Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு கோருவதா?: அமெரிக்காவுக்கு பெர்னாண்டோ புள்ளே கண்டனம்.

Featured Replies

கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு கோருவதா?: அமெரிக்காவுக்கு பெர்னாண்டோ புள்ளே கண்டனம்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினரை நிராயுதபாணியாக்குமாறு அமெரிக்காவின் இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் விடுத்துள்ள கோரிக்கையானது பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் கொள்கையைக் கேள்விக்குறியாக்கி விட்டதாக சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கூறியதாவது:

கருணா குழுவினர் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு இடம்பிடித்துள்ளது. இது இவ்வாறு இருக்கையில் ஏன் கருணா அமைப்பை மட்டும் நிராயுதபாணியாக்குமாறும் அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள், சிறுவர்களை தமது படையணியில் சேர்ப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது மிலேச்சத்தனமான தாக்குதல்களை அனைத்துலகம் மிகவும் தெளிவாக விளங்கியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருணா பிரிவினர் செயற்படுவதனாலா அதனை நிராயுதபாணியாக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஒஸ்லோவுக்குச் சென்று யுத்த நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்க அனைத்துலகம் சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தான் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தமிழ்ச்செல்வனும் கோருகிறார். அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இதே கோரிக்கையைத்தான் முன்வைத்து வருகிறார் என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.

-Puthinam-

இலங்க அரசில் கமடியன்கள் இருப்பதை பெர்னாண்டோ பிள்ளை அடிகடி ஞாபகமூட்டி கொண்டுதான் இருகிறார் இப்படிபட்டவர்களே இன்று தேவை இவர்கள்தான் தமிழீழத்தின் தடை நீக்கிகள்:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் மக்களையும் வர்த்தகர்களையும் அரசுக்கு எதிராக ஐ.தே.க. ஒழுங்கமைத்து வருகின்றது

தமிழ் மக்களையும் வர்த்தகர்களையும் அரசாங்கத்துக்கு எதிராக ஒழுங்கமைத்து வரும் ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் மக்களையும் அரசுக்கு எதிராக ஒழுங்கமைக்கும் நடவடிக்கையிலும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளது. ஜே.வி.பி.யினரையும் இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி வருகின்றனர் என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் விடுதலைப்புலிகளின் கருத்துக்கள் ஒன்றாகவே அமைந்துள்ளன. ஜே.வி.பி.யை அரசுக்கு எதிராக மற்றும் செயற்திட்டத்தின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவேவுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரனின் வாகனம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் எந்தவிதமான விசாரணைகளையும் நடத்தவில்லை என அதன் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களை ஐ.தே.க.வினர் ஒழுங்கமைத்து வருகின்றனர்.

தற்போது ஜே.வி.பி.யை எமக்கெதிராக ஒழுங்கமைகின்றனர். இந்த நடவடிக்கையின் பின்னால் ரணில் இருக்கின்றார். தமிழ் மக்களையும் வர்த்தகர்களையும் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியினர் ஒழுங்கமைத்து வருகின்றனர்.

கருணா தரப்பினரையும் நிராயுதபாணிகளாக்க வேண்டும் என ரிச்சட் பௌச்சர் கூறியுள்ளார். அவ்வாறாயின் விடுதலைப்புலிகளை ஏன் நிராயுதபாணிகளாக்குமாறு அவர் கோரவில்லை. இதன் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. கருணா தப்பிச் செல்லும் போதும் ஐக்கிய தேசியக்கட்சி தான் உதவியது. ரணிலின் உத்தரவின் பேரில் அலிஸாகிர் மௌலானா, அவர்களை கொழும்புக்கு கொண்டு வந்தார். இன்றும் காடுகளில் மறைந்துள்ள தீவிரவாதிகளை தப்பிச்செல்ல ஐக்கிய தேசியக்கட்சி உதவி செய்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவில் சோனியாகாந்தியின் பாத்திரத்தை சந்திரிகா ஏற்றுக்கொண்டுள்ளதாக மங்கள கூறுகின்றார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு மங்கள வழங்கியுள்ள பேட்டியில், எதிர்தரப்பிற்கு தான் செல்லும் போது தமது தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென கூறியுள்ளார். அது பொய்யான தகவல். எமது உறுப்பினர்கள் மங்கள சமரவீர எதிர்தரப்பிற்கு செல்லும்போது கூச்சலிட்டனர். நான் அவர்களை நிசப்தமாக இருக்குமாறு கூறினேன். அந்த நிசப்தம் மங்களவின் செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கையென அர்த்தப்படுத்தக்கூடாது. இவர் முதலில் ரணிலை சந்தித்துள்ளார். இவர் செய்த மிகப் பெரிய மடத்தனம் அதுவாகும். ரணிலுடன்தான் மங்கள அடுத்த முறை போட்டியிடுவார் போல் உள்ளது. எமக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லையென எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

-வீரகேசரி

துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு அமெரிக்கா கோரியமை தவறு - சிறீலங்கா அரசாங்கம்

ஸ்ரீலங்கா அரசாங்க துணை இராணுவ குழுவான கருணா குழுவின் ஆயுதங்களை களையுமாறு அமெரிக்கா கோரியமை தவறானது என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அரசாங்கத்தின் பிரதம கொரடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்ருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் ஆயுதங்களை களையுமாறு கோராமல் கருணா குழுவிடம் இருந்து மட்டும் ஆயுதங்களை களையுமாறு அமெரிக்கா கோருவது அர்தமற்றது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கருணா குழுவானது அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளில் ஸ்ரீலங்கா அரச படைகளின் ஆதரவுடன் செயல் பட்டு வரும் ஒரு ஆயுதக் குழு என்பதும் அதன் ஆயுதங்களை களைவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் முடியும் என்பதும் அதன் காரணமாகவே அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் ரிச்சார்ட பௌச்சர் இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராக போராடும் ஒரு அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பிடம் இருந்து ஆயுதங்களை களையுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கோருவதற்கு அமெரிக்கர்கள் புத்திசாதுரியமற்ற ஸ்ரீலங்கா அரசாங்க அமைச்சர்கள் அல்ல என்று வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் சுடு;டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் திசை திருப்புவதற்கும் முயற்ச்சித்து வருவதையே ஜெயராஸ் பெர்னாண்டோ புள்ளேயின் வாதம் தெளிவு படுத்துவதாகவும்; அரசாங்கம் உண்மையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஈடுபாட்டுடன் இல்லை என்பதை இதன் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ் புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

-பதிவு-

விடுதலைப்புலிகளிடம் ஆயுதங்களை களையுமாறு கோராமல் கருணா குழுவிடம் இருந்து மட்டும் ஆயுதங்களை களையுமாறு அமெரிக்கா கோருவது அர்தமற்றது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா கேட்டால் உடனே புலிகளின் ஆயுதங்களைக் களைந்து விடுவார்களா ?

முடியாத ஒன்றை இலங்கை அரசிடம் கேட்பதற்கு அமெரிக்கா அறிவற்றதல்ல.

நல்லா பேசுறார்... அமெரிக்கா போக விசா வேண்டாம் வேற இடத்துக்கு போகப்போறார் போல கிடக்கே...

சரி சரி ...இரட்ணசிறி சாகப்பொற மாதிரித்தனே இருக்கார்... சாகட்டும் உவருக்குத்தான் பிரதமர் பதவி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.