Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கினார் புரோகிராசியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார்.

ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது.

அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார்.

கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.

மெதுவாக, தனது உறவினருக்கு வியாபாரம் செய்து, முன்னைய பதிவு துளைந்து போய் விட்டது என்று, வியாபாரம் செய்த உறுதியை பதிவார்.

6 மாதத்தில், அந்த பதிவான உறுதியை தாய் உறுதியாக கொண்டு, மீண்டும் அவரிடம் விலை பேசி வாங்குவார். முத்திரை காசு கட்டுவர்.

ஆக, உறுதி இல்லாத காணிக்கு உறுதி எடுக்கும் இந்த முறை ஜப்பான் உறுதி என்று அடைமொழி. இதுவே இந்த புரோகிராசியரும், மேலும் ஒருவரும் செய்து பிடிபட்டுள்ளார்கள். 
 

https://www.dailymirror.lk/breaking_news/Lawyer-arrested-for-selling-Thailand-embassy-land-using-forged-documents/108-214735

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார்.

ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது.

அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார்.

கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.

மெதுவாக, தனது உறவினருக்கு வியாபாரம் செய்து, முன்னைய பதிவு துளைந்து போய் விட்டது என்று, வியாபாரம் செய்த உறுதியை பதிவார்.

6 மாதத்தில், அந்த பதிவான உறுதியை தாய் உறுதியாக கொண்டு, மீண்டும் அவரிடம் விலை பேசி வாங்குவார். முத்திரை காசு கட்டுவர்.

ஆக, உறுதி இல்லாத காணிக்கு உறுதி எடுக்கும் இந்த முறை ஜப்பான் உறுதி என்று அடைமொழி. இதுவே இந்த புரோகிராசியரும், மேலும் ஒருவரும் செய்து பிடிபட்டுள்ளார்கள். 
 

https://www.dailymirror.lk/breaking_news/Lawyer-arrested-for-selling-Thailand-embassy-land-using-forged-documents/108-214735

வந்திருந்தா 50 கோடியாச்சே 
ரொம்ப கிறுக்கங்களா இருக்கிறாங்களே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

வந்திருந்தா 50 கோடியாச்சே 
ரொம்ப கிறுக்கங்களா இருக்கிறாங்களே 

இந்தியாவில்,இந்த மோசடி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அதிகளவில் நடக்கிறது.

நடிகர் வடிவேலு இந்த வகை மோசடிக்கு ஆளானார். அவர் மட்டுமல்ல, நடிகர் சூரி, கஞ்சா கறுப்பு என்று லிஸ்ட் போகுது.

இலங்கையில் இப்போது மெதுவாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தில், வன்னியில், பலர் வெளிநாடுகளில் இருபதால், காதும், கத்தும் வைத்து மாதிரி நடக்கிறது. இறந்தவர்கள், power of  attorney கொடுத்த இருந்த மாதிரி, பிள்ளைகள் இலங்கையே தெரியாத நிலையில், அவர்களுக்கு ஆர்வமோ, விபரமோ தெரியாத காரணத்தால், இந்த  திருகுதாளம் பண்ணி வியாபாரம் நடக்கிறது.  🙄

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இலங்கையில் இப்போது மெதுவாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தில், வன்னியில், பலர் வெளிநாடுகளில் இருபதால், காதும், கத்தும் வைத்து மாதிரி நடக்கிறது. இறந்தவர்கள், power of  attorney கொடுத்த இருந்த மாதிரி, பிள்ளைகள் இலங்கையே தெரியாத நிலையில், அவர்களுக்கு ஆர்வமோ, விபரமோ தெரியாத காரணத்தால், இந்த  திருகுதாளம் பண்ணி வியாபாரம் நடக்கிறது.  🙄

உண்மை நாதம்ஸ். நம் ஊரில் நடக்கும் இந்த மோசடியை பற்றி வேறு பலரும் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இலங்கையில் இப்போது மெதுவாக ஆரம்பிக்கிறது.

என்னது மெதுவா ஆரம்பிக்குதா?🤣.

ஊரில பாதி காணி வழக்கு கள்ள உறுதி வழக்குத்தான்.  

அநேகமாக கொழும்பில், வெளிநாட்டில் உள்ளவர்களின் உடமையைதான் பதிவு அலுவலகர், கள்ள பிரக்கிராசிமார், கள்ளர் கூட்டு சேர்ந்து ஆட்டையை போடுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

என்னது மெதுவா ஆரம்பிக்குதா?🤣.

ஊரில பாதி காணி வழக்கு கள்ள உறுதி வழக்குத்தான்.  

அநேகமாக கொழும்பில், வெளிநாட்டில் உள்ளவர்களின் உடமையைதான் பதிவு அலுவலகர், கள்ள பிரக்கிராசிமார், கள்ளர் கூட்டு சேர்ந்து ஆட்டையை போடுகினம்.

அண்மையில் மட்டக்களப்பில் எனது நண்பனது காணிக்கு முஸ்லீம் ஒருவர் உறுதி முடித்து வந்திருந்தார் பொலிஸ் உதவியுடன் ஆனால் உறுதியில் சில பிழைகள்  இருந்ததால் நிலம் தப்பியது ஆனால் கேஸ் போகுது இல்லயென்றால் காணி அவர்களூக்கு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.