Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பிரான்ஸ் போன்றநாடுகளில் விசா இல்லாதவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள், எப்படியெல்லாம் கஷ்டபடுகிறார்கள் என்பது எம்மவர் அனைவருமே அறிந்த ரகசியம்தான்.

தாம் கசக்கி பிழியபடுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும், ஆனால் வந்த கடனை அடைச்சு கையில் கொஞ்ச காசுடனாவது நாட்டுக்கு திரும்பிபோகாவிட்டால்  இதைவிட கஷ்டபடவேண்டும் என்பது அதைவிட நன்கு தெரியும்.

விதி என்று தெரியும் வேறு வழியின்றி வலி தாங்குகிறார்கள்.

வீடியோ வெளியிட்டவர் என்னமோ பெரிய அநீதிக்கு எதிராக போரிடுகிறவன் போன்ற போர்வையில்  தனது யூடியூப் பொழைப்புக்காக விசா இன்றி ஒழிந்திருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எங்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் என்பதை குடிவரவு அதிகாரிகளுக்கு காட்டி கொடுக்கிறாரா?

துன்பத்திலிருப்பவர்களின் வியர்வையில் லாபம் பார்க்கும் முதலாளிகள் பொறுக்கிதனமானவர்களென்றால்,நாதியின்றி மறைந்திருப்பவர்களின் மறைவிடங்களை அரசுக்கு  போட்டு கொடுப்பவர்களும் பொறுக்கிதனமானவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

வீடியோ வெளியிட்டவர் என்னமோ பெரிய அநீதிக்கு எதிராக போரிடுகிறவன் போன்ற போர்வையில்  தனது யூடியூப் பொழைப்புக்காக விசா இன்றி ஒழிந்திருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எங்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் என்பதை குடிவரவு அதிகாரிகளுக்கு காட்டி கொடுக்கிறாரா?

அந்த வீடியோவை பார்க்கும்போது அவர் தன்னை காட்டிக்கொள்ளாமல் சடையும்போதே எழுந்த கேள்வி .

அங்கு ஒவ்வொருமுறை வரும்போதும் கேட்க்கும்  கேள்வி  அநேக தமிழர்கள் பாரிஸ் புறநகர் பகுதியில் இருக்கினம். ஏன் பாரிஸ் நகரத்தை அண்டிய லாச்சப்பலில்   யூதர்களின் கட்டிடங்களுக்கு அதிகூடிய வாடகையை கொடுத்து  முதலாளி என்று யூத  அடிமையாக யூதனுக்கு உழைத்து கொடுக்கும் வர்க்கமாக நாம் இருக்கிறேம் பாரிஸ் புறநகர் பகுதியில் தமிழர்களுக்கு என்று மலிவான வாடகை உள்ள பகுதிகள் எவ்வளவோ உள்ளன அங்கு ஒரு கடைதொகுதியை உருவாக்கலாமே @விசுகு அண்ணா போன்றவர்கள் விளங்கப்டுத்தினால்  நல்லது . 

தமிழ் முதலாளி என்கினம் அங்குள்ள கோபால் அன்கோ  கடை உண்மையான முதலாளி ஒரு யூதன் அவனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது இந்த விபரங்கள் இந்த விபரண ஒளி படமாக்கியாக்கியவருக்கு தெரியுமா தெரியாதா ? இன்னும் மூன்றெழுத்து கடைகளின் பினாமி யூதன் என்கிறார்கள் .

இந்த விடயத்தில் லண்டன் காரர் அசகாய சூரர் சிற்றிக்குள் ஒரு தமிழ்க்கடை பார்க்க முடியாது .

இப்போது இருக்கும் அநேக கடைகள் `அவர்களின் சொந்த கடைகள் ஆகி விட்டன .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அந்த வீடியோவை பார்க்கும்போது அவர் தன்னை காட்டிக்கொள்ளாமல் சடையும்போதே எழுந்த கேள்வி .

அங்கு ஒவ்வொருமுறை வரும்போதும் கேட்க்கும்  கேள்வி  அநேக தமிழர்கள் பாரிஸ் புறநகர் பகுதியில் இருக்கினம். ஏன் பாரிஸ் நகரத்தை அண்டிய லாச்சப்பலில்   யூதர்களின் கட்டிடங்களுக்கு அதிகூடிய வாடகையை கொடுத்து  முதலாளி என்று யூத  அடிமையாக யூதனுக்கு உழைத்து கொடுக்கும் வர்க்கமாக நாம் இருக்கிறேம் பாரிஸ் புறநகர் பகுதியில் தமிழர்களுக்கு என்று மலிவான வாடகை உள்ள பகுதிகள் எவ்வளவோ உள்ளன அங்கு ஒரு கடைதொகுதியை உருவாக்கலாமே @விசுகு அண்ணா போன்றவர்கள் விளங்கப்டுத்தினால்  நல்லது . 

தமிழ் முதலாளி என்கினம் அங்குள்ள கோபால் அன்கோ  கடை உண்மையான முதலாளி ஒரு யூதன் அவனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது இந்த விபரங்கள் இந்த விபரண ஒளி படமாக்கியாக்கியவருக்கு தெரியுமா தெரியாதா ? இன்னும் மூன்றெழுத்து கடைகளின் பினாமி யூதன் என்கிறார்கள் .

இந்த விடயத்தில் லண்டன் காரர் அசகாய சூரர் சிற்றிக்குள் ஒரு தமிழ்க்கடை பார்க்க முடியாது .

இப்போது இருக்கும் அநேக கடைகள் `அவர்களின் சொந்த கடைகள் ஆகி விட்டன .

லா சப்பலில் எனக்கு தெரிய ஒரு கடை தான் யூதர்கள் நடாத்துவது. கட்டிடங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் அநேகமான கடைகள்  தமிழர்களால் வாங்கப்பட்டு விட்டன.( கோபால் அன்ட் கோ எனது ஊரவனின் கடை. அந்த கடை அவருக்கு சொந்தமானது) 

வீடியோவை முழுமையாக பார்த்தேன்.

உண்மை இல்லாமல் இல்லை

ஆனால் இரு பகுதிக்கும் தேவைகள் இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கும். நாம் இடையில் புகுந்து குளப்பினால் இரு பகுதியும் வையும். 

அதை விட முதலாளிகளுக்கு நம்பிக்கையான ஆள் தேவை. எனவே அடாத்தாக நடாத்த மாட்டார்கள். அதேநேரம் இவர் போனால் இன்னொருவர் அவரது குடும்பத்தில் இருந்தே அந்த வேலைக்கு வர தயாராக இருப்பார்கள் என்பது தொழிலாளிக்கும் தெரியும்.

(இந்த கொரோனா காலப் பகுதியில் தன்னிடம் வேலை செய்த விசா இல்லாதவர்களுக்கு சம்பளத்துடன் சாப்பாடும் கொண்டு போய் கொடுத்த முதலாளிகளும் இருக்கிறார்கள்)

என்னை பொறுத்தவரை இந்த வீடியோ தாயகத்தை தான் சென்றடையணும். புலம் பெயர் தேசம் என்ன என்பது புரியணும். 

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா, அடிச்சு விடக்கூடாது.

லண்டனிலும் இது இருந்தது, இருக்குது. கராஜில் போர்கோட் சுத்தம் செய்வது, கார் வாஷ், டாய்லெட் சுத்தம் செய்வது, மொப்பர் அடிப்பது என்பது தான் தொடக்கம்.

முதலில், ஊர், பழக்க வழக்கங்களை விட்டு, இங்கேயுள்ள அடிப்படை பழக்க வழக்கங்களுக்கு, நாமும் பேச்சு வாங்கித்தான் வர வேண்டும்.

சனியனே, தங்கியூ சொல்லித் தொலை என்று திட்டுவார் நண்பர். வந்தோன்ன ஹலோ சொல்லு எண்டுவார் முதலாளி.

இரண்டாம் தரம் பிழை விட்டால், நண்பர் / முதலாளி வாயில் தூசணம் வரும். அதெலாம் பார்த்தால், வராமல், ஊரிலேயே இருந்திருக்கலாமே.

பெனிபிட்டில் இருப்பவர்களுக்கு, கையில காசு ஒரு வரப்பிரசாதம்.  இங்கே முதலாளி £5,000 தண்டம் ரிஸ்க் எடுத்து தான் வேலையே கொடுக்கிறார்.

லண்டனில் ஒரு வீட்டின் கராஜில் ஒரு குடும்பம் வாழ்கிறது. இலவசமாக கொடுத்துள்ளார் உரிமையாளர். அவர்கள் செய்வது, ஒரு சிக்கின் கடைக்கு போய், கடை முதலாளி கொடுக்கும் சிக்கின் வீடு கொண்டு வந்து, உரிச்சு, கிளீன் பண்ணி, மசாலா போட்டு கொண்டு போய் கொடுப்பது.

இது, சட்டம் ஒன்றுமே செய்ய இயலாத ஒழுங்கு ஒன்று (arrangement). அதாவது வேலை இல்லை. கொன்ராட்க்ட் எடுத்து செய்யினம். பணம் குறைவாகினும், இதுவாவது கிடைக்கிறதே என்கிறார் வீட்டுக்காரர். இரவு, கடைப்பக்கம் போனால், மிஞ்சின உணவுடன், வேலைக்கான காசும் கிடைக்கும். 

இது sky டிவியில் வந்தது.

ஆகவே, லா சப்பலில் நடப்பது, பரஸ்பர உதவி. யாருமே 14 மணி நேரம் கட்டாயம் வேலை செய்யவேண்டும் என்று சொல்ல முடியாது. காரணம் அடிமை சட்டம் உள்ளே போட்டு விடும். வேலை செய்பவருக்கு, பணம் தேவை. நீண்ட நேரம் வேலை செய்கிறார்.

நான், வந்த புதிதில், 57 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறேன். அடுத்த நாள் வர வரவேண்டியவர், சுகவீனமுற, அடுத்தவர், சோதனை. இந்தியா போயிருந்த சீக்கிய முதலாளியை கை விட முடியாது என்பதால், வேலை செய்தேன். (இரவு நித்திரை அடிக்கலாம் தானே). மகிழ்ந்து போன முதலாளி, கூடுதலாக பணம் தந்தார்.

அதுக்காக, முதலாளி, 57 ,மணிநேர வேலை செய்ய சொன்னார் என்று சொல்ல முடியுமா என்ன? 

இவ்வாறு பலர் இருக்கிறார்கள். இவர் இப்போது கேமராவை தூக்கிக் கொண்டு உழைப்பது போல, அவர்களுக்கு வசதி இல்லை. அவ்வளவுதான்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.