Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் செங்கலடியில் வைத்து ரி.ஐ.டி.யினரால் கைது

 
1586228640-arrested-2.jpg
 32 Views

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் . நேற்றிரவு 8.00 மணியளவில் செங்கலடியில் வைத்து ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

முகப்புத்தகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பான பதிவுகள் டக் (tag) செய்யப்பட்டமை – அனுப்பப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

https://www.ilakku.org/?p=48745

 

****

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

விடுதலைப்புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று இரவு மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் 3 மாதகால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று அவரை நேற்றிரவு இரவு  அவரது வீட்டில் வைத்து  கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதான நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/104779

 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டம்; மோகனுக்கு விளக்கமறியல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரும் செங்கலடி செல்லம் சினிமா குழுமத்தின் உரிமையாளருமான கணபதிப்பிள்ளை மோகனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோகன், செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 2ஆம் திகதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

2019 ஆண்டு முதல் கணபதிப்பிள்ளை மோகனின் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களை ஆராய்ந்ததில் பெரும்பாலான பதிவுகள் மற்றும் பகிர்வுகள் வெளிநாட்டில் இருந்து டேக் செய்தவர்களின் பதிவுகள் எனவும் அவற்றில் அதிகமானவை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவையாக இருந்தமையால் அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும்  தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, மோகனிடமிருந்து நவீன கணினி மற்றும் அலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்

வேறு கருத்துகளை மோகன் பதிவேற்றியுள்ளார் எனவும் சந்தேகநபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்குட்படுத்திய போது அவர் அத்தகைய கருத்துகளை பதிவேற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மோகனது கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

மோகன் 74 மணித்தியாலங்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி ஏ.இளங்கோவனினால் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்று (05) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மோகன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவ்வேளையில், சந்தேகநபரான மோகனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

Tamilmirror Online || பயங்கரவாத தடைச்சட்டம்; மோகனுக்கு விளக்கமறியல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.