Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.

மாறாக இலங்கையின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தார்மீக உரிமை கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை ஆடை தொழிற்துறை மற்றும் இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி உள்ளிட்ட விடயங்களில் பிரதானமாக தாக்கம் செலுத்துகின்றது. இலங்கை சுயாதீனமானதொரு நாடாகும். எமது நாடு அரசிலமைப்பிற்கு ஏற்பவே நிர்வகிக்கப்படுகிறது.

அரசியலமைப்பானது மக்களின் இறையாண்மைக்கு உட்பட்ட அடிப்படையிலேயே செயற்படுத்தப்படுகிறது. மக்கள் இறையாண்மை நிறைவேற்றதிகாரத்துறை , சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை என்பவற்றால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவற்றுக்குள் உள்ளடங்கியுள்ள மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படும்.

உதாரணமாக ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதனை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும். இதுவே முறையான நடைமுறையாகும்.

இவ்வாறான நிலையில் உலகிலுள்ள வேறு ஏதேனுமொரு அமைப்பு எமக்கு நிவாரணமொன்றை வழங்குமாயின் , அதனுடன் தொடர்புடைய வியடங்கள் தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்துமாயின் அது பொறுத்தமானதாக இருக்கும்.

அதற்கமைய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால் அதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

அதே போன்று ஆடை தொழிற்சாலைகளில் ஏற்படுத்தி தரப்படுகின்ற அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் காணப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கும் அவர்களுக்கு முழுமையான உரிமை காணப்படுகிறது.

ஆனால் பிரிதொரு சுயாதீனமான நாட்டின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? வெளிநாட்டலுவல்கள் அமைச்சு இது தொடர்பில் பொறுத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.

ஜி.எஸ்.பி. சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை கிடையாது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

மச்சி விடாதை ....நாங்கள் யார்? ஆசியர்கள்  எங்களை இந்த அமேரிக்கர்கள்,ஐரோப்பியர் ஆண்ட காலம் போய்விட்டது...நாங்கள் அவங்களை அடிமைப்படுத்தி ஆளும் காலம் வந்திட்டுது வெளிக்கிடு அண்ணன் சீனாவுடன் இந்த உலகத்தையே ஆளுவோம் வெற்றி நமதே.....

அது சரி இப்பதான் சீனாக்காரன் பச்சை கொடி காட்டினவன் எதிர்ப்பு அறிக்கை விட சொல்லி

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னது கேசரிக்கு இங்கு வேறை மாதிரி அங்கு வேறு மாதிரி அடித்து விடுகினம் .🙃

1 hour ago, putthan said:

மச்சி விடாதை ....நாங்கள் யார்? ஆசியர்கள்  எங்களை இந்த அமேரிக்கர்கள்,ஐரோப்பியர் ஆண்ட காலம் போய்விட்டது...நாங்கள் அவங்களை அடிமைப்படுத்தி ஆளும் காலம் வந்திட்டுது வெளிக்கிடு அண்ணன் சீனாவுடன் இந்த உலகத்தையே ஆளுவோம் வெற்றி நமதே.....

அது சரி இப்பதான் சீனாக்காரன் பச்சை கொடி காட்டினவன் எதிர்ப்பு அறிக்கை விட சொல்லி

மிருகங்களை சாப்பிடுகிறவர்கள் மூளையில் சுயமாய் ஆக்க தெரியாது கொப்பி  பேஸ்ட் செய்பவர்கள் இவர்களை நம்பி பின்னால் போக 10 தடவை யோசிக்க வேண்டி உள்ளது பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

பிரிதொரு சுயாதீனமான நாட்டின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பில் காணப்படும் நிபந்தனைகளில் மாற்றம் செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

சொந்த மக்களை அடிமைப்படுத்துவது இவர்களின் இறையாண்மை, பிச்சை கேட்பது இவர்களின் இறையாண்மை. கேள்வி கேட்பது மட்டும் அழுத்தம். முட்டாள்கள் அவ்வாறுதான் யோசிப்பார்கள். அந்த எண்ணம் உள்ளவர்கள் தங்கள் இறையாண்மையோடு பொத்திக்கொண்டு இருக்க வேண்டும், பிச்சைப்பாத்திரம் ஏந்தக்கூடாது. ஏந்தினால் அவர்களின் நிபந்தனைக்கு கட்டுப்பட தெரிய வேண்டும். இன்றேல் சலுகைகளை இழக்க நேரிடும் எனும் நடைமுறை தெரியாதவர்கள். பொறுங்கள் சிங்கன் சரத் வீரசேகர வருவார் வீர வசனம் பேசிக்கொண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

பொறுங்கள் சிங்கன் சரத் வீரசேகர வருவார் வீர வசனம் பேசிக்கொண்டு.

அவர் இரண்டு கிழமையாக அடக்கி வாசிக்கின்றார் ஏன் என்று தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்தில் கூறியிருந்தார். இது தமது பாதுகாப்பு பிரச்சனை என்றும்  ஜி. எஸ். பி .வரிச் சலுகையை இடை நிறுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்றும். தாங்கள் தான் கெட்டிக்காரர், செய்வது எல்லாம் சரி மற்றவர் எல்லாம் மடையர் என்பது போல் உள்ளூரில் எடுத்து விடுவது. விழுந்து எழும்பியும் ஒத்துக்குக் கொள்ள மாட்டானுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.