Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து முறையில் புளிக்கஞ்சி செய்து சுவைத்து பாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புளிக் கஞ்சியை.... இறால் போடாமல், இலங்கையில் செய்து சாப்பிட்டுள்ளோம்.
மிகவும், நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி... நிலாமதி  அக்கா. 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த புளிக் கஞ்சியை.... இறால் போடாமல், இலங்கையில் செய்து சாப்பிட்டுள்ளோம்.
மிகவும், நன்றாக இருக்கும். நினைவூட்டியமைக்கு நன்றி... நிலாமதி  அக்கா. 👍

நான் இன்னும் ஒடியல் கூழ் கூட குடிக்கல என்றால் நம்பூவீர்களா ? சிறி ஐயா யாராவது ஊருக்கு வந்தால் செய்து தாங்கோ ஒரு தடவையேனும் குடிக்கணும் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்னும் ஒடியல் கூழ் கூட குடிக்கல என்றால் நம்பூவீர்களா ? சிறி ஐயா யாராவது ஊருக்கு வந்தால் செய்து தாங்கோ ஒரு தடவையேனும் குடிக்கணும் 

என்ன முனிவர் ஜீ.... இன்னும் ஒடியல் கூழ்  குடிக்க வில்லையா??? 🤔
பாதி வாழ்க்கையை... வீணாக்கி விட்டீர்களே.

ஒடியல் கூழ் ,  புளிக் கஞ்சி இரண்டையும்... ஒரு முறையாவது குடித்து பாருங்கள்.
இரண்டும் வெவ்வேறு சுவை என்றாலும்... ஒரு முறை குடித்தால்...
வருடங்கள் பல கடந்தாலும்... அதன் சுவையை மறக்க மாட்டீர்கள். ❤️

கொரோனாவால்.... ஊருக்கு நாங்கள் வர, 
இன்னும் எவ்வளவு காலங்கள் எடுக்குதோ  தெரியவில்லை.

கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள...  
"கற்பகம்"  பனம் பொருள் அபிவிருத்தி கடையில்....
முன்பு... விற்பனை செய்தவர்கள். இப்போ உள்ளதோ.. தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

என்ன முனிவர் ஜீ.... இன்னும் ஒடியல் கூழ்  குடிக்க வில்லையா??? 🤔
பாதி வாழ்க்கையை... வீணாக்கி விட்டீர்களே.

ஒடியல் கூழ் ,  புளிக் கஞ்சி இரண்டையும்... ஒரு முறையாவது குடித்து பாருங்கள்.
இரண்டும் வெவ்வேறு சுவை என்றாலும்... ஒரு முறை குடித்தால்...
வருடங்கள் பல கடந்தாலும்... அதன் சுவையை மறக்க மாட்டீர்கள். ❤️

கொரோனாவால்.... ஊருக்கு நாங்கள் வர, 
இன்னும் எவ்வளவு காலங்கள் எடுக்குதோ  தெரியவில்லை.

கொழும்பு வெள்ளவத்தை காலி வீதியில் உள்ள...  
"கற்பகம்"  பனம் பொருள் அபிவிருத்தி கடையில்....
முன்பு... விற்பனை செய்தவர்கள். இப்போ உள்ளதோ.. தெரியவில்லை.

இதைத்தான் சுமே அக்காவிடமும் சொன்னேன் நம்புகிறார்கள் இல்லை நான் இதுவரை அந்த கூழ் புளிக்கஞ்சி குடித்தது இல்லை இங்கயும் யாழ்ப்பாண சமையல்கள் பெரிதாக கிடைப்பதில்லை காத்தான் குடி சூப் மட்டும்தான் கிடைக்கும் 

நான் கூழ் குடிக்கல என்று சொல்ல வெட் கமாகவும் இருக்கு யாழ் இணையத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இதைத்தான் சுமே அக்காவிடமும் சொன்னேன் நம்புகிறார்கள் இல்லை நான் இதுவரை அந்த கூழ் புளிக்கஞ்சி குடித்தது இல்லை இங்கயும் யாழ்ப்பாண சமையல்கள் பெரிதாக கிடைப்பதில்லை காத்தான் குடி சூப் மட்டும்தான் கிடைக்கும் 

நான் கூழ் குடிக்கல என்று சொல்ல வெட் கமாகவும் இருக்கு யாழ் இணையத்தில் 

அதென்ன... காத்தான்குடி சூப்.
சிலவேளை... ஆட்டுக்கால்,  போட்டு செய்யும்... இரசத்தை சொல்கிறீர்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதென்ன... காத்தான்குடி சூப்.
சிலவேளை... ஆட்டுக்கால்,  போட்டு செய்யும்... இரசத்தை சொல்கிறீர்கள் போலுள்ளது.

அது ஆட்டுக்கால் இல்லை மாட்டுக்கால் சிறி அண்ணை  ரசம் போலவே இருக்கும் உள்ள மரக்கறிகளை வெட்டிப்போட்டு செய்வார்கள் சுவையும் நன்றாக இருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது.பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்னும் ஒடியல் கூழ் கூட குடிக்கல என்றால் நம்பூவீர்களா ? சிறி ஐயா யாராவது ஊருக்கு வந்தால் செய்து தாங்கோ ஒரு தடவையேனும் குடிக்கணும் 

இதில் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது தனி......நான்கூட தவளை,நத்தை, பாம்பு சாப்பிட்டததில்லை. அதுக்காக நான் வெட்கப்பட்டதில்லை. ஒடியல் கூல் செய்வது மிக சுலபம்.உங்கள் ஊரிலேயே அத்தனை சாமான்களும் கிடைக்கும்.அதிலும் தரமான கடலுணவு நிறைய கிடைக்கும்.ஒடியல் மா, பெரிய மீன்தலை,நண்டு,பிலாக்கொட்டை போன்றவை மிக முக்கியம். குடிக்கிறதுக்கு அக்கம்பக்கத்தில் ஐஞ்சாறு பேர், குஞ்சு குருமான்களையும் (பொடிப்பிள்ளைகள்)கூட்டு சேர்த்து கொள்ளவும்.பெரிய பிலாவிலைகள் பொறுக்கி கோலி ஓரத்தை ஈர்க்குகளால் குத்தி வைக்கவும்.அல்லது வடலி ஓலையில் சிறிய பிளா கோலி வைக்கவும். மூக்கால் ஒழுகுவதை துடைக்க பழைய சரத்தை கிழித்து தயாராய் வைக்கவும். முற்றத்தில் வட்டமாக இருந்து நிலவைப் பார்த்துக்கொண்டு பகிடிகதைகள் கதைத்துக்கொண்டு  குடிக்க அந்தமாதிரி இருக்கும். கூழ்குடிக்க இன்றே தயாராகவும். இன்னும் ஆறேழுநாளில் பௌர்ணமி வந்திடும். மறக்காமல் பிள்ளையை அப்பம்மாவிடம் குடுத்து விடவும்......!   👍

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது ஆட்டுக்கால் இல்லை மாட்டுக்கால் சிறி அண்ணை  ரசம் போலவே இருக்கும் உள்ள மரக்கறிகளை வெட்டிப்போட்டு செய்வார்கள் சுவையும் நன்றாக இருக்கும்  

இதில் யாழ்ப்பணிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதில் நான் மனமுவந்து ஆமோதிக்கிறேன்.

நானும்  யாழ்ப்பாணி தான்.

ஆனால், மாட்டு இறைச்சியின் பாவிப்பு பெரும்பாலும் யாழ்ப்பணிகளுக்கு தெரியாது. அனறைய இளம் வட்டத்தினர், மாட்டிறைச்சி மொக்கன் கடை அளவு மட்டுமே தெரியும்.

அப்படியே, ஆட்டிலும் எப்படி முழு பகுதியையும் சமைப்பது  என்று தெரியாது.

இது பெரும்பாலும் மாறவில்லை என்றே நினைக்கிறன்.

ஆனால், கிழக்கு, முக்கியமாக திருமலையில் தமிழரின் உணவு பழக்கவழக்கம் மாறி விட்டது.

திருமலையில் பல விதமான கடைகள், இறைச்சி கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களுடன் பழக வேண்டி வந்தது. அவர்கள் சொல்வது, தமிழர்களே தமது வியாபார வருமானத்தின் பெரும் பகுதியை தருவது, முஸ்லிம்களோ, சிங்களவர்களோ அல்ல.    

ஆம், திருமக்கலையில் மாட்டிறைச்சி விபரத்தில் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நன்றாக இருக்கின்றது.பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!

இதில் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது தனி......நான்கூட தவளை,நத்தை, பாம்பு சாப்பிட்டததில்லை. அதுக்காக நான் வெட்கப்பட்டதில்லை. ஒடியல் கூல் செய்வது மிக சுலபம்.உங்கள் ஊரிலேயே அத்தனை சாமான்களும் கிடைக்கும்.அதிலும் தரமான கடலுணவு நிறைய கிடைக்கும்.ஒடியல் மா, பெரிய மீன்தலை,நண்டு,பிலாக்கொட்டை போன்றவை மிக முக்கியம். குடிக்கிறதுக்கு அக்கம்பக்கத்தில் ஐஞ்சாறு பேர், குஞ்சு குருமான்களையும் (பொடிப்பிள்ளைகள்)கூட்டு சேர்த்து கொள்ளவும்.பெரிய பிலாவிலைகள் பொறுக்கி கோலி ஓரத்தை ஈர்க்குகளால் குத்தி வைக்கவும்.அல்லது வடலி ஓலையில் சிறிய பிளா கோலி வைக்கவும். மூக்கால் ஒழுகுவதை துடைக்க பழைய சரத்தை கிழித்து தயாராய் வைக்கவும். முற்றத்தில் வட்டமாக இருந்து நிலவைப் பார்த்துக்கொண்டு பகிடிகதைகள் கதைத்துக்கொண்டு  குடிக்க அந்தமாதிரி இருக்கும். கூழ்குடிக்க இன்றே தயாராகவும். இன்னும் ஆறேழுநாளில் பௌர்ணமி வந்திடும். மறக்காமல் பிள்ளையை அப்பம்மாவிடம் குடுத்து விடவும்......!   👍

 

என்னதான் நாங்கள் இங்கு செய்தாலும் ( வாய்ப்பு குறைவு ) யாழ்ப்பாண மண்ணில் அந்த பிளாவில் குடிக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கு சுவி அண்ணை 

5 hours ago, Kadancha said:

இதில் யாழ்ப்பணிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதில் நான் மனமுவந்து ஆமோதிக்கிறேன்.

நானும்  யாழ்ப்பாணி தான்.

ஆனால், மாட்டு இறைச்சியின் பாவிப்பு பெரும்பாலும் யாழ்ப்பணிகளுக்கு தெரியாது. அனறைய இளம் வட்டத்தினர், மாட்டிறைச்சி மொக்கன் கடை அளவு மட்டுமே தெரியும்.

அப்படியே, ஆட்டிலும் எப்படி முழு பகுதியையும் சமைப்பது  என்று தெரியாது.

இது பெரும்பாலும் மாறவில்லை என்றே நினைக்கிறன்.

ஆனால், கிழக்கு, முக்கியமாக திருமலையில் தமிழரின் உணவு பழக்கவழக்கம் மாறி விட்டது.

திருமலையில் பல விதமான கடைகள், இறைச்சி கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களுடன் பழக வேண்டி வந்தது. அவர்கள் சொல்வது, தமிழர்களே தமது வியாபார வருமானத்தின் பெரும் பகுதியை தருவது, முஸ்லிம்களோ, சிங்களவர்களோ அல்ல.    

ஆம், திருமக்கலையில் மாட்டிறைச்சி விபரத்தில் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். 

ஓம் ஆடு , மாடை விதம் விதமாக சமைப்பார்கள்  தற்போது நோன்பு காலம் வாசனையும் உணவுகளின் கண்காட்சியும் களை கட்டுகிறது , இறைச்சி கட்லட், இறைச்சி சம்சா, இறைச்சி ரோல்ஸ், இறைச்சி றொட்டி , அதுமட்டும் இல்லாமல் இந்தியர்களை கொண்டு இந்திய சமையல் அனைத்தையும் செய்து  காசு பார்க்கிறார்கள் . 

அண்மையில்  ஓர் கடைக்கு போனேன் கடையில் வேலை செய்பவர் ஓர் கிந்தி பேசும் வட நாட்டுக்காரர் நாண் றொட்டி சுட்ட கோழியும் செய்கிரார்கள் நமக்கு தெரிந்த கிந்திய பேசினேன் அந்த மனுசன் சந்தோசமாக அவரின் வேலையை விபரித்தார் என்றால் பாருங்கோவன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நிலாமதி said:

 

ஐயோ பாக்கவே வாயூறுது. இவங்கடை கண்டறியாத சாப்பாடுகளை சாப்பிட வெளிக்கிட்டு ஊர்வாசனையே மறந்து போச்சுது.ஆனால் நாங்கள் புளிகஞ்சிக்கு மச்சம் பாவிக்கிறேல்லை. ஆனால் அதின்ரை சுவை சொல்லி வேலையில்லை.நாக்கை ஒரு பிரட்டு பிரட்டியெடுக்கும்.

இணைப்பிற்கும் நினைவூட்டலுக்கும் நன்றி சகோதரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அண்மையில்  ஓர் கடைக்கு போனேன் கடையில் வேலை செய்பவர் ஓர் கிந்தி பேசும் வட நாட்டுக்காரர் நாண் றொட்டி சுட்ட கோழியும் செய்கிரார்கள் நமக்கு தெரிந்த கிந்திய பேசினேன் அந்த மனுசன் சந்தோசமாக அவரின் வேலையை விபரித்தார் என்றால் பாருங்கோவன்

ஐசீ! அப்ப நீங்க சிலோன்லை நிண்ட கிந்தி ஆமியளுக்கு வேலை செய்திருக்கிறீங்க??? அப்பவும் நான் யோசிச்சனான்.😂

மகா சனங்களே சிங்கன் வசமா மாட்டி 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 03:50, குமாரசாமி said:

ஐசீ! அப்ப நீங்க சிலோன்லை நிண்ட கிந்தி ஆமியளுக்கு வேலை செய்திருக்கிறீங்க??? அப்பவும் நான் யோசிச்சனான்.😂

மகா சனங்களே சிங்கன் வசமா மாட்டி 😁

அப்ப வயசு 6 கூப்பிட்டு றொட்டியும் ( சப்பாத்தியும் ) பாலும் கொடுப்பானுகள் நியாபம இருக்கு ஆனால் கிந்தி பழகியது மத்திய கிழக்கில் இருக்கும் போது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.