Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 30 7:05:20 EEST 2007

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம்

2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் கலாநிதி ரஜிவ விஜயசிங்கவுக்கும், போர் நிறுத் தக் கண் காணிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இது குறித்துக் கருத்திணக்கம் காணப்பட்டது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடை பெற்ற சந்திப்பில் போர் நிறுத்த ஒப்பந் தத்துக்கு புத்துயிர் கொடுப்பது குறித்து நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண் காணிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே நம்பிக்கையை உருவாக் கும் பொருட்டும், இலங்கையில் சமாதா னத்தை உருவாக்குவதற்கு அதிக அளவில் உதவும் வகையிலும் புதிய அணுகுமுறை கள் கண்டறியப்பட வேண்டும் என்று இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதனை மையக் கருவாக வைத்து, போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கான புதிய னவும் சூழ்நிலைக்கு உகந்தவையுமான புதிய வழிமுறைகளை வகுப்பது அவசியம் என் பதனை இரண்டு தரப்புகளும் ஏற்றுக் கொண்டன.

எனினும் அந்த வழிமுறைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய கண்காணிப்புக் குழுவுக்குள்ள வரை யறைக்குள் அமைய வேண்டும் என்று இணங் கப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், விசாரணைகளை நடத்துவது மட்டும் கண் காணிப்புக் குழுவின் பணியல்ல என்றும்

முறைப்பாடுகள் குறித்துத் தக்க நடவ டிக்கை எடுப்பதும், தவறுகளைத் திருத்து மாறு அழுத்தம் கொடுப்பதும் குழுவின் பொறுப்பு என்றும்

சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பேச்சுக்களின் போது சுட்டிக்காட்டி னார்.

காண்காணிப்புக் குழுவினரின் எண் ணிக்கை தற்போது குறைந்திருப்பது குறித் தும் அதனால் அதிக சர்வதேச கண்காணிப் பாளர்களை இணைத்துக் கொள்வது குறித் தும் இரு தரப்புகளும் கருத்துப் பரிமாறிக் கொண்டன.

சர்வதேச கண்காணிப்பாளர்களின் எண் ணிக்கை குறைந்தபோது யுத்த நிறுத்த மீறல்கள் அதிகரித்தன. எனினும் நாம் இன்னமும் எங்கள் பணியை அர்ப்பணிப் புடனேயே செய்து வருகிறோம் என்று அதன் தலைவர் லார்ஸ் ஜொகான் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.

இவை குறித்து அடுத்த வாரமும் கூடி ஆராய் வதென வியாழனன்று நடந்த சந்திப்பில் முடிவாகியது. (அ1)

நன்றி - உதயன்

போர்நிறுத்த மீறல்கள் குறித்த எந்தவிதமான தீர்ப்புக்களையும் தாங்கள் வழங்கப் போவதில்லை : போ.க.குழு.

போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பான கண்காணிப்புக்களை புதிய முறையில் நடைமுறைப்படுத்துவது பற்றி போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புதிய விடயங்களை உள்ளடக்கி கண்காணிப்புப் பணிகளை முன்னெடுத்துச் செல்லவது பற்றி கடந்த வியாழக்கிழமை அரசாங்க சமாதானச் செயலகத்தின் செயலாளர் ரஜிவ் விஜயசிங்கவுக்கும், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜென்ரல் லார்ஸ் சொல்பேர்குக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய புதிய முறைகளை உள்ளடக்கி செயல்திறன் மிக்க வகையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார் சொல்பேர்க்.

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் முன்னரைப் போல சிறந்த முறையில் செயற்பட வேண்டுமாயின் சர்வதேசக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை கண்காணிப்புக் குழுவின் தலைவர், அரசாங்க சமாதானச் செயலகத்திடம் வலியுறுத்தியுள்ளார். கண்காணிப்புக் குழு அண்மையில் பல குறைபாடுகளை எதிர்நோக்கியிருந்தது. கண்காணிப்பளார்களின் எண்ணிக்கை குறைவு, வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்றார் கண்காணிப்புக் குழுவின் தலைவர்.

எனினும் போர்நிறுத்தக் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்கு நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவே உள்ளோம். மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து முறைப்பாடுகளைப் பெறவும் தயாராகவே உள்ளோம் என்றார் அவர். இதேவேளை, இலங்கையில் வன்முறைகள் அதிகரித்திருப்பதால் போர்நிறுத்த மீறல்கள் குறித்த எந்தவிதமான தீர்ப்புக்களையும் தாங்கள் வழங்கப் போவதில்லையெனவும், எனினும், போர்நிறுத்த மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைத் தாம் தொடர்ந்தும் பெற்றுக்கொள்வோம் எனவும் கண்காணிப்புக் குழுவினர் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

-Sankathi-

புலிகள் தாங்களாக விட்ட பகுதிகளை விட குடுமிமலையில் இளப்புக்கள் அதிகமோ...??? முன்னேற்றம் நடத்தை தேவையான படையை சேர்த்து பயிற்ச்சி அளிக்க இன்னும் மூண்று மாதம் வேணும் அதுவரை, போர் நிறுத்தம் செய்வது நல்ல யோசனைதான்....!

2002-இல் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான போது இருந்த எல்லைகளுக்கு சிறிலங்கா அரசபடைகள் திரும்பாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்கமுடியாது. கண்ணில்லாத கண்காணிப்புக்குழுவுக்கு இது தெரியாதா என்ன?

Edited by Norwegian

களத்தின் தன்மை நிர்ணயிக்கப்படுவது விடுதலைப்புலிகளின் கைகளில் மட்டுந்தான் தங்கியுள்ளது. உலகமோ கண்காணிப்புக் குழுவோ இலங்கையரசோ அதனைச் செய்யும் நிலையில் இல்லை. இதை அனைவரும் புரிந்தேயுள்ளனர். இந்தப் பேச்செல்லாம் இன்னும் ஏதோ இருக்கின்றதென்று காலத்தை இழுத்தடிக்கும் பேய்க்காட்டல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் கண்காணிப்புக் குழுவின்ட உயிர்ப்பு எண்டது சிறிலங்காவின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அழுத்தங்களுக்கு மகிந்த தேடுற தற்காலிக வழி. அதுக்கு உந்தக் கண்காணிப்புக் குழுவும் துணை போகின்றது. தமிழ் சனம் சாகும்போது தட்டிக் கேட்க வக்கிலாத இவர்கள் திரும்ப கணிகாணிக்கப் போய் என்னத்தைப் புடுங்கப் போகினம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.