Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது: அமைச்சர் டியூ குணசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது: அமைச்சர் டியூ குணசேகர

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும்கூட அரசியல் ரீதியாக தோற்கடித்துவிட முடியாது என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் 64ஆம் ஆண்டையொட்டி நிகழ்வு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் டியூ குணசேகர பேசியதாவது:

ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் நாட்டினது இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். பண்டாரநாயக்க காலத்தில் தொடங்கிய இனப்பிரச்சனையானது ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இரத்தம் தோய்ந்ததாக மாறியது. 25 ஆண்டுகாலமாக இருதரப்பும் போரிட்டு வந்தாலும் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.

இனப்பிரச்சனையைத் தொடங்கி வைத்தது பிரபாகரன்தான் என்று நிறைய பேர் கருதினாலும் அவர் காரணமானவர் அல்ல. அரசியல் வழித் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இரு புதிய காரணிகள் உருவாகி உள்ளன. தற்போதைய நிலைமையானது மிகவும் மோசமானது. நாட்டினது அரசியலில் பேரினவாதம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களை நாம் இழந்திருக்கிறோம். தற்போதும் அத்தகைய சந்தர்ப்பத்தை இழந்தோமேயானால் பயங்கரவாதத்துடன் இணைந்தே நாம் எப்போதும் செல்ல வேண்டியதாக இருக்கும்.

இனப்பிரச்சனையை பேரினவாதக் கண்ணோட்டத்துடன் அணுகாமல் பரந்துபட்ட வகையிலே அணுகி இடதுசாரி இயக்கத்துக்கு ஜே.வி.பி.யினர் திரும்ப வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதை அமைச்சர்கள் எதிர்க்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுவிட்டால் பிரபாகரன் மகிழ்ச்சியடைவார். புலம்பெயர் தமிழர்கள் மேலதிக நிதி உதவி செய்வர். கொழும்பிலிருந்து தமிழர்கள் அண்மையில் வெளியேற்றப்பட்ட போதும் இதே உணர்வுகள்தான் எதிரொலித்தன. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும் அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என்றார் அவர்.

-புதினம்

இராணுவரீதியாகவும் தோற்கடிக்க முடியாது.

அரசியல் ரீதியில் விடுதலைப் புலிகளை ஒருபோதும் தோற்கடிக்கவே முடியாது உறுதியாகக் கூறுகிறார் அமைச்சர் டியூ குணசேகரா

தமிழீழ விடுதலைப் புலிகளை இரா ணுவ ரீதியில் தோற்கடித்திருந்தாலும் அரசியல் ரீதியாக அவர்களை ஒரு போதும் தோற்கடிக்கவே முடியாது.

இவ்வாறு கூறினார் அரசமைப்பு விவ கார அமைச்சரும் இலங்கைக் கம் யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாள ருமான டி.ஈ.டபிள்யூ. குணசேகர.

கம்யூனிஸ்ட் கட்சியின் 64 ஆவது வருட பூர்த்தி தினத்தையிட்டு நடை பெற்ற கூட்டத்தில் பேசுகையில் அமைச் சர் மேற்படி கருத்தைச் சொன்னார்.

அவர் அங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது

நாட்டில் இனப்பிரச்சினையொன்று இருந்து வருகிறது. அதற்கு ஒரு தீர்வு கண் டாக வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்க காலத்தில் இந்தப் பிரச்சினை தலையெடுத்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் இரத்தக்களரியுடனான ஒரு சிக்கலாக உருமாறியது. இரு தரப்பின ரும் கடந்த இருபத்தைந்து வருடங்க ளாகப் போராடிவந்த போதிலும் பிரச் சினை தீர்ந்தபாடில்லை.

அரசியலில் இனவெறி

இன்றைய தேசிய பிரச்சினையின் மூலகர்த்தா பிரபாகரன் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அரசி யல் தீர்வு ஒன்று காணப்படுவதற்கு முட்டுக்கட்டையாக இரண்டு அம்சங் கள் இப்போது முளை கொண்டுள்ளன. தற்போதைய இக்கட்டான நிலை ஸ்ரீ.ல. சு.க ஜே.வி.பி. புரிந்துணர்வு உடன் படிக்கையிலிருந்து உருவானதாகக் கொள்ளலாம். நிலைமை சிக்கலடைந் துள்ளதுடன் அபாயகரமாகவும் மாறி யுள்ளது. இன்றைய அரசியலில் இன வெறித் தன்மை ஆக்கிரமித்து நிற்கும் போக்கைக் காணமுடிகிறது.

நாம் பல சந்தர்ப்பங்களைத் தவற விட்டுள்ளோம். இப்போதைய சந்தர்ப் பத்தையும் தவறவிட்டோமானால் பயங்கரவாதத்துடன் நிரந்தரமாக உடனி ருந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படு வோம். அரசியல் தீர்வொன்று ஏற்படு வதில் ஜே.வி.பி., ஹெலஉறுமய கட்சி களின் மத்தியில் நிதானப் போக்கு ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு அவர் தொடர்ந்து பேசுகை யில் குறிப்பிட்டார்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.