Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார் : அலிஷாஹிர் மௌலானா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார் : அலிஷாஹிர் மௌலானா

 
BeFunky-collage%2B%25284%2529.jpg


7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்,  எனக்கு துரோகமிழைத்தார். இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது.
அந்த நாள் ஜூன் 22 2004. நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க . எனக்கு துரோகமிழைத்த கட்சி தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்


கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஜூன் 20 ம் திகதி அது நடந்தது. மறுநாள் எனது கட்சி தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். மங்களசமரவீரவும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுததவண்ணமிருந்தனர்.


எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதானபேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சி தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார் நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன். நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.

நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம். நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன் நீங்கள்தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன்.

நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்கவேண்டும் நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன் நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார்.

நான அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.

எனக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 

http://www.battinews.com/2021/06/blog-post_553.html

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார்,  எனக்கு துரோகமிழைத்தார். இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நீங்கள் எதைவேண்டுமானாலும் சொல்லலாம், எழுதலாம், விமர்ச்சிக்கலாம். நாங்கள் தமிழர்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை, எங்கள் தலைவர்கள் பலர் உட்பட. 🤒

  • கருத்துக்கள உறவுகள்

அலிசாகிர் மெளலானா செய்ததற்கு அனுபவிக்கிறார்கள் சிங்களவர்கள் அண்ணன் தம்பிகள் அவர்கள் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் செம்மறிகளை  வளர்ப்பது இரைக்கே மெளலானா இதில் தமிழ் என்ன முஸ்லீம் என்ன 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அலிசாகிர் மெளலானா செய்ததற்கு அனுபவிக்கிறார்கள் சிங்களவர்கள் அண்ணன் தம்பிகள் அவர்கள் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் செம்மறிகளை  வளர்ப்பது இரைக்கே மெளலானா இதில் தமிழ் என்ன முஸ்லீம் என்ன 

அலிசாகீர் முரளிதரனின் சகலைதானே?

அரசாங்கம் சொல்லாட்டிலும் காப்பாற்றி இருப்பார் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அலிசாகீர் முரளிதரனின் சகலைதானே?

அரசாங்கம் சொல்லாட்டிலும் காப்பாற்றி இருப்பார் என நினைக்கிறேன்.

 ம் இருக்கலாம் கர்ணாவின் நகர்வுகள் அரசை நாடியும் அதில் இடைத்தரகர்களாக இவரும் சகலையாகவும் 

  • கருத்துக்கள உறவுகள்

நரியை தெரியா விட்டால் நீங்கள் கரி தான். காலம் மிக பிந்தி விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.