Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருவிழாவையொட்டி யுத்தமற்ற பிரதேசமாக மடு தேவாலயம்: மன்னார் ஆயர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 27 6:35:13 EEST 2007

மடுமாதா திருவிழாக் காலத்தில் போர்நிறுத்தம் செய்யக் கோரிக்கை

ஜூலை 2ஆம் திகதி ஆரம்பமாகும் மடு மாதா திருவிழாக் காலத்தில் பக்தர் கள் அமைதியாக கலந்துகொள்ள உத வும் வகையில் தற்காலிகமாக போர் நிறுத் தத்தைக் கடைப்பிடிக்கும்படி போரில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புகளிடம் மன் னாரிலுள்ள கத்தோலிக்க தேவாலயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

போர்ச் சூழ்நிலை இருந்த போதி லும் மடுத் திருவிழா நடைபெறும் என் றும், பக்தர்கள் அதில் அமைதியாகக் கலந்துகொள்ளும் வகையில் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் தேவாலய பேச்சாளர் ஒருவர் தெரி வித்தார்.

இதேவேளை வன்னி மாவட்ட ஐ.தே. கட்சி அமைப்பாளர் டாக்டர் ஜயலத் ஜய வர்தன செஞ்சிலுவைச் சர்வதேச குழு வுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் அரசாங்கத்தையும் தமிழீழவிடுதலைப் புலிகளையும் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வலியுறுத்து மாறு கேட்டுள்ளார். மடுமாதா திரு விழாவில் கலந்துகொள்ள வரும் மக்களின் வச திக்காக மடுவுக்குச் செல்லும் பாதை யைத் திறந்துவிடுமாறும் அவர் கேட் டுக் கொண்டுள்ளார்.

(அப)

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் சாகேக்கை போர்நிறுத்தம் செய்ய சொல்ல மாட்டினமோ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் சாகேக்கை போர்நிறுத்தம் செய்ய சொல்ல மாட்டினமோ???

வடிவேல் 007 சரியான கேள்வி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடு முடிய நல்லூர் வரும். அப்புறம் செல்லச்சன்னதி, பிறகு வல்லிபுரம், பிறகு கிறிஸ்மஸ் விடுமுறை என்று தொடர்ந்து போர்நிறுத்தம் செய்ய வேணும். அப்ப தான் காலத்தை இழுத்தடிக்கலாம்.

அப்ப இப்ப போர் நிறுத்தம் நடைமுறையில் இல்லையோ...?????

திருவிழாவையொட்டி யுத்தமற்ற பிரதேசமாக மடு தேவாலயம்: மன்னார் ஆயர்.

மன்னார் மடு தேவாலயத் திருவிழாவையொட்டி அப்பகுதியை யுத்தமற்ற பிரதேசமாக தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா இராணுவமும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று மன்னார் ஆயர் ராயப்பு யோசப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

தேவாலயத்துக்கு வருவோருக்கான மன்னார் வீதியை தமிழீழ விடுதலைப் புலிகள் திறந்துவிட உள்ளனர். மடு தேவாலயத் திருவிழா குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தினோம்.

இப்பகுதியில் தாக்குதல்களை நிறுத்த சிறிலங்கா இராணுவம் ஒப்புக் கொண்டது. அத்தகைய உறுதிமொழியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தைச் சந்தித்தோம். விடுதலைப் புலிகளும் அதனை ஒப்புக்கொண்டனர் என்றார் அவர்.

-Puthinam-

எந்தவித சப்தங்களும் சலனங்களும் அற்று சற்று அமைதியடையடடும் தமிழ் மக்கள். இறைவனின் அருளால் சில நாட்கள் இருதரப்பும் போர்நிறுத்தம் அறிவித்தால் அதனால் பலனடையும் பல்லாயிரம் உயிர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சனி 30-06-2007 00:14 மணி தமிழீழம் செந்தமிழ்

மடுதேவாலயப்பகுதியை யுத்த வலயமற்றபிரதேசமாக பிரகடணம்

மன்னார் ஆயர் ராசப்பு ஜோசெப் அவர்கள் சிறீலங்கா படையினருடனும் விடுதலைப்புலிகளுடனும் பேசியதன் பிற்பாடு மடுதேவாலயப்பகுதியை யுத்தவலயமாக பிரகடணப்படுத்துவதற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யூலைமாதம் ஆரம்பப்பகுதியில் இருந்து ஓகஸ்ட் நடுப்பகுதிவரை இப்பிரதேசம் யுத்தவலயமற்ற பிரதேசமாக இப்பிரதேசம் இடம்பெறும் எனத்தெரியவருகிறது.

யூலைமாதம் 2 ம் திகதி முதல் ஓகஸ்ட் 15 ம் திகதி வரை மடுதேவாலயத்தில் கோவில் திருவிழா இடம்பெறுவதாகவும் நாட்டின் பலபகுதிகளிலும் பெருமளவிலான பத்தர்கள் இவ்ஆலயத்திற்கு செல்வதுவும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

பதிவு.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களா?

99ம் ஆண்டு இதே மடு தேவாலயத்தில் 50க்கு மேற்பட்ட பக்களை வேணுமென்றே அருகில் இருந்தபடி தாக்குதல் நடத்திக் கொலை செய்த சிறிலங்கா அரசு இப்பகுதியில் யுத்த ஓய்வுக்குத் தயார் ஆகின்றது என்றால் அதற்குள் மற்றுமொரு காரணமும் இருக்கக் கூடும்.

சமீபகாலங்களாக மன்னார் பகுதி நோக்கிய புலிகளின் தாக்குதலும், அதனால் ஏற்பட்ட இழப்புக்களைச் சிங்கள அரசு மூடி மறைத்தாலும், இந்த யுத்த ஓய்வினைத் தனக்குச் சார்பாக பயன்படுத்தலாம்.

எது எப்படியோ, மக்கள் மடு தேவாலயத்துக்கு நிம்மதியாகச் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் அது சந்தோசத்துக்குரிய ஒரு விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இதுதான் முக்கியம்!!! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

தை மாதத்தில் இருந்து மடுப்பகுதியில் தாக்குதல் நடத்திவந்த 57வது டிவிசனை மீள்சீரமைக்கக் கொஞ்சக் காலம் தேவை.. அதற்குத்தான் திருவிழா ஓய்வு. திருவிழா முடிந்தவுடன் மீண்டும் மடுப்பகுதியைக் கைப்பற்றும் முயற்சி கட்டாயம் தொடங்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.