Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை அலட்சியமாகயிருக்க முடியாது -ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை அலட்சியமாகயிருக்க முடியாது -ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் நாடு ஐக்கியப்பட்டுஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எங்கள் கருத்தினை முன்வைப்பதற்கு எங்களிற்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது நாங்கள் பொறுப்புக்கூறல்விடயத்தினை திறந்த மனதுடன் அணுகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது பொருத்தமற்ற விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை விடயங்களை அலட்சியப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விவகாரங்களை கையாள்கின்றவர்கள் யுத்தத்தின் இறுதிகாலங்கள் குறித்தே கவனம் செலுத்துகி;ன்றனர் என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சகிகலகே விடுதலைப்புலிகளின் தோல்வியை சகிக்க முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளால் இலங்கை இலக்குவைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா சவாலை எதிர்கொள்வதற்கு உறுதியான முயற்சிகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மார்ச் அமர்வு முடிவடைந்துவிட்டதால் இலங்கை தற்போதைக்கு ஜெனீவாவிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தலை மறந்துவிடாது என எதிர்பார்ப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொய்களை உறுதியாக எதிர்கொள்ளாதமைக்காக அரசாங்கம் பெரும் விலையை செலுத்தியது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் படையினருக்கு எதிராக பொய்களை தெரிவிப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக காணப்படுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் துரதிஸ்டவசமானது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த்தின் பின்னரும் இலங்கை தன்மீதான குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாக நிரகரிக்க தவறியுள்ளமை மிகப்பெரும் தியாகத்தை செய்தவர்களிற்கு காயமடைந்தவர்களிற்கு செய்யப்பட்ட அவமானம் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிருபிக்கப்படாத விடயங்கள் மற்றும்பரிந்துரைகளின் அடிப்படையில் தனிப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மங்கள சமர வீர வுக்கும் சகி கலகே இந்த இனவாத இராணுவ அதிகாரிக்கும் கொள்ளுப்பட்டவையல்  அதனால் இடமாற்றம் பெற்று ஏற்காமல் ஓய்வு பெற்றவர் தலைவர்  பிரபாகரனின் இறந்த உடல் என   காட்டப்பட்ட  இறந்த உடலை அவமரியாதை செய்தவர் பின் பொன்சேகா உத்தரவு போட்டே தனது படைகள் அவ்வாறு செய்ததாக அறிவித்தவர்.

மறந்து போகமாட்டம்  செய்த அநியாயங்கள் அனைத்தும் நினைவில் . 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா பொறிமுறை தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள்  இருக்கக் கூடாது- சகி கலகே கருத்து

 
1-54.jpg
 30 Views

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து  ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சகி கலகே தெரிவிக்கையில்,

எங்கள் கருத்தினை முன்வைப்பதற்கு எங்களிற்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது நாங்கள் பொறுப்புக்கூறல்விடயத்தினை திறந்த மனதுடன் அணுகவேண்டும். முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியது பொருத்தமற்ற விடயம் .

சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை விடயங்களை அலட்சியப்படுத்த முடியாது . யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விவகாரங்களை கையாள்கின்றவர்கள் யுத்தத்தின் இறுதிகாலங்கள் குறித்தே கவனம் செலுத்துகின்றனர்.   விடுதலைப்புலிகளின் தோல்வியை சகிக்க முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளால் இலங்கை இலக்குவைக்கப்படுகின்றது

ஜெனீவா சவாலை எதிர்கொள்வதற்கு உறுதியான முயற்சிகள் அவசியம்.   பெப்ரவரி மார்ச் அமர்வு முடிவடைந்துவிட்டதால் இலங்கை தற்போதைக்கு ஜெனீவாவிலிருந்து எழக்கூடிய அச்சுறுத்தலை மறந்துவிடாது. படையினருக்கு எதிராக பொய்களை தெரிவிப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக காணப்படுகின்றார்கள்.  இது மிகவும் துரதிஸ்டவசமானது” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=46740

 

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலிகள்.....எது எப்படியோ இலங்கை என்ற சிறிலங்கா ஆட்சி நடத்த தெரியாத மொடயர்களின் கையில் தற்பொழுது அகப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

மிகப்பெரும் தியாகத்தை செய்தவர்களிற்கு காயமடைந்தவர்களிற்கு செய்யப்பட்ட அவமானம் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அனிஞாயமாக, இல்லாத (நிஞாயமற்ற)  ஒன்றுக்கு அவர்களை பலிக்கடாவாக்கியது சிங்கள அரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.