Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை: அரசாங்கம்

1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

அதன்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நேற்று (26) செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை செலுத்தியுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக விமர்சங்களை முன்வைத்தவர்களினால் அவற்றினை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2021/1231049

################   ################   ################

 Goundamani and Senthil Latest All Comedy Scenes | Karakattakaran | Tamil  Film | Cinema Junction animated gif

சீனாவிடம்... புதிய  கடன் வாங்கி, 
பழைய கடனை... சீனாவிடம் கொடுத்தாச்சு.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை இலங்கையின் எந்த பகுதி, சீனாவுக்கு அடகுக்கு போயிருக்குது?

சொல்லுங்கப்பா.... சொல்லுங்க... 🤗

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.

நம்பும்படியாகவா  உள்ளது? நேற்றுவரை பஞ்சப்பாட்டு, இன்று எப்படி இவ்வளவு தொகையை புரட்ட முடிந்தது இவர்களால்? ஒருவேளை அமெரிக்கா கொடுத்திருக்குமோ?

11 hours ago, Nathamuni said:

இந்த முறை இலங்கையின் எந்த பகுதி, சீனாவுக்கு அடகுக்கு போயிருக்குது?

அடகு வைத்ததையோ, கடன் அடைக்க இன்னோர் கடன் பெற்றதையோ மறைக்க இவ்வளவு பில்டப். இன்னும் கொஞ்ச நாளில் உண்மையை  மெல்ல வெளியில் கொண்டு வந்து விடுவார்கள் எதிர்க் கட்சியினர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மகிந்த அரசிடம் இறக்குமதி பொருட்களுக்கு கொடுக்க திறைசேரியில் டொலர் இல்லை. இதனால் வாகனம்,உரவகை, மாவகை என்பனவற்றின் இறக்குமதி தடை செய்பப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் ஆகாசப்புளுகர் ரம்புக்வலவின் புளுக்குக்கும் ஒரு அளவு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

 

மகிந்த அரசிடம் இறக்குமதி பொருட்களுக்கு கொடுக்க திறைசேரியில் டொலர் இல்லை. இதனால் வாகனம்,உரவகை, மாவகை என்பனவற்றின் இறக்குமதி தடை செய்பப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் ஆகாசப்புளுகர் ரம்புக்வலவின் புளுக்குக்கும் ஒரு அளவு வேண்டும்.

ஒரு உண்மையை மறைக்க பல பொய்களை ஆளாளுக்கு இறக்குமதி செய்யிறது. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கினமாம் ஆனால் உற்பத்திப் பொருட்களுக்கே தட்டுப்பாடு. செய்யிறது வங்குரோத்து அரசியல் அதில வரட்டுகவுரவம் கதைப்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.