Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் முளைக்கும் புத்தர்களால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் முளைக்கும் புத்தர்களால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம்

கிழக்கில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை தோற்றுவிப்பதில் ஒரு சக்தி மிக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. காலத்துக்குக் காலம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஏதோவொரு திட்டத்தைத் தீட்டி கலவரங்களைத் தோற்றுவித்து வருகின்றனர். மிகக் கூடுதலாக சமய விவகாரத்தோடு சம்பந்தப்படுத்தியே பேரினவாத சிங்கள சக்திகள் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டிப்பார்க்கின்றன.

சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இந்த அவலம் இடையிடையே தலைதூக்கவே செய்கின்றது. பௌத்த இனவாதச் சக்தியொன்று அதிலும் தீவிரப் போக்குக் கொண்ட சக்தியொன்று சிங்கள சமூகத்தை முஸ்லிம் சமூகத்துக்கெதிராகத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றது.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக என்ன தான் வஞ்சனை செய்த போதிலும் அந்தச் சமூகம் எப்போதும் தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களை ஒரு போதுமே ஓரக் கண்களால் பார்த்தது கிடையாது. தமிழ், சிங்கள சமூகங்களோடு ஒன்றிணைந்து வாழவே முயற்சிக்கின்றன.

கண்டியில் கடுகண்ணாவையில், மாவனல்லையில், களுத்துறையில், மாளிகாவத்தையில், தென்மாகாணத்தில் கிழக்கின் பல பகுதிகளில் என பரந்து பட்ட ரீதியில் கடந்த காலங்களில் பௌத்த பேரினவாதச் சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராக தொடுத்த தாக்குதல்களின் வடுக்கள் இன்று வரை மாறவே இல்லை. ஷ்ரீமாவோ அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் புத்தளம் பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகையிலீடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது. இன்னும் பேசப்படுகின்றது. அரச பாதுகாப்புத் தரப்பின் உதவியோடு தான் அதுவும் பொலிஸ் அதிகாரிகள் சிலரே அக்கோரச் சம்பவத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டிருந்தனர். இந்த அடாவடித்தனமான நீசத்தனமான செயலை முதலில் கண்டித்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் மறைந்த தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பௌத்த பேரினவாதத்தின் பிடியிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதிலும் விவகாரம் சிறிது காலத்துக்கு கிடப்பில் போடப்பட்டு மீண்டும் ,மீண்டும் தலையெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.

இன்று புதிதாக உருவெடுத்திருப்பது கிழக்கு மாகாணத்தில் தீகவாபியை அண்மித்த இறக்காமம் குடிவில் என்ற முஸ்லிம் கிராமத்திலாகும்.

கடந்த பொசன் போயா தினத்தில் இரவோடிரவாக அரங்கேற்றப்பட்ட நாடகம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிவில் முஸ்லிம் கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் பொசன் தினத்தன்று இரவு நேரத்தில் மாணிக்கமடு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரியான சமந்த பெரேரா மற்றும் சிலருடன் மோட்டார் சைக்கிளில் வந்து இரண்டு உரப்பைகளில் ஏதோ பொருட்களைக் கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றதை முஸ்லிம் விவசாயிகள் கண்டுள்ளனர்.

ஆனால், அதனை அவர்கள் பெரிதாகப் பொருட்படுத்தாமல் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மறுதினம் காலையில் அதே பொலிஸ் அதிகாரி அரசாங்க அதிபர் புதைபொருள் அதிகாரிகள் சிலருடன் அதே இடத்துக்கு வந்து பௌத்த புராதனச் சின்னங்கள் காணப்படுவதாகக் கதை கூறி முன்னிரவுகொண்டு வந்து போட்ட புத்தர் சிலைகளைக் காண்பித்துள்ளார்.

இதனையடுத்து விழிப்படைந்த முஸ்லிம் விவசாயிகள் உடனடியாக குடிவில் ஜும் ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் முறையிட்டதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகி உடனடியாக காரியத்தில் இறங்கி அமைச்சர்கள் , அதிகாரிகள் சமூக அமைப்புகளுக்கு தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக சமந்த பெரேரா என்ற அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி உடனடியாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறமாட்டாதென உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இரண்டு நாட்கள் கூடக் கடந்து விடவில்லை. அதே பொலிஸ் பொறுப்பதிகாரி சமந்த பெரேரா மீண்டும் அதே இடத்தில் பதவியேற்றுள்ளார்.

அது மட்டுமன்றி இனிமேல் தான் முஸ்லிம்களை சும்மாவிட்டு வைக்கப் போவதில்லை என அச்சுறுத்தல் வேறு விடுத்திருக்கின்றார்.

இது குறித்து இலங்கை முஸ்லிம் கவுன்சில் உடன் செயற்பட்டு முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியதோடு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. உடனடியாக ஜனாதிபதியைச் சந்தித்து இது குறித்துப் பேசவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் தகவல் தருகையில்;

சிங்கள- முஸ்லிம் உறவையும் , தமிழ்- முஸ்லிம் உறவையும் சீர்குலைப்பதற்காக தீய சக்திகள் இனவாதக் குழுக்கள் மேற்கொள்ளும் இத்தகைய மோசமான நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அமைச்சர்கள், ஹக்கீம், பௌசி, அமீர் அலி உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று கூடி கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட வேண்டிய அவசரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு முஸ்லிம் சமூகத்துக்கெதிரான இனவாதச் சக்திகளின் அடாவடித்தனங்களை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

முஸ்லிம் சமூகத்தை இவர்கள் கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அன்று புத்தளத்தில் பள்ளிவாசலில் தாக்குதல், அதேபோன்று காத்தான்குடி உட்பட கிழக்கில் பள்ளிவாசல்களில் படுகொலைகள் இவையெல்லாம் தமிழ் முஸ்லிம் உறவையும் , சிங்கள - முஸ்லிம் உறவையும் சீர்குலைத்து முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்தி அழிக்கும் தீய சக்திகளின் செயற்பாடுகளாகவே நோக்க வேண்டியுள்ளது.

கண்டியில் கடுகண்ணாவையில் புத்தளத்தில் ஆரம்பித்து தீகவாவி, காத்தான்குடி எனத் தொடர்ந்து இன்று குடிவில் வரை இது வியாபித்துள்ளது.

நாளை எந்த முஸ்லிம் கிராமமும் முஸ்லிம் சமூகமும் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றதோ தெரியவில்லை. இத்தகைய பௌத்த பேரினவாத தீவிரப் போக்குடைய பிசாசின் கழுத்தை நெரித்துக் கொல்லத் தவறினால் எதிர்காலத்தில் சிங்கள - முஸ்லிம் உறவு மிக மோசமாக விரிவடைந்து இன்றைய நெருக்கடியை விட படுமோசமான விளைவுகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும் என்பதை மட்டுமே கூறமுடியும்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் முஸ்லீம் மக்களுடைய நிலையும் கஸ்ரமாகத்தான் இருக்குது. முஸ்லீம் தலைவர்கள் ஒன்றுகூடி உடனடியாக இதற்கெதிராகப் போராட்டத்தில இறங்கவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.