Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2021/1215958

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, தமிழ் சிறி said:

பயணத்தடை அமுலில் இருக்கும் போது... யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் – 15 பேர் தனிமைப் படுத்தலில்!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2021/1215958

வடமராட்சி சனம் குசும்பு புடிச்ச சனம்.....😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வடமராட்சி சனம் குசும்பு புடிச்ச சனம்.....😎

 

42 minutes ago, தமிழ் சிறி said:

பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் குறித்த பகுதிக்கு சென்றபோது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.

இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின், தொலைபேசியில் காணப்பட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதுகும்... பிறந்தநாள் நடக்குது என்று, ஆரோ  போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். :grin:

வந்த அதிகாரிகள்... பிறந்த நாள் கொண்டாடியவரின், 
கைத் தொலைபேசியில் இருந்த படங்களை பார்த்து, 
எல்லாரையும் கொத்தாக... பிடித்து விட்டார்கள். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 

அதுகும்... பிறந்தநாள் நடக்குது என்று, ஆரோ  போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். :grin:

வந்த அதிகாரிகள்... பிறந்த நாள் கொண்டாடியவரின், 
கைத் தொலைபேசியில் இருந்த படங்களை பார்த்து, 
எல்லாரையும் கொத்தாக... பிடித்து விட்டார்கள். 🤣

கணவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து ... சாப்பிட உட்கார்ந்தார்.
"வர வர உன் சாப்பாடு நல்லா இல்லை, டேஸ்ட் எதுவும் தெரியவில்லை."என்றார். (கொஞ்சம் நன்றாக சமைக்கக் கூடாதா என்பது தான் இதன் பொருள்) 😞
மனைவி அமைதியாக எழுந்தாள், அவள் கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி ஆம்புலன்ஸ் அழைத்தாள்.😡
..
"அவருக்கு டேஸ்ட் தெரியவில்லை .."
கொரோனா சாத்தியம் போல் தெரிகிறது...
ஆம்புலன்ஸ் வந்தது, கணவரை அழைத்துச் சென்று 7 நாள்கள் தனிமைப்படுத்தியது.
மருத்துவமனையில் இருந்த கணவனை, மனைவி அழைத்து, கேட்டார்: *"இப்போதாவது சுவை தெரிந்து இருக்குமே?"*😛
எல்லோரும் இக்கதையை கேட்டு இருப்பீர்கள். ஆனால், இப்போது கதையில் புதிய திருப்பத்தை காண்க:
மறுபுறம், கணவரிடம் கேட்கப்பட்டது.
"உங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் , யார்?"
கணவர் அமைதியாக கூறினார் ..
"என் மனைவி,என் மாமியார், என் மாமனார்,
என் மச்சான்"
இப்போது அத்தனை நபர்களும் மருத்துவமனை படுக்கையில் இருக்கும்
கணவனை *முறைத்துக்* *கொண்டு* இருக்கிறார்கள்!
*நீதி:*
வாய் இல்லா பூச்சியை அதிகம் சித்திரவத செய்வது சரியல்ல!!!!
பழி வாங்க ஆரம்பிச்சா 🙃தாங்க முடியாது..
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:
"அவருக்கு டேஸ்ட் தெரியவில்லை .."
கொரோனா சாத்தியம் போல் தெரிகிறது...
ஆம்புலன்ஸ் வந்தது, கணவரை அழைத்துச் சென்று 7 நாள்கள் தனிமைப்படுத்தியது.

சாமியார் போன்ற உறவுகள் யாழ்களத்தில் இருப்பதால் பலருக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகியுள்ளது.

காரணம் 👇

 

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் எதையோ சொல்ல வாறார் போல் தெரிகிறது.  ஒருவேளை அது  அவரின் அனுபவமாயிருக்குமோ......? 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு, வெறுப்பு, பழிவாங்கல்களை கொரோனா மூலம் சாதித்து விடலாம், கேள்வி கிடையாது என்று புத்திசாலித்தனமாக காரியங்களை கையாள்வதாக நினைக்கலாம். அதே கொரோனா நாம் நினையாத விதத்தில் எம்மையும் நாம் விரித்த வலையிலே சிக்க வைத்துவிடும் என்று மிகத் தெளிவாக சாமியார் விளக்கியிருக்கிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/5/2021 at 12:31, satan said:

சாமியார் எதையோ சொல்ல வாறார் போல் தெரிகிறது.  ஒருவேளை அது  அவரின் அனுபவமாயிருக்குமோ......? 

ஒரு சில ஊர்களுக்கு வாழ்க்கைப்பட்டு போனால் அனுபவங்கள் மகாபாரதத்தை விட பெரிசாய் இருக்கும்....😄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு சில ஊர்களுக்கு வாழ்க்கைப்பட்டு போனால் அனுபவங்கள் மகாபாரதத்தை விட பெரிசாய் இருக்கும்....😄

ஆஹா..... ஆமோதிக்கிறேன் சாமி. அதுக்கு வாழ்க்கைப்பட்டால் கொப்புக்கு கொப்பு தாவித்தான் ஆகவேண்டும். என்ன செய்வது? ஆரம்பத்தில் இது தெரிவதில்லை, பட்டுத்தான் தெளியவேண்டியிருக்கு. பெற்றோர் கால் தேய நடந்து தெரிந்து எடுப்பது இதற்குத்தான். அதனால் பாதிச்சுமையை அவர்கள் சுமப்பார்கள். இப்போ மனதை தேற்றிக்கொள்ள வேண்டியான் சாமி. இல்லை வனவாசம் கிளம்ப வேண்டியதுதான்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, satan said:

ஆஹா..... ஆமோதிக்கிறேன் சாமி. அதுக்கு வாழ்க்கைப்பட்டால் கொப்புக்கு கொப்பு தாவித்தான் ஆகவேண்டும். என்ன செய்வது? ஆரம்பத்தில் இது தெரிவதில்லை, பட்டுத்தான் தெளியவேண்டியிருக்கு. பெற்றோர் கால் தேய நடந்து தெரிந்து எடுப்பது இதற்குத்தான். அதனால் பாதிச்சுமையை அவர்கள் சுமப்பார்கள். இப்போ மனதை தேற்றிக்கொள்ள வேண்டியான் சாமி. இல்லை வனவாசம் கிளம்ப வேண்டியதுதான்.  

வனவாசமா? யார் சோறு போடுவா? 😂

Vignesh on Twitter: "சோறு முக்கியம் ! சோறுதான் முக்கியம் ! சோறு மட்டும்தான்  முக்கியம் ! #SaapattuRaman… "

  • கருத்துக்கள உறவுகள்

காசி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, satan said:

காசி?

குமாரசாமி... காசியென்ன காடு கரம்பைக்கு போனாலும் சோத்துக்காக எதையும் செய்வான் 😄

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுகாரிக்கு தெரியாமத்தானே கிறுக்கிறியள்.  இல்லை... இண்டைக்கு திண்டாடப்போறியள் சோத்துக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.