Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவர் பதவி - ஜெ.நினைவிடம் வரை நீண்ட அதிமுக மோதல்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கட்சி தலைவர் பதவி - ஜெ.நினைவிடம் வரை நீண்ட அதிமுக மோதல்.!

ops-eps-759.jpg

சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டசபைக்கான எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக எம்எல்ஏக்கள் சார்பாக நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தனியாக 66 இடங்களில் வென்றது.

இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது. 63 அதிமுக எம்எல்ஏக்கள் இதில் கலந்து கொண்டனர். 

கார் பார்க்கிங் மோதல்

இதில் கூட்டம் தொடங்கும் முன்பே அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துவிட்டது. அதிமுக அலுவலகத்தில் பார்க்கிங்கிலேயே அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே காரை நிறுத்துவதில் மோதல் ஏற்பட்டது. அங்கேயே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டி கோஷம் எழுப்பியது. இன்னொரு பக்கம் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இன்னொரு கோஷ்டி கோஷம் எழுப்பியது.

உள்ளேயும் மோதல்

பிறகு தொடக்கத்தில் மீட்டிங் கொஞ்சமாக அமைதியாகவே நடந்து இருக்கிறது. ஆனால் போக போக எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அதிமுக எம்எல்ஏக்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது

ஓபிஎஸ் வாதம்

இதில் ஓபிஎஸ் தரப்பு கண்டிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. கட்சியில் நான்தான் முக்கிய தலைவர், நீங்கள் எடுத்த தவறான முடிவால்தான் நாம் தோல்வி அடைந்தோம்.

இபிஎஸ் முதல்வராக இருந்துவிட்டார்.. அவருக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஓபிஎஸ் அமைதியாக இருந்தார். இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் இபிஎஸ் ஆசைப்பட கூடாது.

ஜெயலலிதா இருந்த போது கட்சியில் நான்தான் நம்பர் 2. சட்டசபையிலும் நான்தான் நம்பர் 2.. அனுபவம், கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் எனக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் மீட்டிங்கில் அடித்து பேசி இருக்கிறார்.

இபிஸ் கோபம்

இதற்கு எதிராக பேசிய இபிஎஸ்.. தமிழகம் முழுக்க நான்தான் பிரச்சாரம் செய்தேன். இந்த 66 வெற்றி நான் பெற்றுக்கொடுத்தது.  66 தொகுதிகளில் பல எனது முகத்திற்காக விழுந்த தொகுதிகள். 

தேனி மாவட்டத்தில் கூட உங்களால் முழுமையாக வெல்ல முடியவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுக்க முடியும். நான்தான் எதிர்க்கட்சி தலைவர் என்று இபிஎஸ்ம் உறுதியாக பேசி இருக்கிறார்.

சசிகலா

இதில் சில அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவை மீண்டும் கட்சிக்கு உள்ளே கொண்டு வர வேண்டும். அவர்தான் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சில எம்எல்ஏகள் பேசியதாக கூறப்படுகிறது

வெளியே மோதல்

உள்ளே கூட்டத்தில் இந்த மோதல் நடக்கும் போதே வெளியே கட்சி ஆபிசுக்கு அருகில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதி உள்ளனர். மாறி மாறி கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஓபிஎஸ்தான் எதிர்கட்சித் தலைவர் என்று ஒரு தரப்பு சொல்ல, இபிஎஸ்தான் எதிர்கட்சித் தலைவர் என்று இன்னொரு தரப்பு கோஷம் எழுப்பி பரபரப்பை கூட்டியது.

ஜெ நினைவிடத்தில் மோதல்

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால், கூட்டம் மே 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் மரியாதை நிமித்தமாக இபிஎஸ், ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கும் அதிமுகவினர் மாறி மாறி கோஷம் எழுப்பினார்கள்.. ஐயா போயிடாதீங்க.. யாருக்கும் விட்டு தராதீங்க என்று இபிஎஸ் தொண்டர்கள் அவர் காரை மறித்து கோஷம் எழுப்பினார்கள். 

பதிலுக்கு ஓபிஎஸ்  ஆதரவாளர்களும் ஜெ நினைவிடத்தில் கோஷம் எழுப்பி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் மெரினா வந்த ஓபிஎஸ் - இபிஎஸ் உடனே சில நிமிடங்களில் கிளம்பி சென்றனர். அதிமுகவில் இரண்டு தரப்புக்கும் இடையே உருவாகி உள்ள மோதலால் கட்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/heavy-scenes-in-jayalalitha-memorial-as-aiadmk-failed-to-choose-opponent-leader-between-ops-and-eps-420182.html

டிஸ்கி :

விடாதீங்க தல .. ☺️ எவ்வளவு பணம் ஆனாலும் நான் உங்களிடம் சிஷ்யனாக தியானம் கற்றுக்கொள்ள உள்ளேன் .👍

ops-meditation-jayalalitha-memorial-agar

            தர்மயுத்தம் 2.0 👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனையையும் தீர்க்க குசராத் மொடல் புகழ் மோடி வருவார் போல...😜

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னேனே. பதவி போனபின்னர், எடப்பாடி செல்லாக்காசு ஆகுவார்.

பன்னீர், அதிமுக ஒருங்கிணைப்பாளர். சசிகலா பொது செயலாளர். ஆகவே, இருவரும் சேர்ந்து, இரட்டை இலையினை எடுக்க, அதிமுக அனைவரும் பன்னீர், தினகரன் பின்னால் போவார்கள். சசிகலா வுக்கு பன்னீர் துரோகம் செய்யவில்லை ஆனால் பன்னீருக்கு சசிகலா செய்ததே துரோகம். ஆகவே அதனை நிவர்த்திக்க முயல்வார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.