Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடங்கியது முல்லைத்தீவு : செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு இடையூறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும்  முழுமையாக முடங்கியுள்ளன.

இந்நிலையில் குறித்த கள நிலைமைகளை அறிக்கையிட சென்ற ஊடகவியலாளருக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

 

received_258967035927600.jpeg

 

 

 

received_314685883499633.jpeg

 

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றினை அடுத்து அரசாங்கம் நேற்று இரவு 11 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை முழுமையான பயணத்தடையினை அறிவித்திருந்தது.

 

 

 

received_768795423787422.jpeg

 

 

 

vlcsnap-2021-05-14-13h06m48s989.png

 

 

தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் சுகாதார பிரிவினருக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு சுகாதார பிரிவும், பாதுகாப்பு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் முழுமையாக முடங்கியுள்ளது.

 

 

 

received_927399831391173.jpeg

 

 

 

vlcsnap-2021-05-14-13h06m58s751.png

 

 

இந்நிலையில் மாங்குளம் பகுதியில் வீதித்தடையில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற செயற்பாடுகளை வீடியோ புகைப்படம் எடுக்க  ஊடகவியலாளருக்கு தடை விதித்தனர்.

இதனை தொடர்ந்து மாங்குளம் நகரப்பகுதியில் கடைகள் பூட்டப்பட்டிருக்கின்ற நிலைமைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மாங்குளம் நகர் பகுதியில் நின்ற இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

 

 

received_1354170504969836.jpeg

 

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை காரணம் காட்டி வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவ சோதனை சாவடிகளும் இராணுவ கெடுபிடிகளும் காணப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் தொடர்ந்து  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

முடங்கியது முல்லைத்தீவு : செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு இடையூறு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிழம்பு said:

மாங்குளம் நகரப்பகுதியில் கடைகள் பூட்டப்பட்டிருக்கின்ற நிலைமைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மாங்குளம் நகர் பகுதியில் நின்ற இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனாவால் கடைகள் பூட்டப்பட்டிருந்தால் அதனை புகைப்படம் எடுப்பதை  இராணுவம் ஏன் தடுக்க வேண்டும்? கொரோனாவுக்குள் புதைந்திருக்கிறது இவர்களின் கோர முகம் என்பதே  உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிழம்பு said:

இதனை தொடர்ந்து மாங்குளம் நகரப்பகுதியில் கடைகள் பூட்டப்பட்டிருக்கின்ற நிலைமைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மாங்குளம் நகர் பகுதியில் நின்ற இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் பூட்டிய கதவுகளின் இடுக்குகள் ஊடாகவும் கொரோனாக்கள் வெளியேறும் வல்லமை கொண்டவை. அதனைத் தடுக்கும் திறன் இராணுவத்துக்கும் இல்லை, ஆகவேதான் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கமுயலும் ஊடகவியலாளர்களையும் பாதுகாக்கும் நோக்குடன்தான் இராணுவம் செயல்படுவதாகக் கொள்ளலாமே. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இருக்கும்.  அவ்வளவு மனிதாபிமானம் நிறைந்தவையெல்லோ. கல்லறைகளை கிளறி இன்பம் காணும் மனப்பிறழ்ச்சி கொண்டதுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.