Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய இராணுவம் செய்ய முடியாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது: கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் செய்ய முடியாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது: கோத்தபாய [திங்கட்கிழமை, 2 யூலை 2007, 15:14 ஈழம்] [ப.தயாளினி]

இந்திய அமைதிப் படையால் முடியாததை சிறிலங்கா இராணுவப் படையினர் செய்துள்ளனர் என்று கிழக்குப் பிரதேச இராணுவ நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு பாதுகாப்புத் தொடர்பாக பௌத்த சமய மத குருக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது:

பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக இராணுவத்தினரும், காவல்துறையினரும் மிகவும் புத்திசாதுரியமாகச் செயற்பட்டு வருகின்றனர். புத்திசாதுரியமான செயற்பாடுகளினால் கிழக்கில் படையினர் பாரிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர். புலிப் பயங்கரவாதிகளைப் பலவீனப்படுத்தாமல் எந்த வகையிலும் அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தையை நடத்த முடியாது.

இந்திய அமைதிப் படையால் முடியாததை சிறிலங்கா இராணுவப் படையினர் செய்துள்ளனர். தொப்பிக்கலப் பகுதியைத் தவிர கிழக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் படையினர் தம்வசப்படுத்தி, அப்பிரதேசப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

புலிகளுடனான படையினரின் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. படையினரால் பெறப்பட்ட வெற்றியை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம். பயங்கரவாதத்தை இந்தச் சந்ததியுடன் தோற்கடிக்க வேண்டும். அதனை அடுத்த தலைமுறையினருக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்றார் கோத்தபாய ராஜபக்ச.

puthinam

நாங்களும் தமிழீழ அரசு காண்பதை மற்ற சந்ததிக்கு விட மாட்டோம். சிங்களவரோடு இந்த தலை முறை ஒரு முடிவுக்கு வந்து விடும் கோத்தபாய அவர்களே

கவலை வேண்டாம்

செத்த பாம்பை அடிப்பது பெரிய வீரம் இல்லை என்று கோத்தபாயாவிற்கு தெரியாமல் போச்சு.

புலிகளாக விட்டிட்டு போன பிரதேசங்களை இவ்வளவு நாளாக பிடிச்சுபப்போட்டு இப்ப வாய்ச்சவாடலை பாருங்கோவன். சும்மா போற ஓணானை பிடிச்சு வேட்டிக்குள்ளை விடுறார் கோத்தபாய

படையினரின் வெற்றி , அரசின் வெற்றி இது என்ன புதுக்கதை விடுகிறார் கோமண்ட தலையன் கோத்தபாய.இப்படியான லூசு தனமான போச்சுக்களுக்கு கைதட.டுவதற்கு கூட காசு கொடுத்தாலும் யாரும் தட்டுவினமே

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் மார்தட்டினாலும் கிழக்கில் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இந்நிலை தொடர்ந்து நீடிக்காது என்பதை சிங்கள அரசும் உணர்ந்துதான் உள்ளது..

இந்தியனாமி தமிழீழம்முழுவதையும் கட்டுக்கை கொண்டு வரேல்லை சரி...அதை இலங்கை படை செய்து விட்டது எண்டது உண்மையா...??? அதுசரி குடும்பி மலையை இன்னும் பிடிக்கேல்லை, ஒருவேளை பிடிச்சா தொப்பிகலவை பிடிச்சது எண்டு சொல்லாமா..?? குடுமி மலை புலிபாஞ்ச கல் எல்லாம் காட்டுக்கையா இருக்கு...???

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலை காட்டுப் பிரதேசத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது சிங்களப் படைகளுக்கு இயலாத காரியம். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் மக்கள் வாழும் இடங்கள் சிங்களப் படைகளினதும் ஒட்டுப்படைகளினதும் ஆதிக்கத்திற்குள் வந்துள்ளன என்பனவும் உண்மையானதே.. ஒரு போலியான தேர்தலை நடாத்தி சிங்கள அரசுக்கு சேவகம் செய்வோரை மாகாண சபையில் அமரச் செய்து தமிழ்த் தேசியம் நலிவடைந்து விட்டதாகக் காண்பிப்பதும், தமிழர் தாயகம் என்று எதுவுமில்லை என்று சாதிப்பதுமே சிங்கள அரசின் நோக்கம்.. இவற்றை எவ்வாறு எதிர்கொண்டு தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவது என்பதுதான் தமிழர்கள் முன்னுள்ள இன்றைய சவால்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பொதுத்தேர்த்தலில் ரனில் மாமாவுக்கு என்ன நடந்தது என்பது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குச் சரியான பதிலைத் திரு இளந்திரையன் வழங்கியுள்ளார். அவர் சொல்வது போலக் கோத்தபாயாவிற்கு வரலாறே தெரியாது அல்லது, சிங்கள மக்களுக்குப் படம் காட்டக் கதைக்கின்றார்.

இளந்திரையன்:

இந்திய அமைதிப்படை செய்ய இயலாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கு வரலாறும் தெரியவில்லை- படைத்துறை வரலாறும் தெரியவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தொப்பிக்கல என்று சிங்களப் பெயர் மூலம் அழைக்கப்படுகின்ற தூய தமிழ்ப் பகுதியான குடும்பிமலை பகுதியில் இந்தியப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். இன்று வரை சிறிலங்கா இராணுவத்தால் அந்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. எதைச் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. கிழக்கில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்துள்ள குழுவினர் ஒன்றும் முதலாவது துரோகிகள் அல்ல. இதற்கும் முன்னர் துரோகிகள் அங்கிருந்தனர். அவர்கள் எதனைச் சாதித்தார்கள்? தமிழின உணர்வாளர்கர்ளை இவர்களால் காட்டிக்கொடுக்க முடியும் அவ்வளவுதான். படைப்பிரிவு ரீதியாக அக்குழுவினர் சாதிப்பார்கள் என சிங்களம் நினைத்தால் ஏமாந்துதான் போவார்கள். அவர்கள் துரோகிகள்- காட்டிக் கொடுப்பவர்கள் அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.