Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது – எதிர்க்கட்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது – எதிர்க்கட்சி தகவல்

(எம்.மனோசித்ரா)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. நேற்று  செவ்வாய்கிழமை இவ்வாறு 208 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

இவ்வாறு சொத்து மதிப்பிற்கும் அதிகமாக நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டால் பணவீக்கம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும், இதுபோன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பாரிய பொருளாதார நெருக்கடியை நாட்டுக்கு ஏற்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிகமாக நாணயத்தாள்கள் நேற்று அச்சிடப்பட்டுள்ளன. 208 பில்லியன் ரூபா என்பது நாட்டிலுள்ள சொத்து மதிப்பை விட அதிக தொகையாகும்.

இவ்வாறு சொத்து மதிப்பை விட அதிக நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதால் பணவீக்கம் ஏற்படும் என்பது சாதாரண தரத்திலேயே கற்று கொடுக்கப்படுகிறது. அதனை அறிந்திருந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். ஆடை தொழிற்சாலையில் ஆடைகளை தைப்பதைப் போன்று பியகமவிலுள்ள தொழிற்சாலையில் இவர்கள் பணத்தை அச்சிடுகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்வியை அடுத்து பஷில் ராஜபக்ஷ பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வார் என்று கூறுகின்றனர். ஆனால் அவரால் மாத்திரமல்ல எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை சிறப்பாக நிர்வகிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

பஷில் ராஜபக்ஷவுக்கு அலங்காரம் செய்து அவரை அழகுபடுத்தி முன்னிருத்துவதால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. மாறாக இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள நாணயத்தாள்களையே அவர் மக்களுக்கு பகிர்ந்தளிப்பார். இதுதான் இவர்களுடைய புதிய பொருளாதார உத்தியாகும்.

உரப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு நாடு முகங்கொடுத்துள்ள இந்நிலையில் , இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா 2.1 பில்லியன் ரூபா செலவில் பறவைகள் பூங்காவொன்றை திறந்து வைத்துள்ளார்.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவிற்கே சிரமப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இது தேவையான ஒன்றா? இதே நிலைமை தொடருமாயின் மீண்டும் வரிசையில் நின்றி பாண் வாங்கி உண்ண வேண்டிய நிலையே ஏற்படும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/108501

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில், டிஜிட்டல் பாங்கிங்.... கணக்குகள், கடன், கொடுப்பனவுகள் எல்லாம் டிஜிட்டல் என்ற படியால், காசே அடியாமல் சமாளித்து விட்டார்கள்.

இலங்கையில் நிலைமை அப்படி இல்லை. பணவீக்கம் சிங்களவர்களை வீதிக்கு இறக்கும்.

தமிழர்கள், வெளிநாடுகள் தொடர்பு இருப்பதால், சமாளிக்கலாம். மேலும், போன வருட இறுதியில், வேளாண்மை செய்யாத காணிகளில், ராணுவம் வேளாண்மை செய்யும் என்று கொளுத்தி விட, பத்தை மண்டியிருந்த காணிகளை துப்பரவு செய்து, நல்ல நெல் அறுவடை செய்துள்ளனர்.

இப்போது, தொடரும் கொரோனா காரணமாக, மரக்கறி, மற்றும் பயிர்ச்செய்கை ஆர்வம் கூடி உள்ளது.

ஆகவே, வடக்கு, கிழக்கு தப்பிக்கொள்ளும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய வங்கியிடம் உள்ள சொத்துக்கள் பொறுப்புக்களை கணக்கிடாம பில்லியன் கணக்கில காசு அடிச்சுவிட்டா இனிமேல் யூகோசிலாவ்யா மாதிரி  1 றாத்தல் பாண் இரண்டு கோடி ரூபா, 2 கிலோ மா 7 அரை கோடி ரூபா   , ஒரு கிலோ மீன் 20 கோடி எண்டு அள்ளிவிட்டு பாரி வள்ளல் பரம்பரை ரேஞ்சில போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

போரின் பின்னர் சிங்களவர்கள் எவ்வளவு  தூரம்  ராஜபக்ச குடும்பத்தை தலையில் தூக்கி கொண்டாடினார்களோ அதைவிட மோசமாக சிங்களவர்களால் காறி துப்பி வீட்டுக்கு அனுப்பி வைக்கபட போகும்  வரலாற்றில் மிக மோசமான ஆட்சியாளர்கள் என்ற பெயரையும் தட்டி செல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பிரிட்டனில், டிஜிட்டல் பாங்கிங்.... கணக்குகள், கடன், கொடுப்பனவுகள் எல்லாம் டிஜிட்டல் என்ற படியால், காசே அடியாமல் சமாளித்து விட்டார்கள்.

இல்லை. பணம் அச்சடிப்பது என்றால் தனியே சேர்குலேசனில் இருக்கும் அச்சு பணம் மட்டும் இல்லை. புதிதாக பணத்தை உருவாக்குவது. ஆங்கிலத்தில் quantitative easing என்பார்கள்.

நவம்பரில் வந்த 2ம் லாக்டவுணுக்கு முதல்£ 150 பில்லியன் புதிய பணத்தை இப்படி சிஸ்டத்துக்குள் புகுத்தினார்கள்.

மார்சிலும் நடந்தது.

இதனால்தான் இனி inflation பணவீக்கம் வரும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவிலும் இதே நிலைதான். பைடன் வந்த வந்த பின் இன்னும் மோசம்.

என்ன இலங்கையிடம் இதை தாக்கு பிடிக்கும் வலு இல்லை. இவர்களிடம் இருக்கிறது. ஆனால் நிச்சயம் இல்லை. 80 களில் பணவீக்கம் காரணமாக வட்டி வீதம் கூடி, வீட்டு திறப்பை கொண்டு போய் பாங்கில் கொடுக்கும் நிலை வந்துள்ளது. இனியும் வரலாம். 

https://www.independent.co.uk/news/business/news/bank-england-money-printing-coronavirus-b1610167.html

Edited by goshan_che
மில்லியன் - பில்லியன்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

இல்லை. பணம் அச்சடிப்பது என்றால் தனியே சேர்குலேசனில் இருக்கும் அச்சு பணம் மட்டும் இல்லை. புதிதாக பணத்தை உருவாக்குவது. ஆங்கிலத்தில் quantitative easing என்பார்கள்.

நவம்பரில் வந்த 2ம் லாக்டவுணுக்கு முதல்£ 150 பில்லியன் புதிய பணத்தை இப்படி சிஸ்டத்துக்குள் புகுத்தினார்கள்.

மார்சிலும் நடந்தது.

இதனால்தான் இனி inflation பணவீக்கம் வரும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவிலும் இதே நிலைதான். பைடன் வந்த வந்த பின் இன்னும் மோசம்.

என்ன இலங்கையிடம் இதை தாக்கு பிடிக்கும் வலு இல்லை. இவர்களிடம் இருக்கிறது. ஆனால் நிச்சயம் இல்லை. 80 களில் பணவீக்கம் காரணமாக வட்டி வீதம் கூடி, வீட்டு திறப்பை கொண்டு போய் பாங்கில் கொடுக்கும் நிலை வந்துள்ளது. இனியும் வரலாம். 

https://www.independent.co.uk/news/business/news/bank-england-money-printing-coronavirus-b1610167.html

நன்றி தல....

ஒரு சொல்லு மிஸ்ஸிங்... அப்படியே பிழையா போட்டுது.... அதுக்கு தான் தல இருக்கோணும் எண்டுறது...

பிரிட்டனில், டிஜிட்டல் பாங்கிங்.... கணக்குகள், கடன், கொடுப்பனவுகள் எல்லாம் டிஜிட்டல் என்ற படியால், காசே பெரிதாக அடியாமல் சமாளித்து விட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

  1 றாத்தல் பாண் இரண்டு கோடி ரூபா, 2 கிலோ மா 7 அரை கோடி ரூபா   , ஒரு கிலோ மீன் 20 கோடி எண்டு அள்ளிவிட்டு பாரி வள்ளல் பரம்பரை ரேஞ்சில போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

அந்த காசை எண்ணுவதற்கும், வைப்பதற்கும் ஆளும், இடமும் தேட வேண்டும், ஒதுக்கவேண்டும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.