Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனித் தேசமாக கருதப்படுவதற்கு தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு -விக்னேஸ்வரன் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தேசமாக கருதப்படுவதற்கு தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு -விக்னேஸ்வரன் விளக்கம்

 
vikneswaran.jpg
 100 Views

ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

தமிழர்கள் ஒரு பண்டைய இனத்தவர். தமிழ் பேசும் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். முதலில் சைவர்கள் முழுத் தீவையும்  ஆக்கிரமித்து இருந்தனர். வரலாற்றுக்கு முற்பட்ட சிவன் கோவில்களான நகுலேஸ்வரம் (வடக்கில் கீரிமலை), திருக்கேதீஸ்வரம் (மன்னார் மாவட்டம்), திருக்கோணேஸ்வரம் (கிழக்கு திருகோணமலை மாவட்டம்), முன்னேஸ்வரம் (மேற்கு சிலாபம் மாவட்டம்) மற்றும் தொண்டேஸ்வரம் (தெற்கு தேவேந்திர முனை) ஆகியவை இந்தத் தீவு மக்களின் ஆதி சமயம் சைவம் என்பதனைக் காட்டுகின்றன. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் மற்றும் வேறு பலரின் வெற்றிகள் இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன. தொடர்ச்சியாக சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் சிங்களம் பேசுவோருக்குச் சார்பாக வடக்கு கிழக்கில்  மக்கள் தொகையை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும்,  இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

அரசியல் யாப்பின் சரத்து 29(2) ஆவது பிரிவை நீக்கியதனூடாக ஆங்கிலேயரையும், தமிழ் பேசும் மக்களையும் ஏமாற்றிய சிங்களத் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களை அடிபணியும் இனமாக ஆக்கும் வகையில் அரசாங்கத்தின் ஆட்சியை முழுத் தீவின் மேல் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்தும் வடக்கு கிழக்கில் இன்னமும் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை வைத்திருக்கிறார்கள். எங்களது வளங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தொடர்ந்து நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மொழி பேசுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 60,000 ஏக்கர் அரசாங்க காணிகளையும், 3000 ஏக்கர் தனியார் காணிகளையும் இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது. பலதரப்பட்ட சாக்குப் போக்குகளின் கீழ் அரசாங்க அனுமதியுடன் வடக்கு கிழக்கு பௌத்த பிராந்தியமாக மாற்றப்பட்டு வருகிறது. அரச சேவைகளுக்கு தமிழர்கள் உள்வாங்கப்படுவது மேலும் குறைவடைந்தபடி சென்று கொண்டிருக்கிறது. வேலையின்மை அதிகரித்துள்ளது. தமிழ் பேசத் தெரியாதவர்களே வடக்கு கிழக்கில் காவல் துறையினராக உள்ளனர்.

கொடுக்கப்படும் புகார்கள் சிங்களத்தில் பதியப்பட்டு மொழி பெயர்க்கப்படுகின்றன. முதலமைச்சராக நான் இருந்த போது மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தும் போருக்குப் பின்னரான வடக்கு கிழக்கில் சரியான தேவைகளின் மதிப்பீடோ அன்றி பொருளாதாரத் திட்டமிடலோ மேற் கொள்ளப்படவில்லை. வடக்குக் கிழக்கில் கல்விக்கு மாற்றாந் தாய் மனப்பான்மை காட்டப்படுகிறது. வேறு பல துறைகளிலும் இதே நிலைமை தான். ஒரு தேசம் என்கிற வகையில் தங்களது பாரம்பரிய தாயகத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை மீது எதுவித கட்டுப்பாடும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இல்லை. நாங்கள் ஒரு அடிமைப் படுத்தப்பட்ட இனம் என்று பதிலளித்தார்.

மேலும் இலங்கையில் முதல் நிறுவப்பட்ட தமிழ் அரசியல் கட்சி ‘அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்’ ஆகும். தற்போது 20இற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. தமிழ் மக்களிடையே காணப்படும் இந்தப் பிளவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்,

தமிழர்களாகிய நாங்கள் ஜனநாயகத்தை மிகவும் அக்கறையுடன் பின்பற்றுகிறோம் என்பதையே அது காட்டுகிறது. எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது கட்சிக்கோ ஆதிக்கம் செலுத்தவோ ஆணவப்படுத்தவோ உரிமை வழங்கப்படவில்லை. அது எப்படி இருந்த போதும் கொள்கை மற்றும் நோக்கம் தொடர்பில் அடிப்படையில் பெரும்பான்மையான கட்சிகளிடையே அதிக வேறுபாடுகள் கிடையாது.

ஒட்டுமொத்தமாக சமூகத்தைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். உதாரணத்திற்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்.

 

https://www.ilakku.org/?p=49125

 
 
  • கருத்துக்கள உறவுகள்

தானும், தனது வயிறும் என்பதிலிருந்து, தானும் தனது சொந்தங்களும் என்னும் அளவுக்கு எமது இனம் வளர்ந்துள்ளது!

இதுவும் கொஞ்சம் தாண்டி...தானும் தனது இனமும் என்னும் அளவுக்கு வளர்ந்த பின்னர் தேசத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்!

அது வரை...இந்தக் கோட்பாடு பத்திரமாக இருக்கட்டும்!😉

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

தானும், தனது வயிறும் என்பதிலிருந்து, தானும் தனது சொந்தங்களும் என்னும் அளவுக்கு எமது இனம் வளர்ந்துள்ளது!இதுவும் கொஞ்சம் தாண்டி...தானும் தனது இனமும் என்னும் அளவுக்கு வளர்ந்த பின்னர்

அதையும் தாண்டி, தானும் தான் சார்ந்த மனிதமும் என்று உயர்ந்து, அதையும் தாண்டி, நாமும் நாம் சேர்ந்த அனைத்து இயற்கையும் ஒன்றிணைந்து வாழ வழி சமைப்போம்! இதைத்தான் இந்துமதம் சொல்கிறது. ... அர்த்தமுள்ள இந்துமதம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

அதையும் தாண்டி, தானும் தான் சார்ந்த மனிதமும் என்று உயர்ந்து, அதையும் தாண்டி, நாமும் நாம் சேர்ந்த அனைத்து இயற்கையும் ஒன்றிணைந்து வாழ வழி சமைப்போம்! இதைத்தான் இந்துமதம் சொல்கிறது. ... அர்த்தமுள்ள இந்துமதம்.

தவறு.....!
இந்து மதம் அதைச் சொல்லவில்லை..!
அதனுள் வலிந்து உள் வாங்கப்பட்ட சைவ மதம் தான்...நீங்கள் குறிப்பிட்டதைக் கூறிகின்றது!
இந்து மதம் தான் வருணாச்சிர தர்மத்தை, வளர்த்தெடுத்தது! 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.