Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில நேரங்களில் சில மனிதர்கள்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கதையைக் கேட்டியேடி 
கமலா மாமி 
கந்தையற்ற பொடியன் 
கணக்கில பெயிலாம் 

பொன்னையா வாத்தியின் 
கடைசிப் பொட்டை 
பொடியனைப் பிடிச்செண்டு 
ஓடிற்றாளாம்

யாருக்குத் தெரியும் 
இவ்வளவு காசு 
எப்படி வந்ததெண்று 
இந்தப் பெரிய வீடு கட்டுகினம்

மல்லிகா டீச்சரின் மகள் 
இத்தினை வயசாப் போச்சு 
இன்னும் இருக்கிற கட்டாமல் 
ஏழிலை செவ்வாயாம்

என்னமோ நடக்குது 
ஒன்றும் சொல்லுகினம் இல்லை 
கன பேர் வந்து போகினம் 

அவளுக்கு வாய் கூட 
விட்டிட்டு இருக்கிறாளாம் 
வெளியில தெரியாமல்

ஏதோ பெரிசா கதைக்கினம் 
எப்ப வந்தது 
இவைக்கு எல்லாம் 
இவை எந்த ஊர்
எந்தப் பேர் வழி என்று 
எங்க போய் விழுந்தவை 
எங்களுக்கு தெரியாதா 

அடுத்த வீட்டு 
அம்பிகா அக்காவின் பிள்ளை 
ஆட்ஸ்சாம் ஏதோ அரசியல் 
படிக்கப் போறாவாம் 
என்ர மகள் மருத்துவம் 
படிக்கப் போறாள் 

அடுத்த வீட்டுக்காரன் 
கதை என்றால் 
அலுவா தின்னும் 
உருசி போல 
எம்மவர் பலருக்கு
 
ஏனோ தெரியவில்லை
அவர்கள் 
அப்படித் தான்
இவர்கள் 
இப்படித் தான்
என்பார்கள்

ஆனால் தங்கள் 
பிழைகளை மறைத்து 
புத்தர் போல 
போதனை செய்வார்கள்

இன்னும் சிலர் 
இருக்கிறார்கள் 
தம்மை மட்டும் 
அறிவாளிகள் போல் 
காட்டிக் கொள்வார்கள் 

என்ன இவருக்கு 
தெரியும் என்று
தன்னை பெரியார் போல 
பேசிக்கொள்வார்கள்

இதை விடக் கொடுமை 
ஒரே வயிற்றில் கிடந்த 
உறவுகள் நடத்தும் 
பாகப்பிரிவினை 

அதை விடக் கொடுமை 
அண்ணன் தம்பி 
அக்கா தங்கை 
ஆளுக்கு ஆள் திட்டித் தீர்த்து 
அவர் ஒரு கதை 
இவர் ஒரு கதையாய் 
எதுகுமே புரியாத கதையாய்
வன்மமும் வக்கிரமாய் 

மாற்றம் இல்லாமல் 
மனிதன் வாழ்ந்தால் 
அவன் வாழும் வாழ்வில் 
அர்த்தம் ஏது.

பா.உதயன் ✍️

காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும்
-எழுத்தாளர் ஜெயகாந்தன் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, uthayakumar said:

ஆனால் தங்கள் 

பிழைகளை மறைத்து 
புத்தர் போல 
போதனை செய்வார்கள்

இன்னும் சிலர் 
இருக்கிறார்கள் 
தம்மை மட்டும் 
அறிவாளிகள் போல் 
காட்டிக் கொள்வார்கள் 

உதயகுமார், தங்களது குறைகளை மறைப்பதற்காக…

அடுத்தவரை பற்றி இகழ்ந்து கதைப்பது இதன் பின்னால் உள்ள சூட்சுமம் என்பது உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2021 at 19:10, uthayakumar said:

 

கதையைக் கேட்டியேடி 
கமலா மாமி 
கந்தையற்ற பொடியன் 
கணக்கில பெயிலாம் 

பொன்னையா வாத்தியின் 
கடைசிப் பொட்டை 
பொடியனைப் பிடிச்செண்டு 
ஓடிற்றாளாம்

யாருக்குத் தெரியும் 
இவ்வளவு காசு 
எப்படி வந்ததெண்று 
இந்தப் பெரிய வீடு கட்டுகினம்

மல்லிகா டீச்சரின் மகள் 
இத்தினை வயசாப் போச்சு 
இன்னும் இருக்கிற கட்டாமல் 
ஏழிலை செவ்வாயாம்

என்னமோ நடக்குது 
ஒன்றும் சொல்லுகினம் இல்லை 
கன பேர் வந்து போகினம் 

அவளுக்கு வாய் கூட 
விட்டிட்டு இருக்கிறாளாம் 
வெளியில தெரியாமல்

ஏதோ பெரிசா கதைக்கினம் 
எப்ப வந்தது 
இவைக்கு எல்லாம் 
இவை எந்த ஊர்
எந்தப் பேர் வழி என்று 
எங்க போய் விழுந்தவை 
எங்களுக்கு தெரியாதா 

அடுத்த வீட்டு 
அம்பிகா அக்காவின் பிள்ளை 
ஆட்ஸ்சாம் ஏதோ அரசியல் 
படிக்கப் போறாவாம் 
என்ர மகள் மருத்துவம் 
படிக்கப் போறாள் 

அடுத்த வீட்டுக்காரன் 
கதை என்றால் 
அலுவா தின்னும் 
உருசி போல 
எம்மவர் பலருக்கு
 
ஏனோ தெரியவில்லை
அவர்கள் 
அப்படித் தான்
இவர்கள் 
இப்படித் தான்
என்பார்கள்

ஆனால் தங்கள் 
பிழைகளை மறைத்து 
புத்தர் போல 
போதனை செய்வார்கள்

இன்னும் சிலர் 
இருக்கிறார்கள் 
தம்மை மட்டும் 
அறிவாளிகள் போல் 
காட்டிக் கொள்வார்கள் 

என்ன இவருக்கு 
தெரியும் என்று
தன்னை பெரியார் போல 
பேசிக்கொள்வார்கள்

இதை விடக் கொடுமை 
ஒரே வயிற்றில் கிடந்த 
உறவுகள் நடத்தும் 
பாகப்பிரிவினை 

அதை விடக் கொடுமை 
அண்ணன் தம்பி 
அக்கா தங்கை 
ஆளுக்கு ஆள் திட்டித் தீர்த்து 
அவர் ஒரு கதை 
இவர் ஒரு கதையாய் 
எதுகுமே புரியாத கதையாய்
வன்மமும் வக்கிரமாய் 

மாற்றம் இல்லாமல் 
மனிதன் வாழ்ந்தால் 
அவன் வாழும் வாழ்வில் 
அர்த்தம் ஏது.

பா.உதயன் ✍️

காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும்
-எழுத்தாளர் ஜெயகாந்தன் 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2021 at 16:09, தமிழ் சிறி said:

உதயகுமார், தங்களது குறைகளை மறைப்பதற்காக…

அடுத்தவரை பற்றி இகழ்ந்து கதைப்பது இதன் பின்னால் உள்ள சூட்சுமம் என்பது உண்மை.

 

On 28/8/2021 at 14:54, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..💐

தமிழ் சிறி,புரட்சிகர தமிழ் தேசிகன் தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2021 at 23:40, uthayakumar said:

மாற்றம் இல்லாமல் 
மனிதன் வாழ்ந்தால் 
அவன் வாழும் வாழ்வில் 
அர்த்தம் ஏது.

“காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்” என்பதை நாங்கள் எங்களுக்கு என வரும் பொழுது ஒருவிதமாகவும் இன்னொருவருக்கு எனும் பொழுது அந்த மாற்றங்களை வேறுவிதமாகவும் தான் கடைப்பிடிக்கிறோம்.. அதனால்தான் பெரும்பாலும் இப்படியான மனிதர்களின் சகவாசமே வேண்டாம் என நினைப்பதுண்டு.. 

  • கருத்துக்கள உறவுகள்

பலதும் பத்தும் சேர்ந்ததுதான் ஒரு சமூகம்.......இன்றுபோல் அன்று தொலைக்காட்சி சாதனங்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் குறைவு......இப்படி விடுப்பு கதைப்பது உளவியலாக அவர்களுக்கு ஒரு மன ஆறுதல்..... அதுவே இன்று உருமாறி பேஸ்புக்கிலும் வாட்ஸ்சப்பிலும் பூரணமாக வளம் வந்து கொண்டிருக்கு......ஆனால் அன்று அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் அயலட்டைகள் எல்லாம் ஒன்று கூடி துணை நிற்பார்கள்........அந்த நிலைமை இன்று அருகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.......! 

நல்ல கவிதை உதயகுமார் பாராட்டுக்கள்......!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 15:53, பிரபா சிதம்பரநாதன் said:

காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும்” என்பதை நாங்கள் எங்களுக்கு என வரும் பொழுது ஒருவிதமாகவும் இன்னொருவருக்கு எனும் பொழுது அந்த மாற்றங்களை வேறுவிதமாகவும் தான் கடைப்பிடிக்கிறோம்.. அதனால்தான் பெரும்பாலும் இப்படியான மனிதர்களின் சகவாசமே வேண்டாம் என நினைப்பதுண்டு.. 

 

On 6/9/2021 at 21:00, suvy said:

பலதும் பத்தும் சேர்ந்ததுதான் ஒரு சமூகம்.......இன்றுபோல் அன்று தொலைக்காட்சி சாதனங்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் குறைவு......இப்படி விடுப்பு கதைப்பது உளவியலாக அவர்களுக்கு ஒரு மன ஆறுதல்..... அதுவே இன்று உருமாறி பேஸ்புக்கிலும் வாட்ஸ்சப்பிலும் பூரணமாக வளம் வந்து கொண்டிருக்கு......ஆனால் அன்று அங்கு ஒரு குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் அயலட்டைகள் எல்லாம் ஒன்று கூடி துணை நிற்பார்கள்........அந்த நிலைமை இன்று அருகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.......! 

நல்ல கவிதை உதயகுமார் பாராட்டுக்கள்......!  

தங்கள் சுய நலன் கருதியும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப சிலர் மாறுவார்கள் இவர்களை எனக்கும்பிடிப்பதில்லை.கருத்துக்கு நன்றிகள் ஐயா.

 

பலதும் பத்தும் சேர்ந்தது தான் சமூகம் சுவே நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதும்.இருவரின்கருத்துக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.