Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள்: கலாசார படுகொலையின் வெளிப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள்: கலாசார படுகொலையின் வெளிப்பாடு

கனடா பள்ளியில் 215 குழந்தைகளின் எலும்பு கூடுகள்:  கலாசார படுகொலையின் வெளிப்பாடு

 

ஒட்டாவா,

கனடா நாட்டில் கடந்த 1840ம் ஆண்டில் கல்வியில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.  இதன்படி, குழந்தைகள் வளர தொடங்கியதும் அவர்களை குடும்பத்தில் இருந்து பிரித்து, பள்ளி கூடத்திலேயே தங்கி படிக்கும் நடைமுறை அது.


உறைவிட பள்ளி கூடங்களாக செயல்பட்ட இவை, பெருமளவில் கிறிஸ்தவ தேவாலயங்களால் நடத்தப்பட்டு வந்துள்ளன.  இதுபோன்ற பள்ளி கூடங்களில் படித்த குழந்தைகளில் 1.5 லட்சம் பேர் பாலியல் வன்முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர்.

இந்த பள்ளி கூடங்களில் படித்தவர்களில் 4,100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இதுதவிர, கணக்கில் வராத 215 குழந்தைகளின் உடல்கள் சமீபத்தில் பள்ளியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  அவர்களில் 3 வயது குழந்தையும் அடங்கும்.

கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதி வரை உறைவிட பள்ளி நடைமுறை தொடர்ந்துள்ளது.  இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள கம்லூப்ஸ் இந்தியன் உறைவிட பள்ளி கடந்த 1978ம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த சூழலில், அந்த பள்ளியில் ரேடார் நிபுணரின் உதவியுடன் பூமிக்குள் கதிர்களை ஊடுருவ செய்து, உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.  தொடர்ந்து 6 ஆண்டுகள் இந்த நடைமுறை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இவை கலாசார படுகொலை என ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்த செய்தியை அறிந்து எனது மனம் உடைந்து போனது.  நம்முடைய நாட்டின் வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.  வலியை உண்டு பண்ணும் நினைவூட்டல் இது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பள்ளியில் படித்த குழந்தைகள் சமூகத்தின் எந்த குடும்பத்தில் உள்ளனர் என்று கண்டறியும் பணியில் அந்நாட்டின் கெம்லூப்ஸ் டி செக்வெபம் என்ற அமைப்பு ஈடுபட்டு உள்ளது.  வருகிற ஜூன் மத்தியில் முதற்கட்ட ஆய்வு முடிவுகள் வெளிவரும் என கூறப்படுகிறது.

 

https://www.dailythanthi.com/News/World/2021/05/29130159/Skeletons-of-215-children-at-a-Canadian-school-an.vpf

  • கருத்துக்கள உறவுகள்

பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சம் மீட்பு ; தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனட பிரதமர் உத்தரவு

பழங்குடியின பள்ளியில் 215 குழந்தைகளின் எச்சம் மீட்பு ; தேசிய கொடியினை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கனட பிரதமர் உத்தரவு

பல நாட்கள் அழுத்தத்திற்குப் பின்னர், ஒட்டாவாவில் அமைந்துள்ள பாராளுமன்றத்தின் அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

கனடாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிசு கொலம்பியா இந்த வாரம் 215 குழந்தைகளின் எச்சங்கள் பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1000.jpeg

அதையடுத்து பழங்குடி சமூகத் தலைவர்கள் உட்பட பலரும் கனடா முழுவதும் கொடிகளைக் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர் .

அந்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஜஸ்டின் ட்ரூடோ, தனது டுவிட்டர் பதிவில் இந்த உத்தரவினை அறிவித்தார்.

``கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்பட்டு வந்த காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி எனப்படும் மிகப்பெரிய பழங்குடியின குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளியில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிந்த சடலங்கள் பழங்குடி மக்களுடைய சடலங்கள் தான்” என Tk'emlúps te Secwépemc பழங்குடியினர் தலைவர் ரொசன்னா கசிமிர் உறுதிபடுத்தியுள்ளார். 

தரைக்கு அடியில் இருக்கும் பொருட்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மூலம் உடல்களை கண்டுபிடித்த அவர், இன்னும் தளத்தில் தேடல் முடியவில்லை என கூறினார்.

மேலும் கசிமிர், ``கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க குழுவின் 2015 ஆம் ஆண்டு அறிக்கை படி, கனடாவின் பழங்குடியினர் அனைவரையும் மத மாற்றும் பணியை அரசு செய்த போது நாடு முழுவதும் 1,50,000 சிறுவர்கள் இது போன்ற குடியிருப்பு பள்ளிகளுக்கு அழைத்துவரப்பட்டனர். 

அவர்களுள் 6,000 க்கும் மேற்பட்டோர் கலாசார இன படுகொலை செய்யப்பட்டனர். இறந்த குழந்தைகளின் மரணத்துக்கு எந்த காரணங்களும் ஆவணங்களும் இல்லை. முழுமையான பதிவுகள் எதுவும் இல்லாததனால் உண்மையான இறப்பு எண்ணிக்கையை கூற இயலாது. 

1890 முதல் 1978 வரை செயல்பட்ட இந்த பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்க கூடும்” என கூறப்படுகிறது. 1990 களில் தான் கனடாவில் இது போன்ற பள்ளிகள் மூடப்பட்டன.

கனட சட்டமன்ற தலைவர் பெர்ரி பெல்லக்ராட், “பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளியில் 215 குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போன்ற சடலங்கள் கிடைக்கும் நிகழ்வு புதிது அல்ல என்றாலும், வரலாற்றில் கசிந்திருக்கும் ரத்தத்தினை நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது” என கூறினார்.

 

https://www.virakesari.lk/article/106558

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்றாவது ஒரு நாள் இதே சம்பவம்  போல் ஈழத்திலும் நினைவு கூரப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

என்றாவது ஒரு நாள் இதே சம்பவம்  போல் ஈழத்திலும் நினைவு கூரப்படும்.

காலங்கடந்த நினைவு கூரலாகவே இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.