காலத்தில் பல ஆசிரியர்கள் விதைக்கும் நாட்களிலும் அறுவடை நாட்களிலும் பாடசாலைக்கு வரமாட்டார்கள். கிராமப்புற பாடசாலைகளில் மைதானங்களில் அறுவடை செய்தல் நெல் காய விடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, MEERA said:

சீனாவின் பொருளாதாரம் மிகப் பெரியது. அமெரிக்காவிற்கு பாடம் புகட்டவே சீனா தனது பணத்தை மதிப்பிழக்கம் செய்து ஏற்றுமதியை அதிகரித்தது.

இன்று சீனாவிலிருந்து உதிரிப்பாகங்கள் வரவில்லை என்ற காரணத்தினால் கனடாவில் எத்தனையோ தொழிற்சாலைகள் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் layoff இல் வீட்டில் இருக்கிறார்கள்.

ஜேர்மனிக்கும் அதே  நிலைதான். கொஞ்ச நாட்கள் முடங்கியே விட்டது. இப்போது கொஞ்சம் சுதாகரித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, MEERA said:

நாம் படிக்கும் காலத்தில் பல ஆசிரியர்கள் விதைக்கும் நாட்களிலும் அறுவடை நாட்களிலும் பாடசாலைக்கு வரமாட்டார்கள். கிராமப்புற பாடசாலைகளில் மைதானங்களில் அறுவடை செய்தல் நெல் காய விடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது????

நான் படித்த காலங்களில் ஆள் உதவியில்லாதவர்களுக்கும்,கொஞ்சம் வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களின் வயல்களுக்கு புல்லு புடுங்க  பாடசாலை மாணவர்கள் உதவி செய்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

முன்னாள் பிரதமர் சிறிமா காலம் போல கொண்டுவர அரசு நினைக்குது போல.

முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைவதற்காக அந்தத் திட்டத்தை கொண்டுவந்தார். இன்றோ: நாட்டின் வங்குரோத்து தன்மை இந்தத் திட்டத்தை முயற்சிக்கிறார்கள். விவசாயத்தில் தன்னிறைவு கண்டது வடக்கு. விவசாய நிலத்தில் இராணுவ அரண்கள் வந்தன, விவசாயிகள் விரட்டப்பட்டனர், நிலங்களை அபகரித்தனர்,  மக்கள் அகதிகளாக வெளியேறினர், விவசாயத்திற்கு தேவையான உரம், மண்ணெண்ணெய் தடை, அதைவிட எமது நிலத்தில் இராணுவம் விவசாயம் செய்து எமது மக்களின் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல் உற்பத்திப்பொருட்களின் விலையை குறைத்தது. இப்படி விவசாயம் அழிவதற்கு அரசே காரணமாய் இருந்தது.  வெளிநாடு, அரச உத்தியோக மோகம் என்பன நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டது. கைகுதரிசி சோறு சாப்பிட்டவர்கள் பிற அரிசிகளை நாட வேண்டியேற்பட்டது. ஊருக்கு சோறு போட்டவன் தன் வயிற்றுக்கு அலைய வேண்டி வந்தது எல்லாம் யாரால்? வெளிநாடுகளை குளிர வைப்பதற்காக கண்டதையெல்லாம் இறக்குமதி செய்து, உள்ளூர் உற்பத்திகளை உறக்கம் கொள்ள வைத்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டில சமைப்பது குறைவு, சமைத்தால் குத்தரசி தான். அதுவும் 110 ரூபாயில் இருந்து 140 ரூபாவிற்கு போயிற்றுது.

நல்லெண்ணை 1 போத்தல் 1500 ரூபா.

இந்த வருடம் நெல்லை விளைவிக்க முயற்சிப்பதாக திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2021 at 18:12, ஏராளன் said:

முன்னாள் பிரதமர் சிறிமா காலம் போல கொண்டுவர அரசு நினைக்குது போல. எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியேல.

நானும் அறிந்தேன். அந்த விவசாய திட்டத்தால் விவசாயம் செய்த தமிழர்கள் நன்மை அடைந்து செல்வந்தர்கள் ஆனார்கள். விவசாயம் செய்யாத தமிழர்களும் கூட்டமைப்பும் அந்த அரசின் மீது கடுமையான வெறுப்பில் இருந்தார்களாம். அடுத்த தேர்தலில் அந்த அரசு படு தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்

என் பாட்டி சொல்லுவார், இந்தக்காலத்திற் தான் விவசாயிகள் கல்வீட்டை கட்டி(ண்டா)னார்கள் என்று.  சோம்பறிகள், கைநீட்டி இரந்துண்போர் பெருகிவிட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு  சான்று. வரிசையில் நின்று பங்கீட்டு அட்டைக்கு ஒரு இறாத்தல் பாண் என்கிற திட்டத்தை கொண்டு வந்து, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்ததன் (பலன்)வந்த விளைவு அது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.