Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை

வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் தமிழ் மொழியில் இணைத்துக் கொள்பவர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த தமது சொந்த மாவட்டங்களிலே கடமைபுரிய வழியேற்படுத்தப்படும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சுதந்திரமான, ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் சேவைக்கான ஆளணியை அதிகரிப்பது தொடர்பாக யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/வடக்கு-மாகாணத்தில்-பொலிஸ/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனபேர் செய்தியை படிக்கணும்  ஒரு கருத்தையும் காணல ஒரு வேளை யாரும் படிக்கலையோ செய்தியை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கனபேர் செய்தியை படிக்கணும்  ஒரு கருத்தையும் காணல ஒரு வேளை யாரும் படிக்கலையோ செய்தியை

பத்தாயிரம் தமிழர்கள் என்று சொல்லவில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பத்தாயிரம் தமிழர்கள் என்று சொல்லவில்லையே!

கிட்டத்தட்ட இருக்கும்  களுத்துறை , யாழ்ப்பாணம் , பயிற்ச்சி நடக்கிறது வெளியேற வெளியேற மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு இணைக்கப்படுகிரார்கள் தற்போது இணைய சேர்ந்தவர்களின் குடும்ப பின்னணியை ஆராயப்படுகிறது அதன் பின்னர் பயிற்ச்சிக்காக அழைக்கப்படுவார்கள் எனநினைக்கிறன் எங்கள் ஊரில் 500 ற்கு மேல் சேர்ந்திருக்கும் இதுவரை மற்ற ஊர் , மாவட்டங்கள், மாகாணம்க்களை கணக்கெடுத்து பாருங்கள் கிருபன்  இருக்கலாம்  பலர் சிங்களப்பகுதிகளில் பணியாற்றுகிறார்கள் சரளமாக சிங்களம் பேசுவதற்க்காக 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கனபேர் செய்தியை படிக்கணும்  ஒரு கருத்தையும் காணல ஒரு வேளை யாரும் படிக்கலையோ செய்தியை

முனிவர், இவர்களுக்கு சும்மா குந்திக் கொண்டு இருக்க சம்பளம் கொடுக்க, நீங்கள் அதிக வரி கட்டுகிறீர்கள்.

இந்த புரிதல் இருந்தால், எதுக்கு எடுக்கிறாய் என்று அல்லவா கேட்டு இருப்பீர்கள்?

சந்தோசமாக கட்டுங்கள். 10,000 என்ன, ஒரு லட்ச்சத்தினை எடுக்கட்டும்.

46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிட்டத்தட்ட இருக்கும்  களுத்துறை , யாழ்ப்பாணம் , பயிற்ச்சி நடக்கிறது வெளியேற வெளியேற மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு இணைக்கப்படுகிரார்கள் தற்போது இணைய சேர்ந்தவர்களின் குடும்ப பின்னணியை ஆராயப்படுகிறது அதன் பின்னர் பயிற்ச்சிக்காக அழைக்கப்படுவார்கள் எனநினைக்கிறன் எங்கள் ஊரில் 500 ற்கு மேல் சேர்ந்திருக்கும் இதுவரை மற்ற ஊர் , மாவட்டங்கள், மாகாணம்க்களை கணக்கெடுத்து பாருங்கள் கிருபன்  இருக்கலாம்  பலர் சிங்களப்பகுதிகளில் பணியாற்றுகிறார்கள் சரளமாக சிங்களம் பேசுவதற்க்காக 

அரசு, திணறுகிறது, இவர்கள் வேலை நிரந்தரம் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

முனிவர், இவர்களுக்கு சும்மா குந்திக் கொண்டு இருக்க சம்பளம் கொடுக்க, நீங்கள் அதிக வரி கட்டுகிறீர்கள்.

இந்த புரிதல் இருந்தால், எதுக்கு எடுக்கிறாய் என்று அல்லவா கேட்டு இருப்பீர்கள்?

சந்தோசமாக கட்டுங்கள். 10,000 என்ன, ஒரு லட்ச்சத்தினை எடுக்கட்டும்.

 

பல ஏழை தமிழர்கள்  இளைஞர்கள் அவர்கள் குடும்பங்கள் வாழ்கிறது நாதா அதற்க்காகவாது கட்டலாம் நான் மட்டுமா என்ன?  இந்த இளைஞர்களை என்ன செய்யலாம் மிஞ்சி மிஞ்சி  போனால் மத்திய கிழக்கு சென்று வருவார்கள் மிஞ்சுவது ஒரு அல்பமும் ,  ஒரு பைக்குமாக இருக்கும் இங்கிருந்து ஓர் அரச வேலை எடுத்து செல்லட்டுமே இது எனது ஆதங்கம் மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் ராஜா பாராட்டப்பட வேண்டிய விடயம்.....தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தமிழ் பிரதேசங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்...தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும் ....தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்........ பதவி உயர்வு வழங்கு பொழுது  தமிழ் பொலிசார் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கு வராமல் இருந்தால் நல்லது......

வேலை இல்லா திண்டாட்டம் சிங்கள பகுதியில் இருப்பதால் சிங்கள சகோதரர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கிற்கு போலீஸ் காணி அதிகாரம் இல்லாத மாகாண சபை. ஒருவேளை ஆயுதம் இல்லாத ....   ?எல்லாம் மாகாண சபைத் தேர்தலை நடத்து என்று அடம்பிடிக்கும் இந்தியாவையும், சர்வதேசத்தையும் சமாதானம் செய்யும் தந்திரம். சிங்களவன் அவ்வளவு எளிதில் தமிழரை சுதந்திரமாக வாழ விட மாட்டான். அப்படியொரு நல்ல சிந்தனை உள்ளவனாக இருந்திருந்தால் இவ்வளவு இழப்புகளும், வலிகளும் இத்தனை காலங்களாக  நாம் அனுபவித்திருக்க வேண்டியதில்லையே. இருப்பவர்களுக்கே சம்பளம் கொடுக்க வழியில்லை. சீன அரசாங்கம் கொடுக்கப்போகுதோ யாரறிவார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 05:03, putthan said:

நல்ல விடயம் ராஜா பாராட்டப்பட வேண்டிய விடயம்.....தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தமிழ் பிரதேசங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்...தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும் ....தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும்........ பதவி உயர்வு வழங்கு பொழுது  தமிழ் பொலிசார் என்ற எண்ணம் அரசு அதிகாரிகளுக்கு வராமல் இருந்தால் நல்லது......

வேலை இல்லா திண்டாட்டம் சிங்கள பகுதியில் இருப்பதால் சிங்கள சகோதரர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு

தற்போது பலர் பதவி உயர்வு பெற்றுக்கொண்டுதான்  இருக்கிறார்கள் ஆனால் அந்த பதவியை தக்க வைத்துக்கொள்ளமுடிவதில்லை சில தனிப்பட்ட விடயங்கள் மற்றவர்களுக்கு சட்டத்துக்கு மாறாக உதவ நினைப்பது காரணம் தமிர்கள் உதவிக்கு ஆள் இருந்தால் தப்பித்துக்கொள்ள நினைப்பது 

ராணுவத்தில் எனது நண்பர் கோப்றல் , பொலிசில் உதவி பொலிஸ் அதிகாரிகளாக இருந்துவருகின்றனர் .

தற்போது மாற்றலாகிக்கொண்டே வருகிறார்கள் சொந்த ஊர்களுக்கு வேலை கிடைத்ததும் பிற மாவட்டம் அல்லது மாகாணம் வேலை செய்வது கட்டாயம் இலங்கையில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.