Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனுசரணைப் பணியை பிரித்தானியா யேர்மனி கூட்டாகத் தலைமை வகிக்கத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுசரணைப் பணியை பிரித்தானியா யேர்மனி கூட்டாகத் தலைமை வகிக்கத் திட்டம்

இலங்கையின் அமைதி முயற்ச்சிகளின் அனுசரணைப் பணியை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் கூட்டாக மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நோர்வே அனுசரணையாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயல்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கமும் தென்னிலங்கையின் கடும் போக்காளர்களும் கருதவதால் நோர்வேயின் ஒத்துழைப்புடன் இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை நோர்வே அனுசரணையாளர்கள் இலங்கை அமைதி முயற்ச்சிகளில் மென்போக்கை கடைப்பிடித்து வந்துள்ளமையே முறுகல் நீலை நீடிப்பிற்கு காரணம் என்று இராஜதந்திர தரப்புகள் கருதுவதாகவும் இதன் காரணாகவே நோர்வேயை ஓரம்கட்டி விட்டு முழு வீச்சுடன் அமைதி முயற்ச்சிகளை ஆரம்பிக்க இணைத்தலைமை நாடுகள் விரும்புவதாகவும் இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இணைத்தலைமை நாடுகளின் சார்பில் பிரித்தானியா அமைதி முயற்ச்சிகளை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எனினும் ஜேர்மனியும் இலங்கை அமைதி முயற்ச்சிகளில் தீவிர ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜேர்மனியும் இணைத் தலைமைகளின் சார்பில் பிரித்தானியாவும் கூட்டாக அமைதி முயற்ச்சிகளுக்கு தலைமை தாங்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை பிரித்தானிய அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ளமையால் அந்த நாட்டின் அனுசரணையை விடுதலைப் புலிகள் நிரகாரிக்கக் கூடும் என்றம் இராஜதந்திர தரப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.

அடுத்த மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய அமைதி முயற்ச்சிகளுக்கு முன்னோடியாக விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கப்படும் வாய்ப்புகள் இருப்தாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பிரித்தானிய அமைதி முயற்ச்சிகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படாது என்று மேற்குலக இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்னர்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸகர் மற்றும் பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் ஆகியோர் விரைவில் வன்னிக்கு விஜயம் செய்து அமைதி முயற்ச்சிகளின் புதிய ஏற்பாடுகள் குறித்து விடுதலைப்புலிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை ஜேர்மனியின் தூதுவர் யூஜின வீத்இ நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கருடன் இலங்கையின் அமைதி முயற்ச்சிகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நோர்வே தரப்பை ஓரம்கட்டும் விதமான மேற்குலகளின் அரசியல் அழுத்தங்களுக்கு விடுதலைப் புலிகளின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையும் என்பதில் தொடர்ந்தம் இணைத்தலைமைகள் சந்தேகம் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நோர்வே அனுசரணையாளர்களை முற்றாக அமைதி முயற்ச்சிகளில் இருந்து வெளியேற்றுவதற்கு விடுதலைப்புலிகள் விரும்பமாட்டார்கள் என்பதால் புதிய அமைதி முயற்ச்சிகள் அறிவிக்கப்படாத நிகழச்சி நிரலின் கீழ் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம் என்று அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

ஜேர்மனி பிரித்தானியா என்ன அமெரிக்கா கனடாகூட மத்தியஸ்தம் வகிக்கலாம்... அதுக்கு முதலில் இருதரப்பையும் சமனாக நடத்துகிறோம் எண்று காட்ட புலிகள் மீதான தடையை நீக்க வேணும்...!!

இல்லாட்டால் இலங்கை அரசாங்கமே பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கிறதுக்கும் இங்கிலாந்து ஜேர்மனி மத்தியஸ்தாம் வகிக்கிறதுக்கும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவர் சாந்தனைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு பிரித்தானியா மிரட்டல் விடலாம். தங்களைப் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்க விடுங்கோ இல்லாட்டில், சாந்தனைக் கடுமையாக உள்ளுக்குத் தூக்கிப ;போடுவம் என்று. மிரட்டி வைச்சுப் பணிய வைக்கலாம் என்று ப்ளான் பண்ணுகினம் போலக்கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.