Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணதண்டனையில் இருந்து பொது மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வாவுக்கு பெரும் பதவி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை யில் இருந்து பொது மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வா வுக்கு பெரும் பதவி 

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தலைவரானார் துமிந்த. இது தொடர்பான ஆவணத்தில் கோத்தா கையெழுத்திட்டார் என கொழும்பு டெய்லி மிரர் தெரிவிக்கிறது. 

பாம்பின் கால், பாம்பறியும் என்பதுபோல, ஒரு கொலைகாரனின் மனதை இன்னோரு கொலைகாரரே அறிவார்.

இந்த துமிந்த சில்வா, கோத்தாவுக்காக சில கொலைகளை செய்தவராவார். அதில் முக்கியமானது லசந்த கொலை.

இலங்கை நீதித்துறைக்கு நன்றாக கலந்த சாணி, அடிக்கப்பட்டுள்ளது 

mahinda-and-duminda

இது சிறைக்கு போக முன்னர் 

Duminda Silva meets Prime Minister at Temple Trees | Colombo Gazette

இது சிறையால் வந்த பின்னர்

அருமை...

Edited by Nathamuni

  • Nathamuni changed the title to மரணதண்டனையில் இருந்து பொது மன்னிப்பு பெற்ற துமிந்த சில்வாவுக்கு பெரும் பதவி 
  • கருத்துக்கள உறவுகள்

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவியை வழங்கினார் ஜனாதிபதி

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவியை வழங்கினார் ஜனாதிபதி

மரணத் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டள்ளது.

இவ்விடயம் தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரினால் துமிந்தவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு சமூக அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்  தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1229181

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவியை வழங்கினார் ஜனாதிபதி

மரணத் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதெல்லாம் சிறிலங்கா,இந்தியா ,பாகிஸ்தான் நாடுகளிலை மட்டுமே சாத்தியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் சிறிலங்கா,இந்தியா ,பாகிஸ்தான் நாடுகளிலை மட்டுமே சாத்தியம்.

ராஜபக்சே குடும்ப அரசியல் தந்திரம், தம்மை நம்பிய எவரையுமே எப்போதுமே கை விட மாட்டார்கள்.

2015ல் பதவி விட்டு போகும்போது, கருணா அம்மான் கைதே ஆக கூடாது என்று மைத்திரியிடம் சொல்லி போனார் மகிந்தா.

பிள்ளையானை சிறைக்கு போய் பார்த்தார். மீண்டும் வந்த பின்னர் பிள்ளையானை, துமிந்தவை வெளியே விட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருக்கும் போது, புலிகளுடன் சண்டை போட்டுக்கொண்டே, கொழும்பில் டக்லஸ் வீட்டில், மனைவியுடன் சாப்பிட போனார்.

இந்த தரை லெவல் அரசியல் தான், அவரை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இன்று நினைத்தாலும், அரசியல் அமைப்பினை மாத்தி, தம்பி கோத்தாவை ராஜினாமா செய்ய சொல்லி, பிரதமர் அண்ணன், ஜனாதிபதி ஆகலாம்.

சகோதர பலம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Nathamuni said:

ராஜபக்சே குடும்ப அரசியல் தந்திரம், தம்மை நம்பிய எவரையுமே எப்போதுமே கை விட மாட்டார்கள்.

2015ல் பதவி விட்டு போகும்போது, கருணா அம்மான் கைதே ஆக கூடாது என்று மைத்திரியிடம் சொல்லி போனார் மகிந்தா.

பிள்ளையானை சிறைக்கு போய் பார்த்தார். மீண்டும் வந்த பின்னர் பிள்ளையானை, துமிந்தவை வெளியே விட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருக்கும் போது, புலிகளுடன் சண்டை போட்டுக்கொண்டே, கொழும்பில் டக்லஸ் வீட்டில், மனைவியுடன் சாப்பிட போனார்.

இந்த தரை லெவல் அரசியல் தான், அவரை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இன்று நினைத்தாலும், அரசியல் அமைப்பினை மாத்தி, தம்பி கோத்தாவை ராஜினாமா செய்ய சொல்லி, பிரதமர் அண்ணன், ஜனாதிபதி ஆகலாம்.

சகோதர பலம். 

இதே குடும்ப அரசியலைத்தானே சதாம் ஹுசைனும்,கடாபியிம் செய்தார்கள். இதே போல் தானே துருக்கி அதிபரும் செய்கின்றார்.

ஏன் கன தூரம் போவான் எங்கடை கட்டுமரம் கொம்பனியும் அதே சிஷ்டம் தானே? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

image_ff8c8a703c.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.