Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வனிந்து பந்து வீச்சில் மிரட்ட இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வனிந்து பந்து வீச்சில் மிரட்ட இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை

இந்திய அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

325106.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது.

இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

325088.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

325095.jpg

இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.

325091.jpg

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

325094.jpg

இதனையடுத்து, 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 3 போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை 2-1என கைப்பற்றியது.

325102.jpg

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ராகுல் சஹர் 04 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

325101.jpg

இத் தொடரின் ஆட்டநாயகனாகவும் இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டார்.

325100.jpg

கடந்த 12 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக இருபதுக்கு - 20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

பிறந்த நாளில் ஒருவரின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியையும் வனிந்து ஹசரங்க முறியடித்துள்ளார். இதுவரை தென்னாபிரிக்க அணியின் இம்ரான் தாஹிருக்கு இது சொந்தமாக இருந்தது.

 

https://www.virakesari.lk/article/110370

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

  • கருத்துக்கள உறவுகள்

3ஆவது டி20I: சொதப்பிய இந்தியா, எளிதில் வென்ற இலங்கை அணி - முக்கிய ஹைலைட்ஸ்

29 ஜூலை 2021, 19:30 GMT
இந்திய அணி இலங்கை அணி டி20

பட மூலாதாரம்,TW20I

 
படக்குறிப்பு,

அணி கேப்டன்கள் தசுன் ஷனகா (இலங்கை), ஷிகர் தவான் (இந்தியா)

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 இன்டர்நேஷனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தலா ஒரு வெற்றி பெற்று இரண்டும் சமநிலையில் இருந்தன. இந்த நிலையில், வெற்றி அணியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வியாழக்கிழமை கொழும்பு பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து களமாடியது. ஆனால், தொடக்கம் முதலே இறங்குமுகமாக இருந்த இந்திய அணி கெய்க்வாட், அணி கேப்டன் ஷிகர் தவான் இணையில் ஐந்து ரன்கள் எடுத்தது. ஒரு ரன் கூட எடுக்காமல் தவான் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய வீரர்களின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

கொரோனா காரணமாக ஐந்து பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இந்திய அணி, 5 ஓவரில், 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 6 வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர், பேட்டிங் செய்ய களமிறங்கினார். அடுத்த சில நிமிடத்தில் நிதிஷ் ராணா (6) அவுட் ஆனார்.

பேட்ஸ்மென்களில் 8 பேர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ருத்ராய் கெய்க்வாட் 19, குல்தீப் 23, புவனேஷ்குமார் 15 ரன்களை எடுத்திருந்தனர். இப்படியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை குவித்திருந்தது. குல்தீப்பும் ஐந்து எடுத்திருந்த சக்காரியாவும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

 

இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மைதானத்தில் களமாடிய இலங்கை அணி, தொடக்கத்தில் சுமாராக ஆடினாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டது. இந்திய அணி பந்து வீச்சாளர் ராகுல் சஹார் பந்து வீச்சில் இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷிங்கா 18 வந்துகளில் 12 ரன்களுடனும் மினோத் பானுகா 27 பந்துகளில் 18 ரன்களுடனும் வெளியேறினர். சதீரா சமரவிக்ரமா 13 பந்துகளில் 6 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் சென்றார்.

ஆனால், பின்னர் நுழைந்த தனஞ்செய, ஹசரங்கா ஜோடி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய இந்த ஜோடியில் தனஞ்செய 20 பந்துகளில் 23 ரன்களையும் ஹசரங்கா 9 பந்துகளில் 14 ரன்களையும் எடுத்தனர். இந்திய வீரர் ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த போட்டியில் இலங்கை தரப்பில் சிறந்த ஆட்ட நாயகனாக ஹசரங்கா, சிறந்த பேட்ஸ்மேனாக தனஞ்செய டி சில்வாவும், இந்தியா தரப்பில் குல்தீப் யாதவும் சிறந்த பெளலராக ராகுல் சாஹரும் தேர்வாகினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 2க்கு 1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது.

சிறப்புகள் என்ன?

SRILANKA CRICKET

பட மூலாதாரம்,SRILANKA CRICKET

  • 2021 ஜூலை 29, ஆட்ட நாள்தான் இலங்கை வீரர் ஹசரங்காவின் 24ஆவது பிறந்த தினம். அதனால், ஆட்டம் தொடங்கும் முன்பிருந்தே அவருக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உற்சாகமூட்டினர்.
  • வலது கை ஸ்பின்னரான ஹசரங்கா, டி20ஐ பெளலர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
  • ஒட்டுமொத்த 20 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகளை மட்டுமே இந்திய அணி அடித்திருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,SRILANKA CRICKET

 
படக்குறிப்பு,

இலங்கை கிரிக்கெட் அணி

  • டி20 இன்டர்நேஷனல் வரலாற்றில் இந்தியாவை முதல் முறையாக இலங்கை வீழ்த்தியிருக்கிறது.
  • கொரோனா பெருந்தொற்று தடுப்பு வழிகாட்டுதல்கள் காரணமாக இந்திய வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனோ முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகியதாக அறியப்பட்ட வீரர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நெகட்டிவ் என முடிவுகள் வந்த வீரர்கள் மட்டுமே ஆடுகளத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  • டி20 இன்டர்நேஷனல் போட்டியில் இந்த அளவுக்கு மோசமாக இந்தியா ஆடியது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு இந்தியா 2008இல் ஆஸ்திரேலியாவுடன் மோதி 74 ரன்களை குவித்தது. அதன் பிறகு 2016இல் நியூசிலாந்துடன் மோதி 79 ரன்களை எடுத்திருந்தது.

https://www.bbc.com/tamil/sport-58020525

https://www.bbc.com/tamil/sport-58020525

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மத்திய கல்லூரி முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் நிலை என்ன? இலங்கை அணியில் உள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போனதே இந்தியாவின் B அணி, அதையே சமாளிக்க முடியாமல் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது இலங்கை.

T 20 யிலும் அதுதான் நடந்திருக்கும், முதல் போட்டி தோல்வி, இரண்டாவது போட்டியில் எதிர்பாராத விதமாக ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று வந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த ப்ரிதிவ் ஷா, சூர்யகுமார் யாதவ்,ஹர்திக்பாண்டியா, சஹால்,இஷான் கிஷான்,தீபக் சாஹர் என ஏறத்தாழ இந்திய பி அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே தனிமைபடுத்தப்பட்டுவிட்டதால், ஆளில்லாத கிரவுண்டில் கோல் அடிச்சுபோட்டு இலங்கை அணி பண்ணும் அலப்பறைக்கு அளவேயில்லாம போச்சு,

12 வருசத்துக்கு அப்புறம் தொடரை வெண்டு போட்டார்களாம்ல.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

இலங்கை போனதே இந்தியாவின் B அணி, அதையே சமாளிக்க முடியாமல் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது இலங்கை.

T 20 யிலும் அதுதான் நடந்திருக்கும், முதல் போட்டி தோல்வி, இரண்டாவது போட்டியில் எதிர்பாராத விதமாக ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று வந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த ப்ரிதிவ் ஷா, சூர்யகுமார் யாதவ்,ஹர்திக்பாண்டியா, சஹால்,இஷான் கிஷான்,தீபக் சாஹர் என ஏறத்தாழ இந்திய பி அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே தனிமைபடுத்தப்பட்டுவிட்டதால், ஆளில்லாத கிரவுண்டில் கோல் அடிச்சுபோட்டு இலங்கை அணி பண்ணும் அலப்பறைக்கு அளவேயில்லாம போச்சு,

12 வருசத்துக்கு அப்புறம் தொடரை வெண்டு போட்டார்களாம்ல.

சபாஸ்....இதுக்கிள்ளை இந்தியாக்காரரும் லெவெல் அடிச்சுத்தான்...உந்த நிலை...

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 18:33, valavan said:

இலங்கை போனதே இந்தியாவின் B அணி, அதையே சமாளிக்க முடியாமல் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது இலங்கை.

T 20 யிலும் அதுதான் நடந்திருக்கும், முதல் போட்டி தோல்வி, இரண்டாவது போட்டியில் எதிர்பாராத விதமாக ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று வந்ததால் அவருடன் தொடர்பில் இருந்த ப்ரிதிவ் ஷா, சூர்யகுமார் யாதவ்,ஹர்திக்பாண்டியா, சஹால்,இஷான் கிஷான்,தீபக் சாஹர் என ஏறத்தாழ இந்திய பி அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவருமே தனிமைபடுத்தப்பட்டுவிட்டதால், ஆளில்லாத கிரவுண்டில் கோல் அடிச்சுபோட்டு இலங்கை அணி பண்ணும் அலப்பறைக்கு அளவேயில்லாம போச்சு,

12 வருசத்துக்கு அப்புறம் தொடரை வெண்டு போட்டார்களாம்ல.

நீங்கள் சொல்லுவ‌து முற்றிலும் உண்மை

இப்ப‌ இருக்கும் இல‌ங்கை அணியில் ஒரு சில‌ வீர‌ர்க‌ளுக்கு  ம‌ட்டுமே திற‌மை இருக்கு அதை அவ‌ர்க‌ள் சசியா ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம்

இல‌ங்கை சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் க‌ச‌ர‌ங்கா ஜ‌பிஎல் அணியான‌ மும்பாய்க்கு விளையாட‌ போவ‌தா செய்தி வ‌ருது , க‌ச‌ர‌ங்கா தான் இப்போது உள்ள‌ இல‌ங்கை அணியின் சிற‌ந்த‌ வீர‌ர்


கொரோனா வ‌ராட்டி 20ஓவ‌ர் தொட‌ரையும் இந்தியா கைப்ப‌ற்றி இருக்கும் 

Edited by பையன்26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.