Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி.- கருணா குழு மோதல் கிழக்கில் தீவிரமடையும் அறிகுறி இணையத்தளங்கள் ஊடாக இருதரப்பும் "சர்'

Featured Replies

ஈ.பி.டி.பி.- கருணா குழு மோதல் கிழக்கில் தீவிரமடையும் அறிகுறி இணையத்தளங்கள் ஊடாக இருதரப்பும் "சர்'

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கருணா பிரிவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலி களும் தத்தம் இணையத்தளங்கள் வாயிலாக, ஒன்றை ஒன்று மும்முரமாகச் சாடத் தொடங்கி யுள்ளன என்று ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சாடல் சமர் குறித்து, அது மேலும் பின்வருமாறு விவரித்துள்ளது:

இவ்விரு அமைப்புகளும் கிழக்கு மாகா ணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட் சித் தேர்தல்களில் ஈடுபடுவதற்காக தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன.

அதேவேளை, எதிரும் புதிருமான சாடல் சமர்களையும் பிரகடனப்படுத்தியுள்ளன. இவற்றுக்காக, இரு தரப்புகளும் தம் இணை யங்களை தக்கவகையில் பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றன.

ஊழல்கள், பலவந்த கப்பம் வசூலிப்பு, சிவிலியன்களுக்கு எதிரான தொல்லை கள் ஆகியவை தொடர்பாக, இவ்விருதரப்பு களும் மற்றது ஒன்றின் மீது குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகின்றன.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் கருணா பிரிவினருக்கு மிடையே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சமீபத்திய மோதல்களை அடுத்து இந்த உக்கிர "இணையப்போர்' தலைதூக்கியுள்ளது.

சமீபத்திய மோதல்களில் கருணா அணி øயச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவரின் மரணச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற் றது.

குற்றச்சாட்டுக்கள்

கருணாவுக்கு ஆதரவான மூன்று இணை யங்களிலொன்றின் வாயிலாக, கருணா பிரிவினர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான செய்தியொன்றினை விடுத்துள்ள னர்.

அதில் ""ஈ.பி.டி.பி (ஈழமக்கள் ஜனநாயக்க கட்சி) யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் "காட்டுச்சட்டத்தை' நடைமுறைப் படுத்தி யுள்ளது. அதனையே கிழக்கு மாகாணப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த அது முனைகின்றது'' என குற்றஞ் சுமத்தப் பட்டுள்ளது.

இதற்கு ஈ.பி.டி.பி. அதன் இணையத்தி னூடாக பதிலடி கொடுத்துள்ளது. அதில், ""கருணா குழுவினரை அரசியல் நீரோட் டத்தில் சங்கமமாக்க நாம் உதவியுள்ளோம். எனினும், முன்னைய புலிப்போராளி களான இவர்கள் தம் மீதான வரிகளை (கோடுகளை) நீக்கிக் கொள்ளவில்லை'' என கூறப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக குறிப்பிடுகையில், ""கிழக்கு மாகாணத்திலுள்ள ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வுள்ளன. இவை சம்பந்தமான திட்டங்கள் குறித்து, கொழும்புக் கூட்டத்தில் விவா திக்கப்படும். இதன் பொருட்டு, கட்சி உத்தி யோகஸ்தர்களை மட்டக்களப்பிலிருந்து அழைத்திருந்தேன். இதற்குப் பின்னரே இந்த முறுகல் நிலை ஆரம்பமாகியுள் ளது'' எனத் தெரிவித்தார்.

கொம்மாந்துறை மோதல்

கொம்மாந்துறை சம்பவத்தை அடுத்தே, ஈ.பி.டி.பி.யினருக்கும் கருணா குழுவின ருக்குமிடையிலான முதல் பாரிய மோதல் வெடிக்கலாயிற்று. செங்கலடியிலுள்ள கொம்மாந்துறை ஈ.பி.டி.பி.பணிமனையை கருணா பிரிவினரின் ஆயுதக் குழுவொன்று தாக்க முற்பட்டது.

இதையடுத்தே இரு சாராருக்குமிடை யிலான சமர் மூண்டது. இரு மணித்தியா லம் வரை நீடித்தது. ஈற்றில் பொலிஸா ரினதும் இராணுவத்தினதும் தலையீட் டால் இச் சமர் தக்கதருணத்தில் தவிர்க்கப் பட்டது.

இதையடுத்து வியாழக்கிழமை, ஈ.பி. டி.பியினதும், கருணாகுழுவினதும் உள்ளூர் தலைவர்கள் இராணுவ முகாமுக்கு அழைக் கப்பட்டார்கள். மேலும் வன்முறைகளில் ஈடுபடாதிருக்குமாறு இவர்கள் எச்ச ரிக்கப்பட்டார்கள்.

எது எப்படியிருப்பினும் இதற்குச் சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் மட்டக் களப்பில் ஈ.பி.டி.பி. செயற்பாடுகளுக்கு தாம் தடை விதிப்பதாகக் குறிப்பிட்டு கருணா குழு வினரால் அறிவித்தல்கள் விடுக்கப்பட் டன.

எனினும், கருணா குழுவினரின் மிரட் டலை தேவானந்தா நிராகரித்தார். அத் துடன், தமது கட்சி திட்டமிட்டபடி தேர்தல் களில் போட்டியிடும் என்றும் தெரிவித் துக் கொண்டார்.

இச்சமயத்தில், ஈ.பி.டி.பிக்கு ஆதரவான "தினமுரசு' இதழ்களை விற்பனை செய் வதற்கும் விநியோகிப்பதற்கும் கிழக்கில் கருணா குழுவினர் முட்டுக் கட்டைப் போட் டுள்ளனர் என உள்ளூர் வாசிகள் தெரிவித் துள்ளார்கள்.

இவ்வாறு ஆங்கில வார ஏடு தகவல் வெளியிட்டிருக்கிறது. (சி)

uthayan

நடக்கபடமாட்டாத தேர்தலுகாக தமக்குள் குதறுபடுதுகள் சொறி நாய்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈ.பி.டி.பி.- கருணா குழு மோதல் கிழக்கில் தீவிரமடையும் அறிகுறி இணையத்தளங்கள் ஊடாக இருதரப்பும் "சர்'

இவ்வாறு ஆங்கில வார ஏடு தகவல் வெளியிட்டிருக்கிறது. (சி)

அதென்னப்பா சர்?

பிறகு ஒரு சி?

நமக்கும் விளங்குற தமிழில எழுதினாதானே நாமும் கொஞ்சம் முன்னேறிக்கொள்ள முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கருணாகுழுவிற்கு எதிரான துண்டுப்பிரசுரங்களைவிடும் ஈ.பி.டி.பியினர்.

யாழ்ப்பாணத்தில் கருணா குழுவினருக்கெதிரான துண்டுப்பிரசுரங்களை ஈ.பி.டி.பியினர் பொதுமக்களிடம் விநியோகித்துவருகின்றனர்.

இதேவேளை கருணாகுழுவிற்கு எதிரான பிரசுரங்களை ஈ.பி.டி.பியினர் தபால் மூலமும் யாழிலுள்ள அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பிவருகின்றார்கள்.

கிழக்கில் கருணா குழுவினருக்கும் ஈ.பி.டி.பியினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்தே யாழில் ஈ.பி.டி.பியினர் கருணாகுழுவினருக்கெதிரான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

- சூரியன்

ஈ.பி.டி.பி.யும் கருணா அணியும் பகைமை தவிர்ப்பு கூட்டறிக்கை.

ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் (ஈ.பி.டி.பி.) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் (கருணா அணி) இடையில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளதாக இரு அமைப்புக்களும் இணைந்துவிடுத்துள்ள பகைமை தவிர்ப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினையடுத்து இரு அமைப்புக்களுக்கிடையேயும் பெரும் முறுகல் நிலையேற்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இருதரப்பு உயர்மட்ட கருத்து பரிமாற்றத்தின் பின்னரே சுமுக நிலைக்கான உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் பகைமை உணர்வினை மறந்து இருதரப்பும் தத்தமது வழியே செயற்படுவதென தீர்மானித்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

கப்பம், களவு, துன்புறுத்தல்கள் கிழக்கில் அதிகரிப்பதாக முறைப்பாடு கருணா ஈ.பி.டி.பி. மோதல் விரிவடைகிறது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (கருணா குழு) அமைப்பின் உறுப்பினர் கள் என சந்தேகிக்கப்படுபவர்களால் துன்புறுத்தல்களுக்கும் கப்பம் அறவிடுதலுக்கும் தாம் உள்ளாகி வருவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

அதே சமயம் கருணா குழுவிற்கும் ஈ.பி.டி.பி. பிரிவினருக்குமிடையிலான விரிசல் மேலும் தீவிரமடைந்து வருவதாகவும் கண்காணிப்புக் குழுவின் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் போராளி கனி என்றழைக் கப்படும் அரியதாஸ் ரமேஷின் பிரதே ஊர்வலத்தின்போது ""ஈ.பி.டி.பியினர் தேசத் துரோகிகள்'' என்று எழுதப்பட்ட பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டதை அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. மேற்படி இரு குழுக்களுக்கமிடையில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலின் போது அரியதாஸ் ரமேஷ் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகின்றது.

பிரேத ஊர்வலத்தில் முச்சக்கர வண்டிகளையும் ஆயுதம் தரித்த கருணா குழுப் போராளிகளின் அணிவகுப்பையும் பாடசாலை மாணவர்கள் வீதிகளில் வரிசையாக நிற்பதையும் காணமுடிந்தது. இந்தக் காட்சிகளின் புகைப் படங்கள் கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு மின் அஞ்சல் செய்யப்பட்டிருந்தன.

ஈ.பி.டி.பியின் சந்தேகம்

இதேவேளை, தங்களது செங்கலடி அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து கருணா குழுவினர் ஜனநாயகத்தைத் தழுவிக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொள்வதில் உண்மை இருக்கிறதா என்ற வகையில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள மிகப் பிந்திய அறிக்கை ஒன்றில் மட்டக்களப்பு பகுதியில் களவுகள் அதிகரித்திருப்பது தெரியவந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

கருணா குழுவினர் என்று சந்தேகிக் கப்படுபவர்களாளேயே துன்புறுத்தல்களும் கப்பம் அறவிடுதலும் மேற்கொள் ளப்படுவதாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கிடைத்துள்ள பெரும்பாலான முறைபாடுகள் தெரிவிப்பதாகவும் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

திருமலையில் பிள்ளையான் குழுநடமாட்டம்

கருணா குழுவிலிருந்து பிரிந்து சென்றுள்ள பிள்ளையான் குழுவினரின் உறுப்பினர்கள் தற்பொழுது திருமலைப் பகுதியில் அதிகம் வெளிப்படையாக நடமாடுகிறார்கள் என பொதுமக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள மின் அஞ்சல் செய்தியொன்றில், கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்டுவரும் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளது.

படைத்தரப்புக்குப் பாராட்டு

கிழக்கில் நடத்தப்படவிருக்கும் தேர்தல்களின் மூலம் மட்டுமே அங்கு ஜனநாயகத்தை மீளவும் மலரச் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவ் இயக்கம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தமைக்காக ஆயுதப் படைகளைப் பாராட்டியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா விலகியதால் அவர்களால் கிழக்கில் தமது கட்டுப்பாட்டை பேண முடியாமல் போய்விட்டது என்றும் வன் னித் தலைமைக்கு கிழக்குப் பிரதேசம் பற்றிய விவரங்கள் தெரியாதமையால் தொடர்ந்தும் கட்டுப்பாட்டைப் பேணிக்கொள்ள முடியாமலிருக்கிறார்கள் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.