Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கப்பல் விபத்து: இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்

 
11-2.jpg
 10 Views

‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும், கொழும்பு கடல் எல்லைக்குள் தீப்பிடித்து விபத்துக்குள்ளான எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட கடல் பாதிப்பு காரணமாக மிகப்பெரிய ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. கப்பலில் இரசாயன திரவங்கள், எண்ணெய் உள்ளிட்ட கடலுக்கு ஏற்பில்லாத பொருட்கள் கடலுக்குள் கலந்துள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கப் போகின்றது. மீன்பிடிதுறைக்கும் இது பெரும் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் வழமையான செயல்பாடுகள் இடம்பெறவில்லை. இதனால், உண்மையான தாக்கம் என்னவென்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, கப்பலில் இருந்து கடலுக்குள் பரவியுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் இந்து சமுத்திரம் முழுவதும் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறுவதாயின் சோமாலியா தொடக்கம் இந்தோனேசியா வரையிலும், இதே போன்று இந்தியா தொடக்கம் மாலைதீவு வரையிலும் இந்து சமுத்திரம் முழுவதும் இந்த பிளாஸ்ரிக் துண்டுகள் பரவியுள்ளன.

இதன் பாதிப்பை சாதாரணமாகக் கணக்கிட முடியாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் பாதிப்பு வெளிப்படும். இந்தத் தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும். அதனை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

வியாபார நோக்கமாக மாத்திரம் இந்த செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாது எமது கடல் வளத்தை பாதுகாக்க, கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் – என்றார்.

 

https://www.ilakku.org/?p=51808

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்

 
11-2.jpg
 10 Views

‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் பாதிப்பை சாதாரணமாகக் கணக்கிட முடியாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் பாதிப்பு வெளிப்படும். இந்தத் தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும். அதனை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

வியாபார நோக்கமாக மாத்திரம் இந்த செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாது எமது கடல் வளத்தை பாதுகாக்க, கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் – என்றார்.

 

https://www.ilakku.org/?p=51808

பரவ முதல் அகற்றுவது நல்ல ஆலோசனை, அரசு செயற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

பரவ முதல் அகற்றுவது நல்ல ஆலோசனை, அரசு செயற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்கும் கூட்டம் இங்கெல்லாம் சிலவழிப்பார்கள்  என்று நான் நினைக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

மலையைத் தூக்கிய அனுமாருக்கு விதை ஒரு பாரமா என்று கேட்பார்கள்.  இந்து சமுத்திரத்தில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் கப்பல்களும் ஆயிரக்கணக்கில் மீன் பிடிப்படகுகளும் உலாவுகின்றன.  அதில் ஒரு கப்பலுக்கு இப்படியாகிட்டது.  அதனைப் பெரிதாக்காமல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான்.   இதற்கெல்லாம் போயி......

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, karu said:

மலையைத் தூக்கிய அனுமாருக்கு விதை ஒரு பாரமா என்று கேட்பார்கள்.  இந்து சமுத்திரத்தில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் கப்பல்களும் ஆயிரக்கணக்கில் மீன் பிடிப்படகுகளும் உலாவுகின்றன.  அதில் ஒரு கப்பலுக்கு இப்படியாகிட்டது.  அதனைப் பெரிதாக்காமல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான்.   இதற்கெல்லாம் போயி......

அப்ப  மீனை பிடிக்கலாமா அந்தோணியாரே ?🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதுமானது. அறியாமலே சொன்னாராம்? மிதந்ததை தொட்டவருக்கே அரிப்பு எடுக்குதாமே?

14 hours ago, உடையார் said:

வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

பொறுங்கள் ஏதாவது நாடுகள் தஞ்சமளிக்க வருவினம், வாங்கி அமுக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 19:47, பெருமாள் said:

அப்ப  மீனை பிடிக்கலாமா அந்தோணியாரே ?🤣

மூக்கு மயிர் உதிர்ந்து ஆள்ப்பாரம் குறைவதில்லை.  ஆந்தப் பெரிய மகாசமுத்திரத்தில்  ஒரு கப்பல் மூழ்குவதால் ஒன்றும் நடைபெறப் போவதில்லை.  மீன்களையென்ன திமிங்கலங்களையே பிடிக்கலாம்.  ஊரைக்கூட்டி எலிபிடிக்கும் வேலையெல்லாம் வீண்  வேலை.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karu said:

மூக்கு மயிர் உதிர்ந்து ஆள்ப்பாரம் குறைவதில்லை.  ஆந்தப் பெரிய மகாசமுத்திரத்தில்  ஒரு கப்பல் மூழ்குவதால் ஒன்றும் நடைபெறப் போவதில்லை.  மீன்களையென்ன திமிங்கலங்களையே பிடிக்கலாம்.  ஊரைக்கூட்டி எலிபிடிக்கும் வேலையெல்லாம் வீண்  வேலை.

 

ஏன் ரென்சன் ஆகிரீங்க  சிலரிடம் கேள்வி கேட்பது உண்டு விளக்கமான  கருத்துக்களை எதிர்பார்த்தே நானும் முதலில் அதுக்குதான் உங்களிடம் கேட்டது உங்களை கோபப்படுத்தும் என்று நினைக்கவில்லை இந்த நேரமில்லா உலகில் எல்லாத்தையும் தேடி படிக்க முடியாது பாஸ் .

கடைசியில் உங்கள் கருத்துதான் நம்ம கருத்தும் எட்டாம் திகதி கேட்டனான் பதிலை  காணவில்லை நாமளே தேடியதில் இந்த விடயத்தை இரு அரசுகளும் ஊதி  பெருபிக்கின்றன ஏதோ  ஒரு காரணத்துக்கு .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.